2010

2010

செட்டிக்குளம் ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியுள்ள மக்களை இடமாற்ற நடவடிக்கை.

வவுனியா செட்டிக்குளம் ‘மெனிக்பாம்’ முகாமில் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி முகாம்களுக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மெனிக்பாம் முகாமில் இன்னும் அறுநூறு குடும்பங்கள் மட்டும் உள்ளதாகவும், இவர்கள் தற்போது வசிக்கும் குடில்கள் பழுதடைந்துள்ளதாகவும் மழைகாலத்தில் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமலிருக்க கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி ஆகிய முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. எச்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இவ்விரு முகாம்களிலுள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், மூவாயிரம் விடுகள் வெறுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விரண்டு முகாம்களிலும் குறித்த மக்கள் மாற்றப்படுகின்ற போது, அவர்களின் பராமரிப்பினை சுலபமாக மேற்கொள்ள முடியும் எனவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக் கூட்டம் முன்று உறுப்பினர்களுடன் நடைபெற்றமை சட்ட விதிமுறையின்படி சரியானதாம்.

வவுனியா நகரசபைக் கூட்டம் கடந்த சனிக்கழமை முன்று உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் இவ்வாறு நடைபெறுவதற்கு சட்ட விதிமுறையில் இடமுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையுடன் உள்ள வவுனியா நகரசபையின் கூட்டங்களில் எட்டு உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த யூலை மாதத்திற்குப் பின்னர் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் நகரசபைத் தலைவருக்கு பல உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் முன்பு உறுப்பினர்கள் முன்வைத்த 29 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இது வரை மேற்கொள்ளப் படவில்லை. இதன்காரணமாக கூட்டமைப்பு, புளொட், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் மாதாந்த கூட்டங்களைப் புறக்கணித்தனர். இதனையடுத்து கூடாமலிருந்து மாந்த கூட்டம் நேற்று முன்தினம் மூன்று உறுப்பினர்களுடன் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு துரித கற்றல் செயல்திட்டம்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக கல்வி வாய்ப்புக்களை இழந்த மாணவர்களுக்கு துரித கற்றல் செயல்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், வடக்கு, கிழக்கு மாகாண கல்வித்திணைக்களங்கள், என்பன இணைந்து ‘யுனிசெவ்’ நிறுவனத்தின் அனுசரணையில் இச்செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.

இதில் தரம் 3முதல், தரம் 9 வரையுள்ள மாணவர்கள் பயன் பெறவுள்ளனர். தமிழ், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களும், தரம் 6 தொடக்கம் 9 வரையிலான மாணவர்களுக்கு விஞ்ஞான பாடமும் துரிதகற்றலாக கற்பிக்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து இச்செயல்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வலி.வடக்கு மீள்குடியேற்றம் நடைபெறவில்லை.

வலிகாமம் வடக்கில் இன்று திங்கள் கிழமை நடைபெறுவதாகவிருந்த மீள்குடியேற்றம் நடபெறவில்லை. அது எப்போது நடைபெறும் என்பது குறித்தும் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

வலிகாமம் வடக்கில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் இன்று மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இம்மீள்குடியேற்றம் தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என யாழ்.அரசஅதிபர் திருமதி. இமெல்டாசுகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனா சென்றிருப்பதால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ். வருகைதர முடியவில்லை எனவும், அதனாலேயே மீள்குடியேற்ற நிகழ்வு இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு கணணி வழங்கும் திட்டம் ஆரம்பம். – லிற்றில் எய்ட்

Computer_Project_Bannerகல்முணை மற்றும் திருகோணமலையில் மாணவ மாணவிகளுக்கு கணணிப் பயிற்சிகளை வழங்கி வரும் ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ அமைப்பிற்கு 7 கணணிகள் ஒக்ரோபர் 30 2010ல் கையளிக்கப்பட்டது. லிற்றில் எயட் சிந்தனை வட்டம் சார்பில் பிஎம் புன்னியாமீன் கணணிகளை ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ முகாமையாளர் நவஜீவனிடம் கையளித்தார்.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கேசரித்த பயன்படுத்தப்பட்ட கணணிகளை லிற்றில் இலங்கைக்கு அனுப்பி சிந்தனைவட்டம் பி எம் புன்னியாமீன் ஒருங்கிணைப்பில் திருத்த வேலைகளையும் மேற்கொண்டது. இவற்றுக்கான செலவுகளை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NavaJeevan_N_and_Puniyameen_PMஇந்நிகழ்வின் மூலம் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களுக்கு கணணிகள் வழங்கும் ஒரு நீண்ட திட்டத்தை லிற்றில் எய்ட் ஆரம்பித்து வைத்துள்ளது. இத்திட்டம் முதலில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அகிலன் பவுண்டேசன் கற்பகவிநாயகர் ஆலயம் என்பனவற்றினால் நடாத்தப்படுகின்ற இல்லங்களில் உள்ள 1000 வரையான மாணவர்களுக்கு கணணி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கின்றது.

