December

December

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க இலங்கை கலைஞர்கள் சங்கம் தீர்மானம்

arti.jpgஜனாதி பதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது முழுமையான ஆதரவினை பெற்றுக் கொடுக்கவிருப்பதாக இலங்கை கலைஞர்கள் சங்கம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

தகவல் ஊடக அமைச்சில் நேற்றுக் காலை ஒலி ஒளி நிபுணத்துவ கலந்துரையாடல் எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கப் போவதாக கலைஞர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.

திரைப்படத் தயாரிப்பாளர்களான சுமித்ரா பீரிஸ், டக்ளஸ் சிறிவர்தன, ரோஹன வீரசிங்க, சோமரத்ன திசாநாயக்க நடிகர்களான மாலினி பொன்சேகா, ரவீந்திர ரன்தெனிய, ஜெக்சன் அந்தனி, பாடகி நீலா விக்கிரமசிங்க அறிவிப்பாளர் ரேனுக்கா பாலசூரிய ஆகியோர் ஏனைய கலைஞர்கள் சார்பில் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டிலுள்ள கலைஞர்கள் நாட்டை மிகவும் நேசிப்பவர்கள். பொதுமக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். தேசத்தின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கு சிறந்த தலைவர் ஒருவரை தெரிவு செய்ய பொதுமக்களை வழிகாட்ட வேண்டியது எமது கடமையாகுமென நடிகர் ரவீந்திர ரன்தெனிய தெரிவித்தார். மேலும், திரையுலகில் எனக்கு 40 வருட அனுபவம் உண்டு.

அரசியலிலும் சிறிது உண்டு. கடந்த 30 வருட காலமாக இருந்து வந்த மரண பயம் இப்போது இல்லையென்றால் அதற்குக் காரணம் எமது ஜனாதிபதி தான். ஏன் அவரே தொடர்ந்து நாட்டை ஆட்ச செய்யக் கூடாது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

சோமரத்ன திசாநாயக்க கூறுகையில், சிலர் நாம் ஜனாதிபதியை பந்தம் பிடிப்பதாக கூறுகின்றனர். நாம் போதைப் பொருளை நாட்டுக்குள் கடத்துவதற்காகவோ குற்றச் செயல்களை புரிவதற்காகவோ பந்தம் பிடிக்கவில்லை.

எமது பரம்பரைக்கு நாட்டு மக்களுக்கு அவர்களது எதிர்காலத்தை சரியானதாக தெரிவு செய்து கொள்வதற்காகவே நமது இந்தச் செயற்பாடுகள் அமைந்துள்ளதால் அதையிட்டு நாம் பெருமையடைகிறோம் என்றார்.

யுத்தம் முடிவடைந்து ஆறு மாதங்களே ஆகின்றது. இன்னும் சற்று பொறுமையாக விருப்போம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை தொடர்ந்து நல்வழியில் இட்டுச் செல்வாரென்ற நம்பிக்கையுண்டு. அவருக்கு ஆட்சி செய்வதற்காக மேலும் ஒரு அவகாசத்தை வழங்கிப் பார்ப்போமென மாலினி பொன்சேகா தெரிவித்தார்.

மன்னார் கடலில் எண்ணெய் வளத்தை ஆராய்கிறது இந்திய நிறுவனம்

மன்னார் கடற்படுக்கையில் மசகு எண்ணெய் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. கெய்ன் இந்தியாவிற்குச் சொந்தமான கெய்ன் லங்கா நிறுவனமானது 100 மில்லியன் டொலர் செலவிலான மதிப்பீட்டுப்பணியை ஆரம்பித்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.மார்ச் மாதமளவில் முப்பரிமாண விபரத்திரட்டல் பணியை பூர்த்தி செய்வது தொடர்பாக எதிர்பார்த்திருப்பதாக பிரிட்டனின் கெய்ன் எனேர்ஜி பி.எல்.சி.யின் பிரிவான கெய்ன் இந்தியா தெரிவித்திருக்கிறது.

அதேசமயம் 2011 இன் முதலாவது காலாண்டு பகுதியில் முதலாவது அகழ்வுப் பணியை ஆரம்பிக்கப் போவதாகவும் அந்த அமைப்புக் கூறியுள்ளது. மன்னார் கடற்படுக்கையில் 100 கோடி பரல்களுக்கு மேற்பட்ட எண்ணெய் வளம் இருப்பதை முன்னைய நிலநடுக்க ஆய்வு விபரம் மூலம் கண்டறியப்பட்டதாக இலங்கை கூறியுள்ளது. ஆயினும், எண்ணெய் வளம் தொடர்பாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. “மன்னார் கடற்படுக்கையில் ஆய்வின் போது வெற்றி கிட்டும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. ஆயினும், பணிகள் இடம்பெறுகின்றன. ஆய்வறிக்கைகளில் நாம் உற்சாகமடைந்துள்ளோம்%27 என்று கெய்ன் லங்காவின் பணிப்பாளர் இந்திரஜித் பானர்ஜி கூறியுள்ளார்.

