January

January

புனர்வாழ்வு முகாம்களிலிருந்த 566 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைப்பு

படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுள் மேலும் 566 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வவுனியா காமினி மகா வித்தியாலயம், பம்பைமடு உட்பட வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இவர்கள் 566 பேரும், வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அருகே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புலிகளினால் பலாத்காரமாக சிறுவர் படையணிக்கு சேர்க்கப்பட்டிருந்த சிறுவர் சிறுமியர்களில் சிலரும், புலிகள் இயக்கத்தில் மிகவும் அடி மட்டத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தவர்களில் சிலருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்தும் சுமார் 1000 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படும் அரசின் திட்டத்திற்கமைய எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஹெய்ட்டி பூகம்பத்தில் மரணித்தோர் எண்ணிக்கை 2 இலட்சமாக உயர்வு

haiti-earthquake02.jpgஹெய்ட்டி பூகம்பத்தில் மரணித்தோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து ஹெய்ட்டி உள்துறை அமைச்சர் பால் அந்தோனி கூறும் போது, மரணித்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை தாண்டியுள்ளது. மீட்கப்பட்ட 40 ஆயிரம் உடல்களை கூட்டம் கூட்டமாக பல்வேறு இடங்களில் புதைத்து இருக்கிறோம்’ என்றார்.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வீடுகளை இழந்தவர்களுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீரும் கிடைக்கவில்லை. இதனால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக மஹிந்த சிந்தனை – 02

mahihda-cintanaya.jpgசில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனமாக மஹிந்த சிந்தனை 02ஐ வெளியிட்டார். அதில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த கருத்துக்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

மாகாண சபை

மாகாண சபை முறை சம்பந்தப்பட்ட தேர்தல் முறையையும் பிரதேச சபை மற்றும் மாவட்ட விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கலப்பு முறையையும் உருவாக்குகின்ற முன்மொழிவொன்றையும் முன்வைக்கின்றேன். அதுவரை எவ்வித தாமதமுமின்றி 13 வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையை மீண்டும் இயங்க வைப்பேன்.

வட மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்காகவும் வடக்கு வாழ் மக்களின் வாழ்நிலையை மிக விரைவாக வளப்படுத்துவதற்குமாக செயற்படுத்தப்படுகின்ற வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தை மென்மேலும் பலப்படுத்தும் வகையில், மாகாண சபையில் மக்கள் பிரதிநிதிகளின் பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

செனற் சபை

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்விதத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலும் பாராளுமன்றத்தின் அதியுயர் தன்மைக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் மாகாண சபைகளில் நிறைவேற்றப்படுகின்றன நியதி ஆக்கங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் என்பவற்றை மேலும் அர்த்தபுஷ்டியுடன் கலந்துரையாடுவதற்கும்,  மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் அவர்களை ஆக்கமுடன் பங்கேற்கும்படி செய்வதற்காகவும் மதத் தலைவர்கள், தொழில் வாண்மையாளர்கள் போன்ற நேரடியாக வாக்குகளால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகளும் பாராளுமன்ற செயற்பாடுகளில் பங்களிப்பை செய்வதற்கு ஏற்றவாறு சகல அரசியல் கட்சிகளினதும், அமைப்புகளினதும் கருத்துக்களை கோரியதன் பின்னர் இரண்டாவது மந்திரி சபையொன்றை நிறுவுவதற்கு உத்தேசித்துள்ளேன்.

தேசிய சகவாழ்வுக்கு புதியதொரு பாதை

பெரும்பாலானோரின் இணக்கப்பாடு என்பவற்றையே அதன் அடிப்படையாகக் கருதுகின்றேன்.

கிழக்கின் உதயம்

* பாணமவிலிருந்து புல்மோட்டை வரை கிழக்கு கரையோரப் பாதையையும் கந்தளாய் சேருவிலப் பாதையையும் அவசர அவசரமாக உருவாக்குகின்றோம். கிழக்கு மாகாணத்தில் எஞ்சியுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளையும் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்துநாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கிடையில் உள்ள பொருளாதார சமூக அரசியல் தொடர்புகளை மேம்படுத்துவேன்.

* மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வடமத்திய மாகாணத்துக்கும் கொழும்புக்கும் துரித போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு மரதங்கடவெல, பொலன்னறுவை, திருகோணமலைப் பாதைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் இறக்கண்டிப் பாலம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் யான் ஓய பாலம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துப் பாலங்களின் வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

* அம்பாறை மாவட்டத்தில் அறுகம்குடாப் பாலம் திறக்கப்பட்டுள்ளதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடிப் பாலமும் புதிய கல்லடிப் பாலமும் மக்களுடைய உரிமைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தில் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 59 புதிய நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பிரதான நீர்த்தாங்கிகள் 12 அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

* புதிதாக 164 பாடசாலைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 327 கட்டடங்கள் புனரமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடசாலையும் நவீன விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணனி நிலையத்தையும் கொண்டதாக அமைக்கப்படுகின்றது.

* சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக வைத்தியசாலைகளுக்காக புதிதாக 55 வார்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. 445 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* வாழ்வாதார அபிவிருத்திக்காக 80,000 ஏக்கர் வயல்கள் பயிரிடப்பட்டுள்ள அதேநேரம் 2500 வீட்டுத் தோட்டங்களும் 19 பழக் கிராமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் தொடர்ந்தும் மேற்குறிப்பிட்ட பயிர்ச்செய்கையை மேம்படுத்தி புதிய சந்தை முறை ஒன்றை அறிமுகப்படுத்துவேன்.

* ஏற்றுமதி தயாரிப்புப் பிராந்தியம் ஒன்றை ஆரம்பிப்பேன்.

