May

May

சுதந்திர கட்சியை மறுசீரமைக்கவும் புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கவும் யோசனை

maithri-pala.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் ஜூன் 7ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற உள்ளது. இதன் போது கட்சியை நாடளாவிய ரீதியில் மறுசீரமைக்கவும் புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கும் வகையிலும் புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார். ஜூன் 7ஆம் திகதி முதல் ஒரு இலட்சம் உறுப்பினர்களை கட்சிக்கு புதிதாக சேர்த்துக் கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,

கட்சி அகில இலங்கை செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். 123 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து கட்சியை மறுசீரமைப்பதற்கான யோசனைகள் கிடைத்துள்ளன.

இதன்படி தற்கால சமுகத்திற்கு ஏற்றவாறு கட்சியை சீரமைக்க உள்ளோம்.இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள இளைஞர்கள், கல்வியியலாளர்கள் போன்றோருக்கு பொறுப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தினுள் ஒரு இலட்சம் பேரை கட்சிக்கு சேர்க்க உள்ளோம். இதற்கான நடவடிக்கை ஜூன் 7ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.  ஐ.தே. கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து பாடம் கற்று எமது கட்சியை பலப்படுத்த உள்ளோம் என்றார்

மணிரத்தினம் வரமாட்டார்

indian-film.jpgபிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் கொழும்பில் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் வைபவத்தில் கலந்துகொள்ளமாட்டார். சென்னையில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். ராவணன் படத்தின் விசேட காட்சி ஒன்று அந்த நிகழ்வில் காண்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதை யாவரும் அறிவர். ஆயினும் தயாரிப்புக்குப் பின்னரான வேலைகள் பூர்த்தியடையும் வரை அந்தத் திரைப்படம் திரையிடப்படாது.

ராவணன் படம் ஜூனிலேயே தயாரித்து முடிக்கப்படும். நான் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளமாட்டேன் என்று மணிரத்தினம் கூறியதாக இந்தியா கிலிட்ஸ் தெரிவித்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் கலந்தகொள்வாரா என்று கேட்கப்பட்டபோது, அவரின் தீர்மானத்தில் தான் தலையிட முடியாது எனவும் அது அவரின் விருப்பம் என்றும் அதாவது பங்குபற்றுவதா இல்லையா என்பது அவரின் விருப்பம் எனவும் மணிரத்தினம் கூறியுள்ளார்.

ஹஜ் கடமைகளுக்கான முன்னேற்பாடு; ஐவர் கொண்ட குழு ஜனாதிபதியால் நியமனம்

hajj.jpgஹஜ் கடமைகளுக்கான முன்னேற்பாடு களைக் கவனிப்பதற்கு ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் ஸாலி முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களப் பணிப்பாளர் வை. எம். எம். நவவி ஆகியோரே இந்தக் குழுவின் உறுப்பினர்களாவர்.

ஹஜ் ஏற்பாடுகள் சம்பந்தமாக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பெளஸி நேற்று (10) சவூதி அரேபியா பயணமானார். ஏனைய நால்வரும் இன்று (11) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்

கிளிநொச்சி நீதி மன்றம் திறந்துவைக்கப்பட்டது

lawyer.jpgதற்காலிக கட்டடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இன்று காலை 9:00 மணிக்கு குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதனினால் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி நீதிமன்றுக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றிய அலுவலர்கள் கடந்த முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பிரதேசத்தில் சுமார் 30 வருட காலத்தின் பின்னர் இந்த நீதிமன்றம் இயங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வடக்கில் வீடமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் – மாங்குளத்தில் விமல் வீரவன்ஸ

vimal.jpgவடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் இலங்கை வீடமைப்புத்திட்ட செயற்பாட்டில் தேசிய திட்டமொன்று வகுக்கப்படவேண்டும் என்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறினார். முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மாங்குளத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காணியில் நேற்றுக் காலை அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. இந்த அலுவலகம் 10 மில்லியன் ரூபாசெலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.  இதேவேளை, துணுக்காய் பகுதியில் மீள்குடியேறிய மக்களை நேரில் சென்று பார்வையிட்ட விமல் வீரவன்ஸ், அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

500 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை

ltte_child_soldiers.jpgபுனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தகுதி பெற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர். புலிகள் வெற்றிகொள்ளப்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடப்படவுள்ள படைவீரர் வாரத்தை முன்னிட்டே புனர்வாழ்வழிக்கப்பட்ட ஐனூறு பேர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

லண்டன் உள்ளுராட்சி தேர்தலும் புலம்பெயர்ந்த தமிழ் வாக்காளர்களும் புலம்பெயராத சிந்தனையும் : த ஜெயபாலன்

London_Local_Councilsலண்டனில் மே 6ல் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் 50 வரையான தமிழர்கள் போட்டியிட்டு 13 பேர் உள்ளுராட்சி ஆசனங்களைப் பெற்றுள்ளனர். லண்டனில் இதுவரை நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் இவ்வளவு தொகையான தமிழர்கள் போட்டியிட்டதும் பத்துக்கும் மேற்பட்ட ஆசனங்களை வென்றதும் இதுவே முதற்தடவையாகும். கடந்த தேர்தலில் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்ட போல் சத்தியநேசன், மைக் செல்வா, மனோகரன் தர்மராஜ், தயா இடைக்காடர், நிசாம் அலாவி இஸ்மைல், யோகன் கோகநாதன், எலிசா பாக்கியதேவி மஅன், சசிகலா, கைருள் கரீமா மரிக்கார் ஆகியோர் இம்முறை மீண்டும் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் நியூஹாமில் போட்டியிட்டு நான்காவது முறையாக கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்ட போல் சத்தியநேசன் ஆகக் கூடுதலான வாக்குகளைப் (3453) பெற்றுள்ளார்.