இரண்டாவது தொகுதி கணணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. லண்டனில் தங்கள் பயன்படுத்தப்பட்ட கணணிகளை வழங்க விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் தொடர்புகொண்டால் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய முடியும். கணணியின் அவசியமும் இணையத்தின் தேவையும் இன்றியமையாததாகிவிட்ட உலகில் இலங்கை குறிப்பாக வடக்கு கிழக்கு இவற்றுக்கு வெகு தொலைவிலேயே உள்ளது.

Computer_Project_30Oct10இதனை செல்வி எம் ஐ எப் நபீலாவின் ஆய்வில் இருந்தே மேற்கோள் காட்ட முடியும். ”உலக அளவில் 28.7 வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதே நேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே இணையப் பாவனையே காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட வெகுவாகக் குறைந்திருக்கலாம் ” என சப்பிரமூவா பல்கலைக்கழக மாணவி நபிலாவின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் ”செப்டம்பர் 2010இல் இலங்கையின் வட பகுதிக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் புரோட் பேண்ட் இணைய இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்பகுதிகளிலும் இணையப்பாவனை அதிகரிக்கப்படலாம் எனக் கருத இடமுண்டு” என்பதனையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அவ்வாறான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில் ”வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு கணணியையும் இணையத்தையும் அறிமுகப்படுத்துவது மற்றுமொரு உலகுடன் அவர்களை இணைக்கும்” என்கிறார் இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிவரும் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயற்குழுத் தலைவர் சொ கருணைலிங்கம். ”மக்கள் சேவையே அம்பாள் சேவை” எனக் குறிப்பிடும் சொ கருணைலிங்கம் ”எழுத்தறிவிப்பவன் இறைவன்” என்றும் ”இவ்வாறான சேவைகளை ஏனைய ஆலயங்களும் செய்து வருகின்றன. அவர்கள் இன்னமும் செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

Related Article:

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!

இதுவரை மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள்:

வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு கணணி வழங்கும் திட்டம் ஆரம்பம். – லிற்றில் எய்ட்

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
 
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
 
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
 
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
 
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
 
சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.
 
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
 
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!
 
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்
 
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
 
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
 
மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்
 
டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்
 
லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்
 
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (1)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் முக்கியமானது. எண்பதுக்களில் மிகப் பெருந்தொகை உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக ஆரம்ப காலங்களில் விளங்கியது. ஆனால் இந்த அமைப்பினுள் ஏற்பட்ட உட்பூசல்கள் மற்றும் காரணங்களால் மிகப்பெரும் தொகையானவர்களைக் கொண்டிருந்த இவ்வமைப்பு மிக விரைவிலேயே அதன் கட்டமைப்புகள் குலைந்து பலவீனமான நிலைக்குச் சென்றது.

தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகளில் போராட்டத்திலும் பார்க்க உட்படுகொலைகளில் தங்கள் கூடுதல் உறுப்பினர்களை இழந்த அமைப்பும் புளொட் அமைப்பே. அதன் தலைவரும் உட்படுகொலையிலேயே உயிரிழக்க வேண்டி இருந்தது.

தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் பெரும்தொகையான தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்கள் தாங்கள் அங்கம் வகித்த அமைப்பின் வரலாற்றை பதிவுசெய்ய முற்படுகின்றனர். ஏனைய விடுதலை இயக்கங்களிலும் பார்க்க தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அரசியல் விவாதத் தளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதால் தேசம்நெற் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கடந்த கால செயற்பாடுகள் பற்றிய பதிவுக்கும் மீளாய்வுக்குமான தளமாக ஆகி உள்ளது.

இது விமர்சனத்திற்கான களம் என்பதிலும் பார்க்க உண்மையை அறிவதற்கான தகவல் பரிமாற்றத்திற்கான களமாக ஆகி உள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மனியில் இடம்பெற்ற மாநாட்டின் ஊடக அறிக்கையைத் தொடர்ந்து வந்த இந்தப் பதிவுகளை தற்போது தனிப்பதிவாக்கி உள்ளோம்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (2)
http://thesamnet.co.uk/?p=23385

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் : ஊடக அறிக்கை

PLOTE_Bannerதமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு ஜப்பசி மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்றது. இந்த மகாநாட்டில் சுவிஸ், ஜேர்மன், இங்கிலாந்து, பிரான்ஸ்,நோர்வே, கனடா நாடுகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்த தலைவர் சித்தார்த்தன் அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில், நீண்டகால இனப்பிரச்சினைக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தின் முழு அதிகாரத்தையும் அமுல்படுத்துவதன் மூலம் ஒர் ஆரம்ப நடவடிக்கையாக கொள்வதுடன், இலங்கை தீவில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் இலங்கை தமிழ் பேசும் மக்கள் தாமும் அனுபவிக்கின்றோம் என்று திருப்திபடும் வகையில் முழுமையான அரசியல் தீர்வை இலங்கை அரசு முன் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