* வாழ்வாதார அபிவிருத்திக்காக புதிதாக 100,000 ஏக்கர் வயல்களின் பயிர் செய்ய வழி செய்வேன். 5,000 வீட்டுத் தோட்டங்களையும் 100 பழக் கிராமங்களையும் உருவாக்குவேன்.

* பால் உற்பத்தி செய்கின்ற தொழிலை மேம்படுத்துவதற்காக புதிதாக மூன்று மாதிரிப் பண்ணைகளை உருவாக்கியுள்துடன், பால் உற்பத்தி செய்கின்ற 100 கிராமங்களை அமைத்திருக்கிறேன்.

வடக்கின் வசந்தம்

* வடமாகாணத்தில் எந்த ஒரு இடத்துக்கும் சுதந்திரமாக போய்வருவதற்கு இருந்த தடைகளை நான் முழுமையாக நீக்கியுள்ளேன்.

* தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளை கணக்கிலெடுத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுப்பேன்.

* வடக்கில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம், மிளகாய் உட்பட்ட விவசாய உற்பத்திகளுக்கு இலகுவான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, நாட்டில் ஏனைய பிரதேசங்களெங்கும் காணப்படும் பொருளாதார மையங்களுக்கு கொண்டு செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை சதொச ஊடாக ஏற்படுத்திக் கொடுப்பேன்.

* மதவாச்சி – மன்னார் பாதை, யாழ்ப்பாணம் – பருத்தித்துறைப் பாதை, யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஊடாக காரைநகர்ப் பாதை, முருங்கன் – சிலாபத் துறை, ஒட்டுசுட்டான் – நெடுங்கேணிப் பாதை மற்றும் வவுனியா – ஹொரவப்பொத்தான பாதை என்பவற்றை விரிவாக்கி அபிவிருத்தி செய்வேன்.

* யாழ்ப்பாணம் – கண்டி வீதி (ஏ-9), யாழ்ப்பாணம் – புத்தளம் வீதியை முன்னேற்றி அதிவேகப் பாதையாக மேம்படுத்துவேன்.

சங்குப்பிட்டிப் பாலத்தை உடனே அமைத்து யாழ்ப்பாணக் குடாநாட்டை மன்னார் மற்றும் புத்தளம் பிரதேசங்களோடு தொடர்புபடுத்துவேன். அத்துடன் யாழ்ப்பாணத் தீவுகளை மேம்படுத்தி நெடுஞ்சாலை முறைமையின் ஊடாக ஒன்றோடு ஒன்று இணைத்து யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் தொடர்புபடுத்துவேன்.

* யாழ். போதனா வைத்தியசாலையை முழுமையாக நவீனமயப்படுத்துவேன்.  அதற்கு இணையாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள வைத்தியசாலைகளையும் புனரமைப்பேன்.

* துரையப்பா விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துவேன்.

* சுதந்திரத்தின் அடையாள நகரமாக மாங்குளம் நகரத்தை அபிவிருத்தி செய்து மார்ச் மாதம் மக்களுக்கு உரித்தாக்குவேன்.

* யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு புதிதாக பொறியியல் பீடமொன்றை அமைத்துக் கொடுப்பேன். தொழில்நுட்பக் கல்லூரிக்கான விடுதி வசதிகளை விரிவாக்குவேன்.

* வடமாகாணத்தில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உயர் வருமானங்களுக்கு வகை செய்யக்கூடியதான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாரிய அரிசி ஆலைகள் இரண்டை நிறுவுவேன்.

* வடமாகாணத்தில் விவசாய எழுச்சிக்கு ஏற்புடையதாக விவசாய பீடம் ஒன்றை கிளிநொச்சி பிரதேசத்தில் நிறுவுவேன்.

* யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்துவேன்.

* தலைமன்னார் – மதவாச்சி – ஓமந்தை புகையிரதப் பாதையை 2011 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வேன்.

2012 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை தெற்காசியாவில் அதிசிறந்த நகரமாக மாற்றுவேன்.

* கடந்த காலத்தில் விரும்பியோ விரும்பாமலோ தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்டு ஆயுதக் கலாசாரத்துக்குள் தமது வாழ்க்கையின் இளமைக் காலத்தைப் பறிகொடுத்துவிட்ட இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும், அவர்களின் சமூகக் கலாசார அடையாளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட புனர்வாழ்வுத் தராதரங்களின் அடிப்படையில் ஒரு வருட காலத்துக்குள் புனர்வாழ்வளித்து அவர்களது பெற்றோர்களிடம் கையளிப்பேன்.
வடக்கிலும் கிழக்கிலும் சகோதர மக்கள் மீண்டும் தத்தம் கிராமங்களுக்கு

‘வடக்கின் வசந்தம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள வவுனியாவின் நலன்புரி கிராமங்களில் இருந்த வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்குரிய அனைவரையும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பெருந் தொகையானோரையும் மீளக் குடியமர்த்தியுள்ளோம்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இன்னும் குடியமர்த்தப்பட வேண்டியவர்களாக உள்ளனர். நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்ற விரைவுக்கேற்ப அவர்கள் அனைவரையும் படிப்படியாக தாமதமின்றி குடியமர்த்துவேன்.

1990ம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அனைவரையும் அவர்களுடைய சொந்தப் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்யக்கூடியதாக வீடமைப்பு, வாழ்வாதாரம், உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான விடயங்களில் உரிய கவனம் எடுக்கப்பட்டு முழுமையான கருத்திட்டம் வரையப்பட்டு அது அமுல் செய்யப்படும்.

வீடுகளைக் கட்டுவதற்கு
* மீளக்குடியமர்த்துகின்ற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தற்காலிக வாழிடங்களை அமைத்துக் கொள்வதற்காக தற்போது வழங்கப்படுகின்ற 50,000 ரூபாவுக்கு மேலதிகமாக மேலும் 50,000 ரூபா பெறுமதியான பொருட்களையும் பெற்றுக் கொடுப்பேன்.