தமிழ், தமிழ் பேசும் கவுன்சிலர்களுள் மைக் செல்வா தமிழகத்தை பின்னணியாகக் கொண்டவர். நிசாம் அலாவி இஸ்மைல், கைருள் கரீமா மரிக்கார் ஆகிய இருவரும் இலங்கைப் பின்னணியைக் கொண்ட முஸ்லிம்கள். ஏனையவர்கள் இலங்கைப் பின்னணியை உடைய தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே தமிழ் பேசுபவர்கள்.

தமிழ் கவுன்சிலர்களின் அரசியல்:

Cllr Thaya Idaikadar with former TNA MP Pathmini Sithambaranathanதமிழ் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பதினொருவரில் (இரு முஸ்லீம் கவுன்சிலர்கள் நீங்கலாக) பெரும்பாலானவர்கள் தமிழ் தேசியத்தை முன்வைத்தே தமிழ் வாக்கு வங்கியை தமதாக்கிக் கொண்டனர். இவர்கள் தமிழ் தேசியத்தில் முழுமையாக நம்பிக்கை வைக்காத போதும் அதன் அலையில் செல்வதன் மூலமே தங்கள் வாக்கு வங்கியைப் பலமாக்க முடியும் என்ற நம்பிக்கையில் செயற்பட்டனர். இவர்களில் குறிப்பாக தயா இடைக்காடர், சுரேஸ் கிருஸ்ணா அவருடைய துணைவியார் சுரேஸ் சசிகலா, யோகன் யோகநாதன் அவருடைய மகன் ரோகான் யோகநாதன் (இம்முறை தெரிவாகவில்லை) ஆகியோர் முக்கியமானவர்கள். ஏனையவர்களும் இந்த தமிழ் தேசிய அலைக்கு ஓரளவுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலையிலேயே இருந்தனர். 

மனோ தர்மராஜ் பெரும்பாலும் தமிழ் என்ற வகையில் தன்னை அடையாளப்படுத்துபவர் அல்ல.

Lab_Cllr_Paulமாறாக போல் சத்தியநேசன் இந்த ‘புலித் தேசியம்’ ஆகிப் போன தமிழ் தேசிய அலைக்கு எதிரானவராகவே கணிக்கப்பட்டார். வன்னி யுத்தம் உக்கிரமாகி இருந்தவேளை தமிழ் கவுன்சிலர்களும் கவுன்சிலராக வர விரும்பியவர்களும் புலித் தேசியத்திற்கு ஆதரவான நிலையை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போதும் போல் சத்தியநேசன், வரன் கனகசுந்தரம் போன்றவர்கள் யுத்தத்தை நிறுத்தும்படி இலங்கை அரசைக் கேட்டுக்கொண்ட அதேநேரம் மக்களை பணயக் கைதிகளாக வைத்திராமல் அவர்களை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இவற்றைச் சித்தரிக்கும் தெருநாடகம் தேசம்நெற்றால் ஈஸ்ற்ஹாம் வீதியில் நடத்தப்பட்டதற்கு ‘புலித் தேசியம்’ கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இத்தெரு நாடகத்தை இயக்கியவர்களில் ரெட் யூனியன் சோசலிஸ்ட் கட்சி கூட்டில் போட்டியிட்ட உதயசேனன் தனபாலசிங்கமும் முக்கியமானவர்.

பிரித்தானிய உள்ளுராட்சி மன்றுக்கு கவுன்சிலராகத் தெரிவு செய்யப்படுபவர் தனது உள்ளுர் பிரதேசத்திற்கு காத்திரமான சேவையை வழங்க வேண்டும் என்பதே நோக்கம். உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும் தமிழ் தேசிய அலையானது இந்த உள்ளுராட்சி மன்ற தமிழ் வேட்பாளர்களை வைத்து கட்டமைக்கும் அரசியலோ மிகவும் போலியானது. ஆனால் இதனை உணர்ந்திருந்த கவுன்சிலர்களும் தங்கள் வாக்கு வங்கியை மட்டும் கருத்தில் கொண்டு புலித் தேசியத்தின் அலைக்கு எடுபட்டனர். இவர்களது தேர்தல் பிரிவில் சகல இன மக்களும் வாழ்ந்த போதும் தமிழ் வாக்காளர்கள் மொத்தமாக வாக்கு அளித்தால் வென்றுவிடலாம் என்ற கணிப்பில் (அக்கணிப்பு உண்மையானதும் கூட) இவர்கள் காலத்துக்குக் காலம் தமிழ் மக்களின் அரசியல் அவலத்தை தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Eliza_PackiaDevi_Mannஇவர்களில் எலிசா பாக்கியதேவி மஅன் விதிவிலக்கானவர். இவர் தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவரே அன்றி அதனை வைத்து அரசியல் செய்பவர் அல்ல. அந்த அவசியம் அவருக்கு இல்லை. ஏனெனில் அவர் தமிழ் வாக்காளரில் தங்கியில்லை.

தமிழ் கவுன்சிலர்கள் தாங்கள் வாழும் தேர்தல் பிரிவின் சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவதுடன் அம்மக்களை நோக்கி தங்கள் சேவைகளை வழங்கத் தவறும்பட்சத்தில் அவர்கள் தங்கள் ஆனசங்களை இழக்க நேரிடலாம்.

ஒரே நபர்கள் வேறுவேறு தொப்பிகளை அணிவது போல் புலித் தேசியவாதிகள் பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானக்குழு, உலகத் தமிழர் பேரவை, ரமிழ்ஸ் போர் லேபர், ரமிழ்ஸ் போர் கொன்சவேடிவ் என்ற தொப்பிகளை மாறி மாறி அணிகின்றனர். சில சமயங்களில் இவர்களுக்கு தாங்கள் எந்தத் தொப்பியை அணிந்துள்ளோம் என்று தெரியாமலேயே நடந்தும் கொள்கின்றனர். இந்தத் தொப்பிகளை சில தமிழ் கவுன்சிலர்களும் தங்கள் வாக்கு வங்கியைப் பலப்படுத்த விரும்பி அணிந்து கொள்கின்றனர். சிலர் விரும்பாமலேயே அணிந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். 