தலா 3 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட 8 துண்டுகளில் ஒன்றை இலங்கை கெய்னுக்கு வழங்கியுள்ளது. 2007 இல் இந்தியாவுக்கு ஒரு துண்டும் சீனாவுக்கு ஒரு துண்டும் வழங்கப்பட்டன. ஆயினும் இந்த இரு நாடுகளுமே இதுவரை சாதகமான முறையில் பதில் அளிக்கவில்லை. எண்ணெய் இருப்பதை முதலில் கெய்ன் கண்டறிவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி நிருபர்களுக்கு கூறியுள்ளார்.எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளுக்கான கேள்விமனுக் கோரல் தொடர்பாக நாம் பரிசீலித்து வருகிறோம் என்றும் அமைச்சர் பௌசி கூறியுள்ளார். எண்ணெய் வளம் இருப்பது நிரூபிக்கப்பட்டால் இலங்கைக்கு அது மிகவும் நன்மையான விடயமாகும். 2008 இல் 3.4 பில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருளை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவில் புதிய தெலுங்கானா மாநிலம் உருவாகிறது!

india_map_telangana.gifஆந்திர மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. பல நாட்கள் தொடர்ந்த வன்செயல் மிகுந்த போராட்டங்களை அடுத்து தெலுங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆந்திரபிரதேசத்தின் 10 வடமாவட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்படவுள்ள இந்த மாநிலத்தில் மூன்றரைக் கோடி மக்கள் இருப்பார்கள். இந்த முடிவு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கு ஆதரவானவர்கள் பட்டாசுக்களை வெடித்து,  தலைநகர் ஹைதராபாத்தில் நடனமாடிக் கொண்டாடினார்கள். அதேவேளை, புதிய மாநிலம் ஏற்படுத்தப்படுவதை கண்டித்து ஆந்திர மாநிலத்தின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். 

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அரசு ரூ. 3011 மில்லியன் ஒதுக்கீடு – 3885 அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு

கிழக்கின் உதயம் 180 நாள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கென 3011 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன் இதுவரை 1797 மில்லியன் ரூபா செலவில் 3885 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 1113 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதுடன் 675 மில்லியன் ரூபா செலவில் 1215 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 300 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது-

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 923 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 566 மில்லியன் ரூபா செலவில் 1373 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 160 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கென 974 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 556 மில்லியன் ரூபா செலவில் 1294 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 119 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தா

ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா அமைப்பை உருவாக்க உதவுங்கள் – அலவி, அஸ்வரிடம் உலமாக்கள் கோரிக்கை

macca.jpgஸ்ரீலங்கா ஜம்இய்யத் துல் உலமா என்ற புது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி பக்கச் சார்பற்ற முறையில் அதனை இயங்க வைக்க உதவிகள் செய்ய வேண்டுமென ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதி ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரை நேற்றுக் காலை கொழும்பில் சந்தித்த உலமாக்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடுநிலையான அமைப்பு. அரசியல் கட்சிக்கோ அல்லது ஒரு வேட்பாளருக்கோ இந்தமைப்பு அதன் சரித்திரத்திலேயே ஆதரவளித்தது கிடையாது.

உலமா சபைக்கு ஒரு கட்டடம் வேண்டு மென்ற வேண்டுகோளு க்கமைய கொழும்பில் பெறுமதிமிக்க காணித் துண்டை பெற்றுக் கொடு த்து அதில் நிர்வாகக் கட்டடம் அமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் மறக்காது என்றும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தலைமைகள் விடும் தவறுகளுக்காக முழு உலமா சமுதாயமும் பொறுப்பாகாது. நிதான மாக சிந்தித்து நடுநிலை வகித்து முஸ்லிம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஏராளமான உலமாக்கள் இந்நாட்டில் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினர்.

வோக்கரில் நடைபழகிய பாலகன் நீரில் மூழ்கி பலி

வெள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத பாலகனை பலியெடுத்த சம்பவம் கல்முனையில் நேற்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த சம்பவம் இடம்பெற்ற கல்முனை – 3 மாதவன் வீதியில் உள்ள வீடும் வெள்ள நீரில் அமிழ்ந்துள்ளது.