* சேதமடைந்துள்ள வீடுகளை மீள் அமைத்துக் கொள்வதற்காக 350,000 ரூபா பணத்தை நீண்டகால அடிப்படையின் கீழ் வழங்குவேன்.

* வீடுகளைத் திருத்துவதற்காக ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்குவேன்.

* ஒவ்வொரு வீட்டிற்கும் மலசலகூட வசதிகள் அமைத்துக் கொள்வதற்கு உதவிகள் வழங்குவேன்.

விவசாய ஊக்குவிப்பு
* சகல விவசாயக் குடும்பங்களுக்கும் தற்போது கொடுக்கப்பட்டு வருகின்ற விவசாய உபகரணங்கள், மீளக்குடியமர்த்தப்படும் சகல குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.

* சகல விவசாயக் குடும்பங்களுக்கும் தற்போது வழங்கப்படுகின்ற விதைநெல், உர வகைகள், ஒவ்வொரு போகத்தின் போதும் இலவசமாக வழங்கப்படும்.

* நெல் விவசாயிகள் சங்கம் ஒவ்வொன்றுக்கும் தண்ணீர்ப் பம்பி ஒன்றும் டிரக்டர் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும்.

மீன்பிடித் தொழில்
* ஒவ்வொரு மீனவத் தொழிலாளருக்கும் தேவையான மீன்பிடி உபகரணப் பொதி ஒன்று வழங்கப்படும்.

* மீன்வளத் திட்டமிடல் நிலையங்கள் இரண்டை மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நிறுவுவேன்.

கால்நடை அபிவிருத்தி
* கோழி வளர்ப்புக்கு தேவையான குஞ்சுகள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் இலவசமாக வழங்குவேன்.

* பால் உற்பத்தியின் மேம்பாட்டுக்காக பால் உற்பத்தியாளர் கிராமங்களை நிறுவுவேன். பால் உற்பத்தித் தொழிற்சாலையொன்றை வவுனியாவில் ஆரம்பிப்பேன்.

* சுயதொழிலில் ஈடுபட விரும்பும் ஒவ்வொருவருக்கும் அதற்கு அவசியமான உபகரணப் பொதியொன்றை இலவசமாக வழங்குவேன்.

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து…  

ஜனாதிபதி தேர்தல்: எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்? : (ஈ.பி.ஆர்.எல்.எவ்_பத்மநாபா)

SF_PostersMR_Postersதமிழ் பேசும் மக்களே!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  நாம் புத்திபூர்வமாகவும் தீர்க்கதரிசனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். மேலும் மேலும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகாதவாறும் எமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைக்குமாறும் நாம் செயற்பட வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் நிதானமான சிந்தனையுடனும் எதிர்காலம் பற்றிய கரிசனையுடனும் வாக்களிக்க வேண்டுமென்ற அபிப்பிராயத்தையே தமிழ் புத்திஜீவிகளும் ஆன்மீக தலைவர்களும் ஆசிரியர்களும் உயர் கல்வி மாணவர்களும் கொண்டிருக்கிறார்கள். அதனையே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராகிய நாமும் தமிழ் வாக்காளர்களுக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

தேர்தலைப் பகிஷ்கரிப்பதோ அல்லது தமிழ் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதோ தமிழர்களுக்க உரிய புத்திபூர்வமான நடவடிக்கையாகாது என்பதே தமிழ் அறிவார்ந்தோரில் பெரும்பாலானோரின் கருத்தாகும். அதுவே எமது கருத்துமாகும்.

விபரிக்க முடியாத துன்பங்களையும் வேதனைகளையும், இழப்புக்களையும் சுமந்து நிற்கும் எம் மக்கள் எழுந்து நிற்பதற்கு, எம் மக்களின் வாழ்வில் விடியல் பிறப்பதற்கு நாம் செயற்பட வேண்டும் என்று இவர்கள் கேட்டிருந்தார்கள்.

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பொறுப்புணர்ச்சி உள்ள அரசியல் கட்சி என்ற வகையில் மக்களின் உடனடித் தேவைகளுடனும் நீண்டகால அபிலாஷைகளுடன் இணைந்து செல்லவே விரும்புகிறது.

எமது மக்களுக்கு நன்மை பயக்கும் ஜனநாயக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியல் அதிகாரப்பகிர்வும், சமூக பொருளாதார அபிவிருத்தியும் ஆகிய விடயங்களை கருத்திற்கெடுத்தே செயற்பட வேண்டியிருக்கிறது.

பொறுப்பற்ற நிராகரிப்பு அரசியலை நாம் மேற்கொள்ள முடியாது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை பொறுத்தவரை அவர் 40 வருடம் அரசியல்வாதியாக செயற்பட்டிருக்கிறார்.

1980 களின் இறுதிப் பகுதியில் இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்த போது உள்ளுரிலும், சர்வதேச அரங்கிலும் மனித உரிமைகளுக்காக உறுதியுடன் குரல் கொடுத்தவர்.
எமது பிரதேசங்களையும் இந்த நாட்டையும் பீடித்திருந்த வன்முறைக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்.

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு இலங்கையை பல்லினங்களின் நாடாக நிர்மாணிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டவர். 

எனினும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் இணைக்கப்பட்டு 20 வருடங்கள் நடைமுறையில் இருந்த  இணைந்த வடக்கு கிழக்கை ஜே.வி.பி நீதிமன்றம் வரை சென்று பிரிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு நீதி மன்றத்தால் பிரிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியும்.