இவர்களுடைய அரசியல் மாறாட்டம் மிகவும் கேலிக்கூத்தானதாக உள்ளது. நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் நின்ற டேவிட் ஜோசப் தாங்கள் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு கட்சியை ஆதரிக்கப் போவதாக அறிவித்தார். பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் ஒரு தேர்தல் பிரிவில் தொழிற்கட்சிக்கு பிரச்சாரம் செய்தனர். அதே நபர்கள் சில மைல்களுக்கு அப்பால் கொன்சவேடிவ் கட்சிக்கு பிரச்சாரம் செய்கின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும் அதற்கென்று கொள்கைகள் உள்ளது. அவற்றின் கொள்கை அடிப்படையில் உடன்பாட்டுக்குவராது தனிப்பட்ட வேட்பாளர்களின் அடிப்படையில் அரசியலை முன்னெடுத்து நம்பகத்தன்மை அற்றவர்களாகவும் கொள்கையற்றவர்களாகவும் தங்களை இனம்காட்டிக் கொள்கின்றனர். இவ்வாறான முரண்நகையான அரசியல் செயற்பாடுகள் கடந்தகாலங்களில் தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியது. அதனையே இன்னமும் தொடர்கின்றனர். 

வெற்றியும் தோல்வியும்:

Lab_Cllr_Jeyaranjan_Thavathurayதவத்துரை ஜெயரஞ்சன், கனபதிப்பிள்ளை நகீரதன், கிருஸ்ணா சுரேஸ், செல்லையா லோகேந்திரன் ஆகிய நால்வரும் புதிதாக இம்முறை கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். தவத்துரை ஜெயரஞ்சன், கிருஸ்ணா சுரேஸ் ஆகிய இருவரும் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவி இருந்தனர். இம்முறை அவர்கள் வெற்றியைத் தழுவிக் கொண்டனர். மாறாக சென்றமுறை கவுன்சிலராக இருந்த யோகன் யோகநாதனின் மகன் றோகான் யோகநாதன் இம்முறை தனது ஆசனத்தை இழந்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில போட்டியிட்ட சிலர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னெடுத்த பரமகுமாரன் இம்முறை போட்டியிடவில்லை. ‘ஒரு பேப்பர்’ ஆசிரயர் கோபி கோபிரட்ணமும் இம்முறை போட்டியிடவில்லை. இவர்கள் கடந்த தேர்தலில் தொழிற்கட்சியில் போட்டியிட்டு இருந்தனர். தங்களுக்கு வெல்வதற்கு வாய்ப்புள்ள ஆசனங்கள் வழங்கப்படாததால் தேர்தலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகத் தெரியவருகின்றது. ஆனால் இத்தடவை தொழிற் கட்சியில் போட்டியிட்ட 16 தமிழ் பேசும் வேட்பாளர்களில் 10 பேர் கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டனர். இன்னும் ஒரு சிலர் ஓரிரு நூறுக்கும் குறைவான வாக்குகளால் தோல்வியைத் தழுவி இருந்தனர்.

சென்ற தேர்தலில் கொன்சவேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட பீற்றர் ரட்ணராஜா இத்தடவை போட்டியிடவில்லை.

போல் சத்தியநேசன் மற்றும் புலித் தேசியத்திற்கு ஆதரவு வழங்காத வேட்பாளர்களுக்கு எதிரான சேறடிப்பு பிரச்சாரம் ஒன்று நியூஹாமில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் அப்பிரச்சாரம் பெரும்பாலும் அர்த்தமற்றதாகிப் போனது. போல் சத்தியநேசன் 3500க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டு நான்காவது தடவையாகவும் கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டார். ‘புலித் தேசியம்’ அணியில் நின்றவர்களைக் காட்டிலும் அவர் 1000 வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

Senan - Trade Union & Socialist Coalitionஇத்தேர்தலில் சேனன் என அறியப்பட்ட உதயசேனன் தனபாலசிங்கம் நிராகரிக்கப்பட்டமை கவனத்திற்குரியது. தான் வாழ்கின்ற பகுதியில் மட்டுமல்லாமல் உலகின் எப்பாகத்திலும் ஒடுக்கப்படுகின்ற சமூகத்திற்காக நீண்டகாலமாகப் போராடி வருபவர். உள்ளுர் விப்ஸ்குரொஸ் மருத்துவமனையின் சில பிரிவுகள் மூடப்படுவதற்கு எதிராகவும் இந்தோனேசியக் கடலில் தத்தளிக்கும் அகதிகளுக்காகவும் குரல் கொடுக்கும் இவருக்கும் இவரது கட்சிக்கும் மிகக் குறைந்த வாக்குகளே கிடைத்துள்ளது. போட்டியிட்ட 50 வரையான வேட்பாளர்களில் சேனன் 104 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இவர் போட்டியிட்ட தேர்தல் பிரிவிலும் இவரது வாக்கே மிகக் குறைந்ததாக உள்ளது.

மக்களுக்காக குரல் கொடுக்கும் ரேட் யூனியன் சோசலிஸ்ட் கோஓலிசன் வாக்காளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கத் தவறிவிடுகின்றது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை கையிலெடுத்து பல்வேறு போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்து போதும் இவர்களால் லண்டன் தமிழ் மக்களை தம் பக்கம் வெற்றி கொள்ள முடியவில்லை. ரமிழ்ஸ் போர் லேபர், ரமில்ஸ் போர் கொன்சவேடிவ் என்றெல்லாம் அமைப்புகள் உருவாகிய போதும் ரமிழ்ஸ் போர் சோசலிஸ்ட் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்த முடியவில்லை. இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் மட்டுமல்ல பெரும்பான்மை மக்களுக்கும் இடையே உள்ள ஒவ்வாத இரசாயன மாற்றத்தை மாற்றாதவரை இவர்கள் தொடர்ந்தும் நிராகரிக்கப்படும் நிலையே உள்ளது. இது லண்டனில் மட்டுமல்ல இலங்கையில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் நிலையும் இதுவாகவே உள்ளது. 