PLOTE_Conference_31Oct10இந்த இனப்பிரச்சினை தீர்வில் (இலங்கை – இந்தியா ஒப்பந்தம்) 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா தனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த கால இந்த ஆயதபோராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர்களில் நாமும் ஒருவர் என்ற ரீதியில் ஏற்பட்ட மக்கள் அழிவுகளுக்கு நாம் மிகுந்த வேதனைப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களிற்கு எம்மால் ஆன உதவிகளை செய்யவதற்குரிய வேலை திட்டங்களை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இன்நிலையில் பலவீனமாகவுள்ள தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்து ஒரு தீர்க்கமான அரசியல் தீர்வுக்கு அரசு முன்வரவேண்டும் என்பதில் பாரியளவு பங்களிப்பை புலம்பெயர் தமிழ் சமூகம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

சர்வதேச செயற்பாட்டு குழு சார்பில்
செ.ஜெகநாதன்
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்

ஜப்பசி 31 2010

இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் சீன உதவி – ஜனாதிபதி மஹிந்தவிடம் சீனப் பிரதமர் உறுதி

china.jpgஇலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்கை வெற்றிகெள்ள சீனா சகல வித ஒத்துழைப்பினையும் வழங்குமென சீனப் பிரதமர் வென்ஜியாபாவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று சீனாவின் சங்காய் நகரில் நடைபெற்றுள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வீதிபுனரமைப்பு உள்ளிட்ட எதிர்காலத்திட்டங் களுக்கு சீனா பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இதன்போது அந்நாட்டுத் தலைவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் துறைமுகம், விமான நிலையம் மற்றும் மின்சாரத்துறை செயற் திட்டங்களுக்கு சீனா உதவிகளை வழங்கி வருகிறது. அதேபோன்று எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. சீனாவிற்கான மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சீனப் பிரதமர் வென்ஜியாபாவோவிற்கும் மிடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் சங்காயில் நடை பெற்றுள்ளது.

இதன் போது இருநாடுகளுக்குமிடையிலான நல்லுறவு, சீன நிதியுதவி மூலம் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத் தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழ்நிலையானது அபிவிருத்தி இலக்கு நோக்கிய பயணத்திற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளமை தொடர்பிலும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தமது பூரண ஆதரவை வழங்குவதாக சீனப் பிரதமர் உறுதியளித்துள் ளார்.

சுமுகமாக இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் அதனை மென்மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாகவும் இருநாட்டுத் தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அதேவேளை, சீன நிதியுதவியுடன் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டமான துறைமுக நடவடிக்கைகள் குறித்தும் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

சீனாவில் நடைபெறும் எக்ஸ்போ- 2010வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இருநாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் இரவு சிறப்பதிதியாகக் அந் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

மீளக்குடியமர்த்தப்பட்ட 200 குடும்பங்களுக்கு புத்தம் புது சைக்கிள்கள்

பளை பிரதேசத்தில் புதிதாக மீளக் குடியமர்த்தப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு புத்தம் புது சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. வட மாகாண சபை இதற்கென 25 இலட்சம் ரூபா நிதியை செலவு செய்துள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வின் போது சிறுகைத்தொழில், பாரம்பரி கைத்தொழில், ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஆகியோர் சைக்கிள்களை விநியோகிக்கவுள்ளனர். பளையில் அண்மையில் மீளக்குடிய மர்த்தப்பட்ட 7 கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்து கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

நேபாள ஜனாதிபதி யாதவ்வுடன் ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சு

yaadev.jpgஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (30) நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவை சீனாவின் சங்ஹாய் நகரில் சந்தித்து பேசினார்.

நேபாளத்தில் தற்போது இடம்பெற்று வரும் அரசியல் நெருக்கடி தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல சமயங்களில் நேபாளத்துக்கு சென்று அந்த நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண உதவியதாகவும், நேபாளத்தின் அரசியல் நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதிக்கு நன்கு தெரிந்திருப்பதாகவும் கூறிய நேபாள ஜனாதிபதி, அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு இலங்கை ஜனாதிபதியின் ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் நேபாள ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், லும்பினியை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு நேபாள ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

இதற்கு முன் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது லும்பினியின் அபிவிருத்திக்கு இலங்கை பங்களிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் கூறி வந்த போதிலும் நான் ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னரே அதனை நிறைவேற்ற முடிந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவூட்டினார்.

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் கல்வி பரிமாற்ற திட்டங்கள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் விரிவாக ஆராய்ந்தனர். நேபாள மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி வாய்ப்புகளை வழங்க முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அதற்கேற்ப எதிர்காலத்தில் நேபாளத்துக்கும் இலங்கைக்கும் இடையே தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பாக கல்வி பரிமாற்ற திட்டங்கள் இடம்பெறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர். அன்றைய தினம் மாலை ரிகீஜிலி 2010 சர்வதேச கண்காட்சியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அதிதியாக கலந்துகொண்டதுடன் சீன பிரதமரையும் சந்தித்து பேசினார்.