கிழக்கு மாகாணசபை செயற்படுவதாக இருப்பினும் 13வது திருத்தத்தின் கீழான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. குறிப்பாக பொலிஸ் அதிகாரம், நிலத்தின் மீதான அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை என்பதே யதார்த்தம். 13வது திருத்தச்சட்டத்திற்கும் கூடுதலான அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் அதிகாரப்பகிர்வினூடாக ஜனநாயகத்தை விரும்பும் சிங்கள மக்கள் மத்தியிலும் அந்த நிலைப்பாடே காணப்படுகிறது. எமது பிராந்தியத்தின் பிரதான ஜனநாயக நாடும் இலங்கையின் நண்பனுமான இந்தியாவும் அதனையே வலியுறுத்துகிறது.

எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் சரத் பொன்சேகா அவர்கள் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இராணுவ ஜெனராலாக இருந்து மிகத் திறமையாகச் செயலாற்றியவர். இப்போது வடக்கு கிழக்கு இணைப்பு, உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அங்கு மீண்டும் தமிழ் மக்கள் குடியேறி வாழச் செய்வார் எனவும் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பார் எனவும் தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அவர் அவ்வாறு கூறவில்லை என்றும் கிழக்கை கைப்பற்றி வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு வழிவகுத்தது தானே என்றும் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் அதிகாரப் பகிர்வு பற்றியோ, உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல் பற்றியோ, சிறுபான்மை சமூகங்கள் பற்றியோ தமிழ் பேசும் மக்கள் பற்றியோ ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை. இன்று இதனை பகிரங்கமாக தெரிவிக்காத நிலையில் நாளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாக உறுதியாக செயற்படுவார் என நாம் எதனையும் உறுதியாக கூறிவிட முடியாதுள்ளது.

இப்போது அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கி அங்கிருந்த மக்கள் மீள அவ்விடங்களில் குடியேறும் வழி வகைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அவ்வேலைத்திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.

அதிகாரப்பகிர்வுக்கு எதிராகவும், எமது அண்டை நாடான இந்தியாவுக்கு விரோதமாகவும் செயற்பட்டுவரும் ஜே.வி.பி எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதான பங்குதாரர் என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பொன்சேகாவின் முதுகில் ஏறி தான் அதிகாரத்தைப் பிடிக்கும் எண்ணத்துடனேயே அவருக்கு ஆதரவளிக்கிறார். சரத் பொன்சேகாவுக்கு என்று ஒரு அரசியற் பின்னணியோ அல்லது ஒரு கட்சிப்பின்னணியோ இல்லாதிருக்கிறார். இந்நிலையில் பொன்சேகா அவர்கள் தமது வாக்குறுதிப்படி எவ்வளவு தூரம் செயல்படுவார் என்பதே எமது கேள்வி. இது ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி பின்னர் நீ யாரோ நான் யாரோ என அவர் ஆக்கி விடுவாரோ என்பதே எமது கவலை.

இப்போது பலதும் பத்தும் கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் எல்லாம் பிழைத்ததன் பின்னர் எல்லா சிங்களத் தலைவர்களும் இப்படித்தான் என்று சுலபமாகக் கூறி தாம் மக்களை பிழையாக வழி நடத்தியதற்கான பொறுப்பைக் கை கழுவி விட்டு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படி வெல்வது என்பதை நோக்கி மக்களுக்கு உணர்ச்சி ஊசி அடிக்கத் தொடங்கி விடுவார்கள்.

புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டே  தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது அரசாங்கம்தான் அவர்களை ஏகபிரதிநிதிகளாக  ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. நாங்கள் அவ்வாறு கூறவில்லையென்று திரு.சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கின்றார்.

புலிகளால் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பு இப்போது பல்வேறு பிரிவுகளாக உள்ளது.. சிவநாதன் கிஷோர் தலைமையில் ஒரு பிரிவினர் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கின்றனர். பொன்னம்பலத்தின் பேரன் கஜேந்திர குமார் தலைமையில் ஒரு பிரிவினர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்கின்றனர். சிவாஜிலிங்கம் தன்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். சிறீகாந்தா, செல்வம் ஆகியோர் அவருக்கு ஆதரவளிக்கின்றனர். சம்பந்தன் சேனாதிராஜா மற்றம் சுரேஷ் பிரிவினர் சரத் பொன்சேகா தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொன்சேகாவும், ஜே.வி.பி யும் ஊடகங்களுக்கு தெரிவித்துவரும் கருத்துக்கள் எதிர்மாறானவையாக இருக்கின்றன. பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படும் பத்து விடயங்களைத் தவிர வேறு எதுவும் கூட்டமைப்பினருடன் பேசப்படவில்லையென ஜே.வி.பி யின் பேச்சாளர் அனுரகுமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு எட்டு மாதங்களாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த 3,50,000 இற்கு மேற்பட்ட மக்களின் பிரச்சினைகளே கவலை அளிப்பதாக அமைந்திருந்தன. இந்த மக்கள் எல்லாவற்றையும் இழந்தவர்கள். உறவுகளை இழந்தவர்கள், பிள்ளைகள், இரண்டுவருட கல்வியை இழந்தவர்கள். தற்போது அவர்கள் படிப்படியாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். 2,50,000 இற்கு மேற்பட்ட மக்கள் வரை ஊர்திரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்குரிய வீட்டுவசதிகள், வீதிகள், தொழில்வசதிகள், கல்வி, போன்ற விடயங்களில் அரசாங்கம் கூடுதலான அக்கறை செலுத்த வேண்டும் என்றே கோருகின்றோம். 