Varatheeswaran_Kஇக்கட்சியைக் காட்டிலும் சுயேட்சையாக போட்டியிட்ட வரன் கனகசுந்தரம் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. வாக்குகளை வைத்து கட்சிகளின் கொள்கைகளை ஒப்பிடுவது மதிப்பீடு செய்வதோ சிறந்த அணுகுமுறையாக இல்லாத போதும் தேர்தலின் முடிவில் யார் மக்களுடைய அங்கிகாரத்தைப் பெறுகிறார்கள் என்பதே தீர்மான சக்தியாக அமைகின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதித்துவம்:

புலம்பெயர்ந்து லண்டனில் கணிசமான தொகையினர் வாழ்ந்த போதும் பிரித்தானிய பிரதான அரசியல் நீரோட்டத்தில் இவர்கள் ஒரு ஓரமாகவே நிற்கின்றனர். 100 000 தமிழ் வாக்காளர்களுக்கு மேல் லண்டனிலும் லண்டனைச் சுற்றிய புறநகர்ப் பகுதிகளில் உள்ள 32 உள்ளுராட்சிப் பிரிவுகளிலும் வாழ்கின்றனர். 32 உள்ளுராட்சிப் பிரிவுகளுக்கும் 1849 கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேரே தமிழ் பின்னணியை உடையவர்களாக இருந்துள்ளனர். 

பாராளுமன்றத் தேர்தலுக்கு மாறாக உள்ளுராட்சித் தேர்தலில் லேபர் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ளது. லேபர் கட்சி 864 ஆசனங்களையும் கொன்சவேடிவ் கட்சி 748 ஆசனங்களையும் லிபிரல் டெமொகிரட் கட்சி 217 ஆசனங்களையும் ஏனையவை 20 ஆசனங்களையும் வென்றுள்ளன. 13 ஆண்டுகாலத் தொடர்ச்சியான ஆட்சிக்குப் பிற்பாடும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் லேபர் கட்சி எதிர்பார்த்திராத வெற்றியைச் சந்தித்து உள்ளது. இது பல தமிழ் கவுன்சிலர்கள் வெல்வதற்கும் வாய்ப்பை அளித்துள்ளது.

ஒரு உள்ளுராட்சித் தேர்தல் பிரிவில் சராசரியாக 9000 முதல் 10000 வரையான வாக்காளர்கள் இருப்பர். வழமையான உள்ளுராட்சித் தேர்தல்களில் 30 வீதம் முதல் 40 வீதமான வாக்காளர்களே வாக்களிப்பில் ஈடுபடுவதால் தமிழ் வாக்குகள் மொத்தமாக தமிழ் ஒரு வேட்பாளருக்குச் செல்லுமாயின் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அந்த வகையில் தமிழ் வேட்பாளர்களும் வாக்காளர்களும் இந்த வாக்குக் கணிப்பீட்டை சரிவரச் செய்ய முடியுமாயின் 50க்கும் மேற்பட்ட தமிழ் கவுன்சிலர்கள் உள்ளுராட்சிமன்றுக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

Lab_Cllr_Sasikala100 000 தமிழ் வாக்காளர்களும் சம அளவில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் உள்ளுராட்சிப் பிரிவுகளிலும் பரவலாக வசிக்கவில்லை. குறிப்பாக நியூஹாம், ரெட்பிரிஜ், ஹரோ, பிரன்ற், குரொய்டன், வொன்ஸ்வேர்த் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சில உள்ளுராட்சிப் பிரிவுகளிலே செறிவாக வாழ்கின்றனர். குறிப்பாக ஹரோவை எடுத்துக் கொண்டால் அங்கு 6 தமிழ் கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அதன் அளவுக்கு அல்லது அதிலும் அதிகமாக தமிழ் மக்களைக் கொண்ட குட்டி யாழ்ப்பாணம் என்றழைக்கப்படும் நியூஹாமில் போல் சத்தியநேசன் மட்டுமே கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். தமிழ் மக்கள் அதிகம் வாழாத பகுதிகளில் இருந்தும் தமிழ் கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக தமிழ் மக்களே இல்லாத சவுத்வாக் கவுன்சிலில் இருந்து எலிசா பாக்கியவதி மஅன் மூன்றாவது தடவையும் கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். ஆகவே தமிழ் மக்கள் தங்கள் உள்ளுராட்சி மன்றப் பிரிவுகளில் எதிர்காலத்தில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்:

தமிழ் வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளாமை, பதிவு செய்த வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தாமை என்பன தமிழ் மக்களின் உள்ளுராட்சிமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. மேலும் கவுன்சிலராக வர விரும்புபவர்கள் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் கட்சியில் இணைந்து தங்களுக்கு வெல்வதற்கான வாய்ப்புள்ள ஆசனங்களை எதிர்பார்க்கின்றனர். அவ்வாறான ஆசனம் வழங்கப்படவில்லை என்றவுடன் அந்தக் கட்சியைவிட்டுவிட்டு அடுத்த தேர்தலுக்கு வேறுகட்சிக்குச் செல்கின்றனர். மேலும் கொள்கையின் அடிப்படையில் கட்சியை ஆதரிக்காமல் தங்கள் சுயநல அடிப்படையில் செயற்படுவதால் இவர்கள் கட்சியிலும் வாக்காளர் மத்தியிலும் நம்பகத்தன்மையைப் பெறுவதில்லை. 

Lab_Cllr_Suresh_Krishnaஆனால் தவத்துரை ஜெயரஞ்சன், சுரேஸ் கிருஸ்ணா ஆகியோர் தாங்கள் இரு தடவை தோற்றுப் போனபோதும் அதே கட்சியில் தொடர்ந்தும் நின்று கட்சிக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கி இம்முறை மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். மக்களது சேவையை முன்னிறுத்தி கட்சிக்கு நம்பகமாக ஒருவர் தொடர்ந்தும் தனது அரசியல் கடமையைச் செய்வாராயின் அவருக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் என நான்காவது தடவையாக கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள போல் சத்தியநேசன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு கட்சியில் நிற்பதும் கட்சிக்கு முரணாகச் செயற்படுபவர்களும் அரசியல் வியாபாரிகள் என்றும் போல் சத்தியநேசன் குற்றம்சாட்டினார்.