வீட்டுக்குள் வோக்கரில் நடைபழகி விளையாடிக் கொண்டிருந்த பாலகன் படிக்கட்டிலிருந்து தவறுதலாக நீருக்குள் விழுந்ததனால் மூச்சுத் திணறியுள்ளது. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறுவனை செயற்கை சுவாசம் வழங்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதிலும் இடைநடுவில் அந்த பாலகனின் உயிர் பிரிந்தது.

எதிர்வரும் தேர்தலில் ராதிகா சிற்சபேசன் புதிய ஜனநாயகக் கட்சியின்(NDP) சார்பில் Scarborough- Rouge River தொகுதி வேட்பாளர்: முரளி

rathika.jpgகடந்த வாரம் 5ம்தேதி புதிய ஜனநாயகக்கட்சியின்(NDP) சார்பில் Scarborough- Rouge River (ஒட்டாவா மத்திய அரசின்) நாடாளுமன்றத் தொகுதிக்காக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக செல்வி ராதிகா சிற்சபேசன் அக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

05.12.2009 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு Loblaws (Community Room), Scarborough Town Centre, 1775 Brimley இல் புதிய ஜனநாயகக் கட்சியின்(NDP) Scarborough / Rouge River Riding Association அங்கத்தவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் எதிர்வரும் தேர்தலில் Scarborough- Rouge River தொகுதியில் போட்டியிடுவதற்கான புதிய வேட்பாளரை நியமனம் செய்வதற்கான வேட்பாளர் நியமனக் கூட்டமாகவே NDP கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரது நியமனம் முன்மொழியப் பட்டபோது Scarborough / Rouge River Riding Association நியமனக் கூட்டத்திற்கு வந்திருந்த அங்கத்தவர்கள் அனைவரும் ஏகமனதாக ஆதரவளித்தனர். இறுதியில் சபையோரால் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்ட அத்தீர்மானம் வழிமொழியப்பட்டு நிறைவேறியது.

மேற்படி இந்நியமனக் கூட்டத்திற்கு எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான திரு ராம் சிவதாசன் தலைமை தாங்கியிருந்தார்.

மற்றும் மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow (Trinity-Spadina), மாகாண அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Michael Prue (Beaches-East York) ஆகியோரும் இக்கூட்டத்திற்கு சமூகமளித்து ராதிகாவுக்கான ஆதரவு உரைகளை வழங்கியிருந்தனர். விரைவில் கனடிய நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாகப் பேசப்படுகின்றது. அவ்வாறான வேளையில் இளம் தலைமுறையைச் சேர்ந்த துடிப்பான தமிழ் பெண்மணி ஒருவர் தேர்தல் அரசியலுக்குத் தன்னைத் தயார்படுத்துகிறார். பெருமளவு தமிழர்கள் வாழும் இத்தொகுதியில் அடுத்துவரும் தேர்தல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கலாம்.

பொன்சேகாவின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூற்று நகைப்புக்குரியது – அமைச்சர் மைத்திரிபால தெரிவிப்பு

msri-sens.jpgதாம் பதவிக்கு வந்தால் அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பு வழிங்குவதாக ஓய்வுபெற்ற சரத் பொன்சேகா தெரிவித்திருப்பது நகைப்புக்குரிய ஒரு விடயமாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மைத்திர்பால சிறிசேன தெரிவித்ததார். மஹாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி ஆகியவற்றின் தேவைக்காகவல்ல அவருக்குப் பின்னால் இயங்கும் மற்றுமொரு சக்தியின் அழுத்தத்துக்காகவே.

சரத்பொன்சேகா கட்சி பேதம் அற்றவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஜே.வீ.பி கூட்டத்துக்கு வராத அவர்  ஐ.தே.க கூட்டத்துக்கு யானைச் சின்னத்துடன் வந்தார். இன்னும் இரண்டு வாரங்களில் ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி கட்சிகள் மத்தியில் பிளவு ஏற்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்

பரீட்சை எழுத பன்றிக் காய்ச்சல் தடையில்லை – கல்வி அமைச்சு தகவல்

stu.jpgபன்றிக் காயச்சலால் பீடிக்கப்பட்ட மாணவர்களுக்கு இம்முறை க.பொ.த. பரீட்சை எழுதத் தடை விதிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உன்மையும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. பரீட்சைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சை எழுத அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் கூறுகிறது.

இவ்வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 22 ஆம்திகதி வரை நடைபெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இம்மாதம் 31 ஆம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

சரத் பொன்சேகா இன்று கட்டுப்பணம் செலுத்தினார்

sarath-pon.jpgஎதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.  இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.