பாதுகாப்பு வலயங்களால் ஒரு லட்சத்துக்க மேற்பட்டோர் பத்தாண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் ஒரு லட்சம் பேரளவில் உள்ளனர். இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தோர் ஒரு லட்சத்துக்கு மேல் உள்ளனர். இருபத்தைந்து வருட யுத்தத்தால் வருமானம் உழைப்போரை இழந்து விதவைகளையும் அனாதைகளையும் கொண்டு நிற்கும் குடும்பங்கள் பல்லாயிரம். இவர்கள் அனைவருக்கும் உரிய பொருளாதார சமூக வாழ்வை மீளளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் போதிய அளவில் அளிக்கப்பட வேண்டும். இந்த மக்களின் வாழ்வில் புதிய வெளிச்சம் வருவதற்கான அரசியல் பொருளாதாரக் கதவுகள் பல முனைகளிலும் திறக்கப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களின் பிள்ளைகளில் பலர் சிறப்பு முகாம்களில் வாழ்வது அவர்களின் பரவலான கவலையாகும். பலாத்காரமாக யுத்தப் பயிற்சிக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்களே இதில் அதிகமானோர். அவர்களை துரிதமாக விடுவிப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ள போதிலும் இன்னும் வேகமாக அவை நடைபெற வேண்டும். பிள்ளைகளை பெற்றோரிடம் நேரடியாக கையளிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். அது இன்னமும் வேகமாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோருகின்றோம்.

ஏ-9 பாதை தற்போது 24 மணிநேரமும் திறந்திருக்கிறது. எமது வெறிச்சோடிய நகரங்களில் மீண்டும் உயிர்ப்பு, மானிட செயற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன். முட்கம்பிகளாகவும், இருளாகவும் காணப்பட்ட எமது நகரங்களில் பஸ்நிலையங்களும், கடைத்தெருக்களும் சினிமாத் தியேட்டர்களும் இரவு நேரங்களிலும் உயிரோட்டம் உடையவையாக காணப்படுகின்றன.
ஊரடங்கு உத்தரவு யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதாகவே தளர்த்தப்பட்டு விட்டது.
தென்னிலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு கெடுபிடிகளாக இருந்த பொலிஸ் பதிவு முறைகள், பாஸ் முறைகள் நீக்கப்பட்டுள்ளன.

இன்னும் பல காரியங்கள் நடந்தேறியாக வேண்டியிருக்கின்றன. எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருந்த ஆயுத வன்முறைக் கலாச்சாரம் முடிவுக்கு வந்திருப்பதால் அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் ஆகியன இனி அவசியமற்றவை. அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும்
சோதனைச்சாவடிகள், மணல் மூட்டைகள், முட்கம்பி சுருள்கள் இனி எமது வீதிகளில் அவசியமற்றவை. அவை இல்லாத ஒருநிலை விரைவாக வேண்டும்.

தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வு அரசியல் முறைமையொன்றைக் கொண்டதாக இலங்கை அமைய வேண்டும்.

தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கு இடையேயான நல்லுறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும். ஒரு பல்லினங்களின் தேசமாக நாம் அனைவரும் இலங்கையர் என மானசீகமாக உணரக்கூடிய விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தென்னாசியாவின் கண்ணீர்துளி என கடந்த 30 வருடங்களாக அழைக்கப்பட்ட இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெயரை மீண்டும் பெற வேண்டும்.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பக்கத்தில் இருக்கும் இலங்கை அதனோடு பரஸ்பர நல்லுறவுடன் தனது ஜனநாயக பாராம்பரியங்களை பாதுகாத்துக் கொள்வதோடு அனைத்து மனித உரிமைகளையும் மதிப்பதாக விரிவாக்கப்படவும் வேண்டும்.

வறுமை, பிணி, அச்சம் நீங்கிய சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும். பலமான ஜனநாயக அடித்தளத்தில் எமது சமூக பொருளாதார நிர்மாணம் நடைபெற வேண்டும்.

ஆனால் நாடு பூராவும் இராணுவ உடையுடனும், தொப்பியுடன் எதிர்க்கட்சி பொது வேட்பாளர்pன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதன் பொருள் என்ன? இராணுவ பெருமிதம்தான் நாட்டின் எதிர்காலமா?

பாகிஸ்தான், பங்களாதேசம், மியான்மார் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த இராணுவ சதிப்புரட்சிகளையும் அந்நாடுகளில் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை அத்திவாரங்களே ஆட்டம் கண்டு போயிருப்பதை இலங்கையர்கள் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

40 வருடமாக படை அதிகாரியாக இருந்தவர்pன் இராணுவ மனோபாவமே இயல்பாக அவரின் சிந்தனையை தீர்மானிக்கும் என்பது கவனத்துக்குரியதொன்று. அவர் இப்போதும் கூட நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் என்ன நல்லவற்றைச் செய்யப் போகிறார் என்பதைவிட படைத்தரப்பினர், பாதுகாப்பு பற்றியே அதிகம் பேசுகிறார். சம்பள உயர்வு வேலைவாய்ப்புக்ள் பற்றி அவர் கூறுபவைகள் நடைமுறைக்குதவாத வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன.

சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்தை அண்டிப்பிழைக்க வேண்டும் என்று அவர் இராணுவ கமாண்டராக இருக்கும் போதே கூறியவர். இலங்கையின் சனத்தொகை பொருளாதாரம் இவற்றை கரிசனையில் கொள்ளாமல் படையினரின் தொகையை மூன்று லட்சமாக அதிகரிக்க வேண்டுமென்று கூறியவர். இப்போதும் அதே நிலைப்பாடுகளையே கொண்டுள்ளார்.

ஜனநாயக உணர்வு கொண்டவர்களுக்கு குடிமக்களின் ஆட்சி பற்றி நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது மிகவும் நெருடலான விடயமாகும்.

தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் மக்களின் எதிர்காலம் பற்றி தீர்க்க தரிசனத்துடன் சிந்திக்க வேண்டும்.

வரலாற்றில் தூரதிருஷ்டியும் சமூகப் பொறுப்புணர்வும் இல்லாமல் போனதன் விளைவு எத்தகைய விபரீதங்களை நாம் சந்திக்க வேண்டி நேர்ந்தது. மொத்த சமூகமுமே அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட வில்லையா? இழந்தவற்றைத்தான் ஈடு செய்ய முடியுமா?