பிரித்தானிய அரசியல் கட்சிகளுடன் தமிழ் மக்களின் ஈடுபாடு:

Brent         : Queensbury – Kanapathipillai Naheerathan  (Labour)
Croydon    : Broad Green – SELVA Mike (Labour)
Harrow      : Roxbourne – Manoharan Dharmarajah (Labour)
Harrow      : Headstone South – Sasikala Suresh (Labour)
Harrow      : Queensbury – Nizam Alavi Ismail (Labour)
Harrow      : Roxeth – Thayapara Idaikkadar (Labour)
Harrow      : Rayners Lane – Krishna Suresh (Labour)
Harrow      : West Harrow – Kairul Kareema Marikar (Labour)
Kingston    : St Mark’s – YOGANATHAN Yogan (Liberal Dem)
Newham    : Eastham North – Paul Duraisamy Sathianesan  (Labour)
Merton      : Cannon Hill – Lohendran Chelliah  (Conservative)
Redbridge  : Newbury – Jeyaranjan, Thavathuray (Labour)
Southwark : Riverside – Eliza Packia Devi Mann (Liberal Dem)

இம்முறை கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் எலிசா பாக்கியதேவி மஅன், யோகன் யோகநாதன் ஆகிய இருவரும் லிபிரல் டெமோகிரட் கட்சியில் நின்றும் ஏனைய 10 கவுன்சிலர்களும் லேபர் கட்சியில் நின்றும் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெற்ற அதே தினம் நடைபெற்ற பிரித்தானிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மையைப் பெறாவிட்டாலும் அதிகப் படியான ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்க முயற்சிக்கும் கொன்சவேடிவ் கட்சியில் இருந்து ஒரு தமிழர் செய்யப்பட்டு உள்ளார். கொசவேடிவ் கட்சியின் சார்பில் 13 பேர் போட்டியிட்ட போதும் ஒருவரே வெற்றி பெற்றார். கிறிஸ்ரியன் பீப்பிள்ஸ் அலையன்ஸ், கிரீன் கட்சி ஆகியவிற்றில் முறையே 5 வேட்பாளர்களும் 4 வேட்பாளர்களும் போட்டியிட்டனர் அவர்களும் வெற்றி பெறவில்லை. சுயேட்சையாக இரு தமிழர்கள் போட்டியிட்டனர். அவர்களும் வெற்றி பெறவில்லை. ரேட்யூனியன் சோசலிஸ்ட் கோஓஎலிசனில் போட்டியிட்டவரும் வெற்றி பெறவில்லை.

தெரிவு செய்யப்பட்ட 13 கவுன்சிலர்களில் 6 கவுன்சிலர்கள் கரோ உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். இங்கு 12 தமிழ் பேசுவோர் தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். அடுத்து நியூஹாம், பிரன்ற் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களில் ஏழு, ஏழு பேர் போட்டியிட்டு இருந்தனர். இவ்விரு உள்ளுராட்சி மன்றுக்கும் ஒவ்வவொரு கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்தனர். கிங்ஸ்ரன் அப்ஒன் தேம்ஸ் உள்ளுராட்சி மன்றில் ஆறு தமிழர்கள் போட்டியிட்டு ஒரு தமிழ் கவுன்சிலர் வெற்றி பெற்றிருந்தார். மேட்டன் கவுன்சிலில் மூவர் போட்டியிட்டு கொன்சவேடிவ் கட்சியில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். குரொய்டன் உள்ளுராட்சி மன்றில் 3 தமிழர்கள் போட்டியிட்டு இருந்தனர். இவர்களில் ஒருவர் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். ரெட்பிரிஜ் உள்ளுராட்சிப் பிரிவில் போட்டியிட்ட இரு தமிழர்களில் ஒருவர் கவுன்சிலராகத் தெரிவானார். தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழாத சவுத்வாக் உள்ளுராட்சி மன்றில் போட்டியிட்ட ஒருவர் கவுன்சிலராகத் தெரிவானார்.

லண்டன் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளும்:

Paul Duraisamy Sathianesan  _ _ _ _ _  Labour              3,453
SELVA Mike _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _   Labour               3451
Jeyaranjan, Thavathuray _ _ _ _ _ _  _ Labour               3305    
Kanapathipillai Naheerathan _ _ _ _ _   Labour               2713 
Manoharan Dharmarajah _ _ _ _ _ _ _  Labour               2662
Thayapara Idaikkadar _ _ _ _ _ _ _ _ _Labour               2514
Nizam Alavi Ismail _ _ _ _ _ _  _ _ _ _  Labour               2324
YOGANATHAN Yogan _ _ _ _ _ _ _  _ Liberal Dem      2169
Eliza Packia Devi Mann _ _ _ _ _ _ _ _  Liberal Dem     2069
Sasikala Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour               1914       
Krishna Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _ _  Labour              1904
Lohendran Chelliah  _ _ _ _ _ _ _ _ _ _Conservative    1860 
Kairul Kareema Marikar _ _ _ _ _ _ _ _Labour              1831