இத்தனைக்கும் எமக்கு எத்தகைய சந்தர்ப்பங்கள் எல்லாம் வந்தன.
இந்தியாவின் அனுசரணையுடன் வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரப்பகிர்வு முறைமை
1990 களின் நடுப்பகுதியில்  சந்திரிகா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமஷ்டி முறையிலான தீர்வு
2002 இல் ஒஸ்லோவில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளால் பரிந்துரைக்கப்பட்ட கூட்டாட்சி முறை

தமிழ் மக்களால் நம்பப்பட்டவர்கள் எல்லாவற்றையும் நிராகரித்தார்கள்.
 
இந்த நிராகரிப்பு அரசியலே எமது சமூகத்திற்கு துன்பக் குழிகளையும் துயரக் குழிகளையம் தோண்டியது. தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புத்திசாலித்தனமாகவும், தீர்க்க தரிசனத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

எமது மக்களுக்கு அச்சமில்லாத சுதந்திரமான அரசியல் பொருளாதார வாழ்வு வேண்டும்: இலங்கையில் ஆட்சி முறையில் தமிழர்களும் சகோதரமான பங்காளர்கள் என இருக்கும் நிலை ஏற்பட வேண்டும்:  தமிழ் மக்கள் தமக்கான சுபிட்சமான வாழ்வை தமது உழைப்பால் அடைவதற்கு இனவாத அரசியற் தடைகளற்ற ஓர் ஏற்பாடு உருவாக வேண்டும். இவற்றை சாத்தியமாக்க மஹிந்த ராஜபக்ஸவே தமிழ் மக்களின் தெரிவாக வேண்டும்

தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கும்,
தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார உரிமைகளுக்கும்
இன, மத, சாதி பேதங்களற்ற ஒரு சமதர்ம இலங்கைக்கும்
மக்கள் பங்களிப்புடன் தொடர்ந்து போராடுவோம். 

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஜனவரி 2010, யாழ்ப்பாணம்

European commission to withdraw GSP+ to Sri Lanka : Tamil Solidarity

Senan at GSP+ MeetingThe EU trade committee held a hearing on 14 January to debate the removal of the GSP+ concession to Sri Lanka. Sri Lanka faces charges of human rights violations.

The Sri Lankan ambassador argued that Sri Lanka was improving its human rights record, claiming that “former combatants have been released and sent for rehabilitation or held back for closer investigation… All child combatants are being rehabilitated.” This ‘improvement’ was challenged by Senan, the Tamil Solidarity international coordinator, the other speaker in the debate.

Tamil Solidarity describes the current situation in Sri Lanka as a “modern holocaust”. Senan accused the Sri Lanka government of creating ‘transit centres’ where released detainees are held and of, in effect, turning the north “into an open prison”.

Every attempt of the ambassador to argue the government’s line was strongly contested. He claimed that “since December 2008 only one child is reported to have been recruited [by militant groups]”. But Tamil Solidarity pointed out that there is evidence that children as young as eight years old are kept in special detention centres, in effect torture camps.

The ambassador stated that the “Reporters sans Frontiers website listed only one alleged attempt to kidnap a journalist in the last year”. But Vincent Brossel of RSF explained that on the previous day “a local journalist from the BBC was beaten by supporters of the minister because she was covering the election campaign.”

Hypocritically the ambassador made a plea on behalf of those suffering the aftermath of the tsunami in 2004. But the Tamil Solidarity coordinator pointed out that the majority of the aid and tax relaxation made available to Sri Lanka had not reached most of the victims. He accused the corrupt Rajapakse government of spending the aid on further curtailing democratic rights.

Joe Higgins MEP spoke in favour of GSP+ withdrawal and accused the SL government of spinning a ‘good news story’ which was far from the reality of the experience of ordinary people. He said that “absolutely no one wants to create a situation that can cause problems for the ordinary working and poor people in Sri Lanka. But it is the government of Sri Lanka that will carry the full responsibility if a decision is taken to withdraw the special status.”

In the end the European Commission representative reported that it will withdraw the GSP+ to Sri Lanka in six months if no genuine improvements are made.

Here is the link for the video of the Tamil Solidarity speech: http://www.youtube.com/watch?v=03znhPYKdzQ

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசியல் யாப்பு – தேர்தல் முறையில் மாற்றம்

luxman.jpgஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களை பாராளுமன்றத்துக்கு உள்ளீர்க்கும் வகையில் அரசியல் யாப்பிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்களை கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியின் இத்தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் தொடர்பாடல் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நேற்று தெரிவித்தார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததும் நடைமுறையில் இருந்து வரும் அரசியல் யாப்பில் நாட்டுக்கு பொருந்தக்கூடிய வகையில் மேலும் பல திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். இதனடிப்படையில் பாராளுமன்ற முறையிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும். சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் விகிதாசார முறையடிப் படையில் பாராளுமன்றத்தில் உள்Zர்க்கப் படுவார்கள்.

இதேவேளை மக்கள் சபை, கிராம சபை ஆகியன ஸ்தாபிக்கப்படுவதன் மூலம் கிராமங்கள் தோறும் அபிவிருத்தி செய்யப்ப டும். மேலும் தேர்த லில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கல்வி மான்களை உள்ளடக்கிய செனற் சபை யொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் ஜனாதி பதி தனது விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய அரசியல் முறையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஊழல், வன்முறைகளற்ற நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென்பது ஜனாதிபதியின் நம்பிக்கை.

அரசியல் யாப்பில் மேற்குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசித்து சில தீர்மானங்களை பெற்றுக் கொள்ள எமது கட்சி தயாராகவுள்ளது. எனவே எதிரணியினர் இதில் பங்குபற்றுமாறு நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

எதிரணியினர் இதற்கு இணங்காவிடின், அரசியல் யாப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை அமுலுக்குக் கொண்டு வருவோமெனவும் அமைச்சர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நிறை வேற்று ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்யப்போவதாக கூறிக் கொண்டே சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக தேர்தல் களத்தில் இறங்கி னார். அன்று ஒரு மேடையில், தான் பதவிக்கு வந்தால் நாட்டின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல அதிகாரங்களை தான் பெற்றுக்கொள்ள விருப்பதாக கூறியுள்ளார். தானே தனது கருத்துக்களுடன் முரண்படுகின்றார். அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் அமைச்சர்களே தேவைப்படாது போல் தெரிகிறது.

ஜனாதிபதி பதவிக்கு பொன்சேகா தெரிவாகிவிடுவாரோ என்று சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. அவரால் ஒருபோதும் ஜனாதிபதியாகிவிட முடியாதென்பது நிச்சயம். நாட்டில் சிறுபான்மையினர் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் விகிதாசார முறையடிப்படையில் அவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதே ஜனாதிபதியின் பிரதான குறிக்கோளாகுமே தவிர சுய ஆட்சி முறையில் ஸதாபிப்பது அல்ல.

பயங்கரவாதிகளை அழிப்பதற்காக 26 ஆயிரம் படையினர் உயிரிழந்ததுடன் 37 ஆயிரம் பேர் வரையில் தமது கை, கால்களை இழந்துள்ளனர். தேர்தல் என்றதும் இவர்களை மறந்துவிட்டு யாருக்கும் சுயாட்சி பெற்றுக் கொடுப்பது ஜனாதிபதியின் நோக்கமல்ல.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினருடன் சுய ஆட்சியை பெற்றுக்கொள்வதற்கான இரகசிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதனை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வேளை கூடவிருந்த கூட்டமைப்பிக் எம். பி. ஒருவரே வானொலி ஊடகவியலாளருடன் உரையாடுகையில் ஊர்ஜிதம் செய்துள்ளார்.

அது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தலைத் தொடர்ந்து, உரிய ஒலிப்பதிவு ஆவணங்களைக் கொண்டு நாம் எதிர்க்கட்சியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம். ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினருக்கான அனைத்து உரிமைகளும் சுதந்திரங்களும் பெற்றுக்கொடுக்கப்படுவது உறுதி. இருப்பினும் அவரது ஆட்சியின் கீழ் சுயஆட்சி முறைக்கு மாத்திரம் ஒருபோதும் இடமளிக்கப்படாது.

நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவி ருந்த பயங்கரவாதம் ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு விட்டது. இனி நாட்டுக்கும் மக்களுக்கும் தேவைப்படுவது அபிவிருத்தியே. மஹிந்த சிந்தனையின் இரண்டாம் பாகத்தினூடாக ஐந்து பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மூன்றாம் உலக நாடாகிய இலங்கையை முதலாம் உலக நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இனிவரும் காலங்களில் புதியதொரு அபிவிருத்தி யுகத்தை இலங்கையில் காண முடியுமெனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேலும் குறிப்பிட்டார்.

10 நிமிட “கட்சிதாவும்” நாடகம் அரங்கேற்றம்

mohomad-muzzammil.gifஜே.வி.பி. யிலிருந்து வெளியேறி தேசிய சுதந்திர முன்னணி (விமல் வீரவன்ச)யில் இணைந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முஸம்மில் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக வந்து விட்டு பத்து நிமிடத்தில் மீண்டும் திரும்பிச் சென்ற சம்பவம் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

நேற்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் மயோன் முஸ்தபாவுடன் ஒன்றாக வாகனத்தில் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் மயோன் முஸ்தபாவிடமும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிடமும் தனது குடும்பத்தவர்கள் ஆளும் தரப்பினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்து தனக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்புப் பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படுனெ ரவி கருணாநாயக்க உறுதியளித்த பின்னரும் கூட பயந்ததுபோல் காட்டிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் திடீரென ஜெனரலை சந்திக்காமலேயே வெளியேவந்து ஊடகவியலாளர்கள் நின்ற இடத்தில் வந்து இங்கு எம்மை காசுக்கு வாங்கப்போகிறார்கள். இந்த விளையாட்டு எனக்குச் சரிவராதென்று கூறிவிட்டு கதவைத்திறந்து கொண்டு வெளியே பாய்ந்து காரில் ஏறி விரைவாகச் சென்று விட்டார்.

அதன் பின்னர் இச் சம்பவம் பற்றி செய்தியாளர் மாநாட்டில் மயோன் முஸ்தபாவிடம் கேட்டபோது மேலே எதுவுமே நடக்கவில்லை. அவர் ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சந்திக்கவுமில்லை. யாருடனும் பணப்பரிமாற்றம் இடம்பெறவுமில்லை என அவர் தெரிவித்தார். தனது குடும்பம் அச்சுறுத்தப்படுவதாகவும் தனக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்பைப் பெற்றுத்தருமாறுமே அவர் கேட்டார். பின்னர் எதுவுமே பேசாமல் வெளியேறிவிட்டார். அவர் ஏன் வந்தார். எதற்காகத் திரும்பிப்போனார் என்பது எவருக்குமே தெரியவில்லை எனவும் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.

இதுவரை 473 தேர்தல் வன்முறைகள்

sri_election.jpgதேர்தல் வன்முறை தொடர்பில் இதுவரை 473 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு எதிராக 6 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக மேலும் அந்நிலையும் தெரிவிக்கையில்

தேர்தல் வன்முறை தொடர்பில் 473 முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளோம். தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் வியாழக்கிழமை மாலை 4 மணிவரை தேர்தல் வன்முறைகள் இவ்வாறு அதிகரித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கின்றோம். எமக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் பாரிய, சிறிய மற்றும் துப்பாக்கி பிரயோக சம்பவமென மூன்றாக பிரித்துள்ளோம்.