Thambimuthu Selvaratnam _ _ _ _ _ _  Labour              2216
Murugesu Sivarajah _ _ _ _ _ _ _  _ _ _Liberal Dem      2115
YOGANATHAN Rohan _ _ _ _ _ _ _ _   Liberal Dem     1933       
KUGAN Kamala _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Liberal Dem     1784                
Sivanantharasa Panchadcharam _ _ _ _ Conservative    1628
Marshel Amutharasan _ _ _ _ _ _ _ _ _ Liberal Dem     1614
Uma Kumaran _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour              1535
EMMANUEL Fabion _ _ _ _ _ _ _ _  _ _ Conservative   1521           
Sockanathan Keitheeswaran _ _ _ _ _ _ Conservative    1437
Shivakuru Selvathurai _ _ _ _ _ _ _ _ _ Conservative    1419
JEYADEVA Selva _ _ _ _ _ _ _ _ _ _ _  Conservative    1418
DEWAN Rajesh Kumar _ _ _ _ _ _ _ _   Christian PA     1299
Moses Rajkumar  _ _ _ _ _ _ _ _ _ _ _  Conservative    1,245
Arujuna SIVANANTHAN _ _ _ _ _ _ _  Conservative    1,244
Sivakumar CHELLIAH _ _ _ _ _ _ _ _   Labour              1224
RATNARAJAN, KarrunaThewi _ _ _ _  Conservative    1074
Nadanakumaran, Jeya _ _ _ _ _ _ _ _ _Conservative    1052
Thaneswaran, Thane  _ _ _ _ _ _ _ _ _ Conservative      962
Duraimurugan Kannan _ _ _ _ _ _ _ _ _Conservative      911
VALLIPURAM Kulendran _ _ _ _ _ _    Liberal Dem       933
Arunasalam Pirapaharan _ _ _ _ _ _ _ _Liberal Dem       794
Sakthivel Karuppiah _ _ _ _ _ _ _ _ _ _Liberal Dem        778
Vasantha Mahadevan _ _ _ _ _ _ _ _ _  Conservative      717
Waran Kanagasundaram _ _ _ _ _ _ _ _ Independent      533
SELLAYAH Dyan _ _ _ _ _ _ _ _ _ _ _ _Labour                474 
JAYASUNDERA Niranjan _ _ _ _ _ _  _ Labour                 371                  
Thivendaram Balaraman _ _ _ _ _ _ _ _ Green                  341
Selvarani Balaraman _ _ _ _ _ _ _ _ _ _ Green                  309
Balakrishnasharma Srikanthan _ _ _ _ _ Green                  260 
Sella Varathalingam Jeyakumar _ _ _ _  ChristianPA         186
Subashini Srikanthan _ _ _ _ _ _ _ _ _ _Green                  184
Mauran Uthayakumar _ _ _ _ _ _ _ _ _ Christian PA        157  
Jayakrishna, Jayarajasingham _ _ _ _ _  ChristianPA         149
Nakkeeran Arasaratnam _ _ _ _ _ _ _ _ Independent       146    
Senan THANABALASINGAM _ _ _ _ _  Socialist Coal’n   104
Danaraj Joseph _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _Christian PA         78

கவுன்சில்களின் அடிப்படையில் தமிழ் வாக்காளர்கள்: 

Brent
Alperton
Murugesu Sivarajah _ _ _ _ _ _ _  _ _ _  Liberal Dem   2115

Preston
Thambimuthu Selvaratnam _ _ _ _ _ _  Labour             2216

Queensbury
Selvarani Balaraman _ _ _ _ _ _ _ _ _   Green               309 
Thivendaram Balaraman _ _ _ _ _ _ _  Green               341  
Kanapathipillai Naheerathan _ _ _ _ _   Labour             2713    Elected

Sudbury
Balakrishnasharma Srikanthan _ _ _ _  Green               260   
Subashini Srikanthan _ _ _ _ _ _ _ _ _  Green              184  

Croydon
Broad Green
SELVA Mike _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour             3451      20.1%     Elected
EMMANUEL Fabion _ _ _ _ _ _ _ _ _ _Conservative      1521       8.9%

West Thornton.
JEYADEVA Selva _ _ _ _ _ _ _ _ _ _   Conservative  1418        7.7% 

Enfield
Edmonton Green Ward
RATNARAJAN, KarrunaThewi _ _ _   Conservative  1074

Greenwich
Middle Park and Sutcliffe
Arujuna SIVANANTHAN _ _ _ _ _ _ _Conservative  1,244

Harrow
Roxbourne
Manoharan Dharmarajah _ _ _ _ _ _ _ Labour            2662       (17.76%)      Elected
Sockanathan Keitheeswaran _ _ _ _ _  Conservative  1437         (9.59%)
Shivakuru Selvathurai _ _ _ _ _ _ _ _  Conservative  1419         (9.47%)

Headstone South
Sasikala Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _  Labour            1914         (12.68%)     Elected
Mauran Uthayakumar _ _ _ _ _ _ _ _ Christian PA   157           (1.04%)

Queensbury
Nizam Alavi Ismail _ _ _ _ _ _ _ _ _ _Labour           2324         (15.75%)      Elected

Roxeth
Thayapara Idaikkadar _ _ _ _ _ _ _ _ Labour           2514          (16.97%)      Elected

Rayners Lane
Krishna Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _  Labour            1904           (11.62%)      Elected
Sivanantharasa Panchadcharam _ _   Conservative  1628             (9.94%)
Marshel Amutharasan _ _ _ _ _ _ _  Liberal Dem    1614             (9.85%)
Danaraj Joseph _ _ _ _ _ _ _ _ _ _ _ Christian PA       78             (0.48%)

Headstone North
Sella Varathalingam Jeyakumar _ _  ChristianPA       186             (1.24%)

West Harrow
Kairul Kareema Marikar _ _ _ _ _ _ Labour               1831           (12.81%)       Elected

Pinner South
Uma Kumaran _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour             1535             (10.00%)

Havering
Emerson Park
Nakkeeran Arasaratnam _ _ _ _ _ Independent       146

Kingston upon Thames

Berrylands
YOGANATHAN Rohan _ _ _ _ _    Liberal Dem       1933         (14%)

Beverley
SELLAYAH Dyan _ _ _ _ _ _ _ _  Labour                  474           (3%)

Coombe Vale
KUGAN Kamala _ _ _ _ _ _ _ _ _ Liberal Dem       1784          (13%)
DEWAN Rajesh Kumar _ _ _ _ _  Christian PA       1299           (1%)

St Mark’s
YOGANATHAN Yogan _ _ _ _ _  Liberal Dem       2169          (15%)      Elected
JAYASUNDERA Niranjan _ _ _ _ Labour                  371            (3%)

Merton
Longthornton
Nadanakumaran Jeya _ _ _ _ _ Conservative      1052 

Cannon Hill
Jayakrishna, Jayarajasingham _  ChristianPA        149
Lohendran Chelliah _ _ _ _ _ _ _Conservative     1860 

Newham
Eastham North
Duraimurugan Kannan _ _ _ _ _ Conservative      911
Vasantha Mahadevan _ _ _ _ _ _Conservative      717
Paul Duraisamy Sathianesan  _ _ Labour             3,453     Elected
Sakthivel Karuppiah _ _ _ _ _ _  Liberal Dem        778

Wall End
Moses Rajkumar  _ _ _ _ _ _ _ _Conservative      1,245
Waran Kanagasundaram _ _ _ _ Independent         533
Arunasalam Pirapaharan _ _ _ _ Liberal Dem         794

Redbridge
Clementswood
Thaneswaran, Thane  _ _ _ _ _ Conservative         962

Newbury   
Jeyaranjan, Thavathuray _ _ _ Labour                   3305      Elected   

Southwark
Riverside
Eliza Packia Devi Mann _ _ _ _Liberal Dem           2069       Elected

Walthamforest
Larkswood
Sivakumar CHELLIAH _ _ _ _ Labour                   1224

Higham Hill
Senan THANABALASINGAM _Socialist Coalition  104

Wandsworth
Tooting
VALLIPURAM Kulendran _ _ _Liberal Dem          933

‘அரந்தலாவ கொலைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ – பிரதியமைச்சர் முரளிதரன்

karuna.jpgஅரந்தலா வையில் பெளத்த பிக்குகளும் சிவிலியன்களும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லையென பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கண்டிக்கு நேற்று விஜயம் செய்த பிரதியமைச்சர் முரளிதரன், அஸ்கிரிய, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேசும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

‘அரந்தலாவ பெளத்த குருக்கள் மற்றும் அப்பிரதேச சிவிலியன்கள் ஆகியோர்களினது கொலைச் சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை. நான் அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபாகரனோடு செயலாற்றி வந்தேன்.’ ‘பொட்டு அம்மான், நியூட்டன், குமாரப்பா போன்றோரே இதனைச் செய்தனர்.

இந்த விடயம் இராணுவத்தினருக்கும் நன்கு தெரியும். வீணாக என்மீது பழி சுமத்தப்படுகிறது’ என்றும் அவர் தெரிவித்தார். பிரதி அமைச்சர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் :-

1,63,000 பேர் அகதிகள் தற்போது அவர்களினது சொந்த இடங்களுக்கு மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகள் செய்யப் பட்டுள்ளன. எனினும் இவர்கள் நிரந்தரமான இயல்பு வாழ்க்கை யைப் பெறுவதற்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடியிருப்பு கள், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் செய்துதர வேண்டும். ஆகவே இதற்காக சகல அமைச்சர்களிடமும் கலந்தாலோசித்து துரித நடவடிக்கை களை மேற்கொள்ளவுள்ளேன்.

அகதிகளாகவும் அநாதை களாகவும் உள்ள மக்களின் வாழ்வாதார சுபீட்சத்திற்காக தமிழ், முஸ்லிம், சிங்களமென்ற வேறு பாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நான் சமமான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியினதும் அரசாங்கத் தினதும் அமைச்சுகளினதும் உதவி கள் கிட்டும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் திரைமறைவில் தொடர்பாடல்கள்

Sambanthan_R_TNAஇனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் திரைமறைவில் தொடர்பாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழ்க் கூட்டமைப்பினருடன் அரசாங்க தரப்பினர் மேற்கொண்டுள்ள தொடர்பாடல்களின் உள்ளடக்கம் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் “த நேஷன்” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் எதனையும் கூறியிருக்கவில்லை. ஆனால், அந்தத் தொடர்பாடல்கள் தற்போது ஆரம்பகட்டத்தில் இருப்பதாக மட்டும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் அரச தரப்பிலிருந்து அவருடன் தொடர்பு கொண்ட உறுப்பினர்கள் யார் என்பதைப் பற்றிக் கூட அவர் கூறியிருக்கவில்லை. பெயர்களை வெளியிடுவதற்கு தனக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லையென சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால்,  இந்தத் தொடர்பாடல்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவையல்ல என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான முன்னகர்வில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும் இந்தியாவின் கருத்துக்கு அமைவாக இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் நம்பப்படுவதாக த நேஷன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும். ஆனால், அவற்றை பகிர்ந்தளிக்க ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் முன்வந்திருக்கவில்லை. கடந்த காலத்தில் இந்த விடயம் தென்னிலங்கைத் தலைவர்களுக்கு பிரச்சினையாக இருந்துவந்தது. அதேசமயம், பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கப்போவதில்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இருதரப்பினரும் கருதியதாக சம்பந்தன் கூறியுள்ளார். மங்கள முனசிங்க தெரிவுக் குழுவிலிருந்து 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரிகா குமாரதுங்க முன்வைத்த யோசனைகள் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்திலான யுத்த நிறுத்த உடன்படிக்கை காலகட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகள் போன்ற பேச்சுவார்த்தைகளின் போது 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்வதென ஆராயப்பட்டதாக சம்பந்தன் கூறியுள்ளார்.

பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் சம்பந்தன்; அரசாங்கத்தின் எந்தவொரு நிறுவனமும் இயங்குவதற்கு பொலிஸ் அதிகாரங்கள் முற்றுமுழுதாக அவசியமானவை என்று கூறியுள்ளார். “பொலிஸார் தங்களது அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்துகின்றார்களா? பொலிஸ் படை மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொலிஸ் சேவையில் ஏதாவது நம்பிக்கையை நாங்கள் கொண்டிருக்க முடியுமென நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். இது தொடர்பாக எம்மிடம் தெளிவான கொள்கை இருக்கவேண்டும். நாட்டைப் பிரிப்பதற்காக நாங்கள் பொலிஸ் அதிகாரத்தை கோரவில்லை. ஆள்வதற்கான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய தேவை உள்ளது. பொலிஸ் அதிகாரங்கள் அடிப்படை அம்சமாகும். அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைக் கொண்டுள்ள ஒவ்வொரு நாட்டிலுமே இது காணப்படுகிறது” என்று சம்பந்தன் வலியுறுத்தி தெரிவித்திருக்கிறார்.

காணி அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சம்பந்தன் 1957 இல் மேற்கொள்ளப்பட்ட பண்டாரநாயக்காசெல்வநாயகம் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயத்தை அவர்களால் ஏன் வழங்கமுடியாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“பண்டாரநாயக்கா போன்ற ஆளுமை உள்ள தலைவரால் இந்த உடன்படிக்கை 1957 இல் கைச்சாத்திடப்பட்டது. அவர் இந்த நாட்டின் உயர்ந்த தலைவர்களின் ஒருவராகும். அத்துடன் அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் குருவாகும். 1957 இல் பண்டாரநாயக்கா வழங்க முன்வந்ததை ஏன் கொடுக்க முடியாது%27 என்றும் சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேர்மையாகவும் நம்பிக்கையாகவும் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் அரசாங்கம் தங்களை நம்பவேண்டுமென விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். “நாங்கள் மிதவாத தமிழ் அரசியல் கட்சியினராகும். வட, கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 18 தமிழ் எம்.பி.க்களில் 14 பேர் எமது கட்சியிலிருந்து வந்துள்ளனர். கடும்போக்கு சக்திகளின் கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. எமது விஞ்ஞாபனத்தில் கடும்போக்கான நிலைப்பாடுகள் இருக்கவேண்டுமென அவர்கள் விரும்பியிருந்தனர். ஆனால், நாங்கள் அவற்றை நீக்கிவிட்டோம். தேர்தலில் அவர்கள் யாவரும் தோற்றுவிட்டனர். நம்பிக்கையில்லாத ஆட்களுக்கு நாங்கள் நியமனப் பத்திரங்களை வழங்கியிருக்கவில்லை. அவர்கள் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு போட்டியிட்டனர். அவர்கள் ஒவ்வொருவருமே தேர்தலில் தோற்றுவிட்டனர். ஆகவே, நாங்கள் மிகவும் நேர்மையுடனும் வெளிப்படையாகவும் செயற்பட்டிருந்தோம்.

கடந்த காலத்தில் கூட செல்வநாயகத்தின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தரப்பானது 100% நேர்மையாக இருந்ததாக சம்பந்தன் நினைவுகூர்ந்திருக்கிறார். 1970 தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெடரல் கட்சியானது பிரிவினைவாதத்தை எந்த வேட்பாளராவது அல்லது கட்சியாவது வரித்துக்கொண்டால் அவர்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு பெடரல் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அவற்றை எமது விஞ்ஞாபனத்தில் நாம் எழுத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதுவே எமது நேர்மைத் தன்மையாகும்.

தீர்வொன்றைக் காண்பதற்கு நீண்டகாலம் எடுக்காது. அதுதொடர்பாக ஜனாதிபதி துரிதமாக செயற்பட வேண்டும். அவரால் எமது ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். அவருடன் மிகவும் நேர்மையாக நாங்கள் இருப்போம். அவரை நாங்கள் ஏமாற்றமாட்டோம். நாங்கள் சிங்கள மக்களை ஏமாற்றமாட்டோம்” என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.

நன்றி-தினக்குரல்

“இந்திய திரைப்பட விழாவில் அமிதாப்பச்சன் ஒருநாள் மட்டும் என்றாலும் பங்கேற்பார்”

indian-film.jpgகொழும்பில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்துகொள்வாரெனவும் ஒருநாள் மட்டும் என்றாலும் அவர் பங்கேற்பார் எனவும் இலங்கை சுற்றுலா சபையின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சாருக்கானும் ஐஸ்வர்யாராயும் நிச்சயமாக கலந்துகொள்வார்கள். அமிதாப்பச்சனும் வருவார். ஒரு தினத்திற்கு என்றாலும் அவர் வருவார் என்று தன்னை இனம் காட்டவிரும்பாத அதிகாரி “எக்ஸ்பிரஸ்” செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

ஜூன் 3-5 வரை இடம்பெறும் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முழு அளவில் இடம்பெறுகின்றன. இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருக்கும் “விஸ் கீராவ்ட் இன்ரர் நஷனல் என்ரர் ரெய்ன்மன்ட் பிரைவேட் லிமிட்டெட்டின்’ சுமார் 50அதிகாரிகள் ஏற்கனவே இங்கு பணியாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே எதிர்ப்பு என்றும் ஏனைய மாநிலங்களிலிருந்து இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் நாட்டில் வைகோ போன்ற அரசியல்வாதிகளிடமிருந்தே இந்த விழா தொடர்பாக எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படுவதாகவும் ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் விடயங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஏனைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சவர்தேச இந்திய திரைப்பட விருது வைபவத்தை இங்கு நடத்துவதால் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை நாட்டில் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பாக அமையும் என்ற கருத்தை இலங்கை உல்லாசப் பயணசபை, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய நிறுவனங்கள் கொண்டுள்ளன. ஆனால், இந்த விழாவில் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பதை தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த் தேசியவாத சக்திகள் எதிர்க்கின்றன. 2007,2009 காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற போரை நியாயப்படுத்துவதாக அமையும் என்று தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியவாத சக்திகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மும்பையிலுள்ள அமிதாப் பச்சனின் இல்லத்தின் முன் தமிழர்கள் குழு ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து எவரின் உணர்வுகளையும் தான் புண்படுத்தப் போவதில்லையெனவும் ஏற்பாட்டாளர்களுடன் கலந்தாராய்ந்த பின்னர் சகலராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்மானத்தை எடுக்கப்போவதாகவும் அமிதாப்பச்சன் கூறியிருந்தார். இதனையடுத்து திரைப்பட விருது விழாவில் அமிதாப் பச்சன் கலந்துகொள்ளமாட்டார் என்ற விதத்திலான ஊகங்களும் வெளிவந்தன.