இதன்படி பாரிய சம்பவங்களாக 208, சிறிய சம்பவங்களாக 265 மற்றும் துப்பாக்கியுடன் தொடர்புடைய சம்பவமென 62 என வகைப்படுத்தியுள்ளோம்.பாரிய சம்பவங்களில் ஒரு கொலைச் சம்பவம் உட்பட கொலை முயற்சி சம்பவங்கள் 4 அடங்குகின்றது. அத்துடன் இதில் 60 தாக்குதல் சம்பவங்களும் 59 அச்சுறுத்தல் சம்பவங்களும் அடங்குகின்றன. மாவட்ட ரீதியில் அதிகூடிய சம்பவங்களாக மாத்தறையில் 43 ம் குருநாகலில் 41 ம் அம்பாந்தோட்டையில் 39 ம் அநுராதபுரத்தில் 35 ம் கம்பஹாவில் 32 ம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக நாம் 239 ம் புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 5 ம் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக 24 ம் ஜே.வி.பி.க்கு எதிராக 10 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம்.

அடையாளம் காணப்படாமல் 181 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ள அதேநேரம், இம்முறை பொலிஸாருக்கு எதிராக 6 முறைப்பாடுகளை பெற்றுள்ளோமென தெரிவித்துள்ளது.இதேவேளை, தேர்தலைக் கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான கபே தேர்தல் வன்முறை தொடர்பில் 317 முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்துத் தெரிவிக்கையில் பொலநறுவை வன்முறைச் சம்பவத்துக்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய வற்றின் 6 தேர்தல் காரியாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில், எதிர்காலத்தில் நிலைமை மோசமடையும். நாம் நேற்று வியாழன் வரை 317 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம்.

இந்த நிலைமைக்கு அரசாங்கம் 17 ஆவது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பது தான். இதனால் பொலிஸார் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. தேர்தல் ஆணையாளரின் உத்தரவையும் பொலிஸார் நடைமுறைப் படுத்தாததற்கு இதுவே காரணமாகும்.

பொன்சேகா அணிக்கு மாற 3 கோடி ரூபாவுக்கு பேரப் பேச்சு விலைபோகமாட்டேன் என்கிறார் முஸம்மில்

muzzammil.jpgஅரசாங் கத்திலிருந்து வெளியேறி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்காக தனக்கு 30 மில்லியன் ரூபா மயோன் முஸ்தபாவால் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தன்னை வாங்க முடியவில்லை என்றும் தான் கட்சி மாறப்போவதில்லை என்றும் தேசிய சுதந்திர முன்னணி எம்.பி. எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முஸம்மில் இதனை தெரிவித்ததாக “அததெரண’  இணையத்தளம் தெரிவித்தது.செய்தியாளர் மாநாட்டில் பேசிய பா.உ முசம்மில், ரணில் விக்கரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் என்னை அழைத்து சரம்பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குமாறும், அவ்வாறு ஆதரவு வழங்கினால் 300 மில்லியன் பணமும் வெளிநாடு ஒன்றில் வாழ்வதற்குரிய சகல ஏற்பாடுகளும் செய்து தருவதாகவும்; கூறினர். அதன்பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம அவர்களின் ராஜகிரியவில் உள்ள காரியாலயத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் அங்கும் பா.உ ரவி கருணாநாயக்க இருந்தார். ஜெனரல் கலந்து கொள்ளும் விசேட ஊடகவியலாளர்கள் மாநாடொன்று உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிகுமாறும் என்னை வேண்டினர். அத்துடன் பா.உ மயோன் முஸ்தபா தலைமையிலான குழுவொன்று என்னிடம் பணப்பெட்டி ஒன்றை தந்தனர். அந்தப்பணத்தை எண்ணுவதற்குக்கூட எனக்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. 

இது இவ்வாறிருக்க கவர்ச்சிகரமான நிதியை வழங்குவதன் மூலம் தேசிய சுதந்திர முன்னணி எம்.பி.யான முகமட் முஸம்மிலின் ஆதரவை பெறுவதற்கு எதிரணி முயற்சித்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச நேற்று தெரிவித்துள்ளதுடன் இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆதரவை விலைக்கு வாங்குவதற்கு எதிரணி மேற்கொண்ட முயற்சிக்கான ஆதாரத்தை ஊடகங்களுக்கு விரைவில் வெளிப்படுத்த இருப்பதாக நிருபர்களிடம் நேற்று வீரவன்ச தெரிவித்ததாக டெய்லி மிரர் இணையத்தளம் தெரிவித்தது. இந்த செய்தியாளர் மாநாட்டின் போது பிரசன்னமாகியிருந்த முஸம்மில் தன்னை எதிரணிக்கு விற்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

ஹெய்ட்டிக்கு உதவிகளை அனுப்புவதில் சிரமம்

haiti-earthquake02.jpgபெரும் பூகம்பம் ஏற்பட்ட ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு அவசர உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க தாங்கள் போராடிவருவதை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள கடுமையான அழிவுகள் நிவாரணப் பொருட்களையும் கருவிகளையும் கொண்டு சேர்ப்பதென்பதை மிகவும் சிரமமாக்கியுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.  இருபது லட்சம் பேர் வரையிலானவர்களுக்கு உணவு உதவி வழங்க ஐ.நா. எண்ணம் கொண்டுள்ளது என்றாலும் தற்போது வெறும் நான்காயிரம் பேரை மட்டுமே அதனால் சென்றடைய முடிந்துள்ளது.

haiti-earthquake02.jpgஅமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலான கார்ல் வின்சன் ஹெட்டியை சென்றடைந்துள்ளது. அதிலிருந்த ஹெலிகாப்டர்கள் தலைநகருக்கு உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளன.