July

July

கொழும்பிலிருந்து யாழ். வந்து கொண்டிருந்த பஸ் மீது கல்வீச்சு!

நேற்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை மூன்று மணியளவில் அநுராதபுரம் மகாஇலுப்பளம என்ற இடத்திலேயே இக்கல்வீச்சு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், குறித்த பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணத்தை நோக்கி வரும் பஸ்களுக்கு சிங்களப்பகுதிகளில் வைத்து சிலரால் கல்வீச்சு நடத்தப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அப்போது அவ்வாறு வரும் பஸ்களில் கூடுதலாக தமிழர்கள் மட்டுமே பயணித்தனர்.  போர் முடிவிற்கு வந்த பின் தற்போது தென்பகுதிகளிலிருந்து அதிகளவிலான சிங்களப் பயணிகள் யாழ்ப்பாணம் நோக்கி வருகை தருகின்றனர். இந்நிலையில், இக்கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறும் முரளி 800 விக்கெட் வீழ்த்தி சாதனை – புன்னியாமீன்

murali-800-w.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரும் சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை இந்திய வீரர் பி.பி.ஓஜாவின் விக்கெட்டை வீழ்த்தி இவர் படைத்துள்ளார். இது அவரது 133 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்டுக்களை இவர் கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ரெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே 800 விக்கெட்டுக்களை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்

முரளிதரன் நிகழ்த்திய உலக சாதனையை அவரது மனைவி மதிமலர், அவரது குடும்பத்தினர், மகன் உள்ளிட்டோர் நேரில் கண்டு குதூகளித்தனர். 800வது விக்கெட்டை முரளிதரன் வீழ்த்தியதும், ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் குதித்தனர். மைதானத்தில் விழாக்கோலம் காணப்பட்டது.

முரளியின் இச்சாதனை இலங்கைக்கு மட்டுமல்ல, டெஸ்ட் உலகிலே மகத்தானது. 800 டெஸ்ட் விக்கட்டுக்கள் என்பது இலகுவான இலக்கல்ல. இச்சாதனை முறியடிக்கப்பட இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். தற்போது டெஸ்ட் அரங்கை எடுத்துநோக்குமிடத்து முரளியின் சாதனையை ஹர்பஜங்சிங் எட்டுவார் என முரளியே குறிப்பிட்டிருந்தாலும்கூட, முரளியின் சாதனையில் அனைத்தையும் எட்டுவதென்பது மிகக் கடினமான விடயமே.

இலங்கை அணிக்காக 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 28ம் திகதி தனது முதலாவது ரெஸ்ட் போட்டியில் முத்தையா முரளீதரன் விளையாடினார். தனது முதல் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று டெஸ்ட் உலகிலிருந்து ஓய்வுபெறும் முரளி தனது இறுதி நேரத்தில் 800 விக்கட் என்ற இலக்கை எட்டி டெஸ்ட் வரலாற்றில் இலகுவாக மாற்றியமைக்க முடியாத இலக்கை அடைந்தமைக்கு தேசம்நெற் இன் வாழ்த்துக்கள்.

murali.jpgமுத்தையா முரளீதரன் இதுவரை 133 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடி 800 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 337 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 515 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரி அணி மற்றும் தமிழ் யூனியன் கழகம் ஆகியவற்றின் ஊடாக முரளீதரன் முதல் முதலில் கிரிக்கட் உலகிற்கு அறிமுகமானார்.

1972ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி கண்டியில் பிறந்த முத்தையா முரளீதரன், இலங்கை தேசிய அணி, ஆசிய அணி, சென்னை சுப்பர் கிங்ஸ், மத்திய மாகாண அணி, கென்ட், லாங்ஷெயர், ஐ.சீ.சீ. பதினொருவர் அணி, தமி;ழ் யூனியன் ஆகிய அணிகளின் சார்பில் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

1992 ஆகஸ்ட் 28 ஆம் திகதி தனது 20 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெற்றது. முதரளிதரனின் அறிமுக டெஸ்ட் போட்டி இதுவாகும். அப்போட்டியில் “கிரெய்க் மெக்டர்மட்” இன் விக்கட்டே முரளிதரன் கைப்பற்றிய முதலாவது டெஸ்ட் விக்கெட் ஆகும். அப் போட்டியில் முரளி 141 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அப்போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடியின் விக்கெட்டை முரளிதரன் கைப்பற்றினார். மூடியை ஆட்டமிழக்கச் செய்ய முரளி வீசிய பந்து ஓப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து சுமார் 2 அடி தூரம் சுழன்று லெக் ஸ்டம்பை வீழ்த்தியது. அந்த பந்தின் மூலம் கிரிக்கெட் உலகுக்கு திறமையான ஒப் ஸ்பின் பந்து வீச்சாளரின் வருகையை முரளி உணர்த்தினார். பின்னாளில் டொம் மூடி இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. அன்று முதல் முரளிதரன் பந்து வீச்சு திறமை ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பரிணமித்தது.

1993 ஆகஸ்ட்டில் மொரட்டுவையில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முரளிதரன் 104 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை முரளி கைப்பற்றியமை அது முதலாவது தடவையாகும். அந்த டெஸ்ட் போட்டியில் முரளி கைப்பற்றிய 5 விக்கெட்டுக்கள் கெப்லர் வெஸல்ஸ், ஹன்ஸி குரோஞ்ஞே, ஜொன்டிரோட்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளும் உள்ளடங்கியிருந்தது.

முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின் கிரேக் மெக்மெட்டை எல்பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்கச் செய்ததால் தனது கன்னி விக் கெட்டைக் கைப்பற்றினார்.  50 வது விக்கெட்டுக்காக சித்து வையும், 100 வது விக்கெட்டுக்காக ஸ்டீபன் பிளமிங்கையும், 150 வது விக்கெட்டுக்காக கை விட்டலையும் 200 வது விக்கெட்டாக பென் ஹொலி ஹொக்கையும், 250 விக்கெட்டுக்காக நவிட் அஷ்ரப்பையும் 300 வது விக்கெட்டுக்காக ஷோன் பொலக்கையும் 350 விக்கெட்டாக முகம்மட் சரீப்பையும், 400 வது விக் கெட்டாக ஹென்ரி ஒலங்காவையும் 450 விக்கெட்டாக டரல் டபியையும் 500 வது விக்கெட்டாக மிச்சல் கஷ்பரொவிச்சையும் 550 விக்கெட் டாக காலிட் மசுட்டையும் 600 வது விக்கெட்டாக காலிட் மசுட்டையும் 650 விக்கெட்டாக மக்காயா நிட்டி னியையும் 700 வது விக்கெட்டாக செய்யட் ரஷலையும், முரளிதரனின் 709 வது விக்கெட்டாக போல் கொலிங்வூட்டை வீழ்த்தியதன் மூலம் ஷேன் வோனின் 708 விக்கெட் சாதனையை முறியடித்தார். 750 விக்கெட்டாக கங்குலியையும் 800 விக்கெட்டாக பிராக் கன் ஒஜா வையும் வீழ்த்தியே இச் சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார்.

டெஸ்ட் போட்டியொன்றின் இன்னிங்ஸில் அதிக தடவைகள் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தியமை (67 தடவைகள்) டெஸ்ட் போட்டியொன்றில் அதிக தடவைகள் பத்து விக்கட்டுகளை வீழ்த்தியமை (22 தடவைகள்) உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளை முரளீதரன் படைத்துள்ளார். முரளிதரனுக்கு அடுத்தபடியாக வோர்ன் (அவுஸ்திரேலியா), 145 டெஸ்டில் 708 விக்கெட்களை கைப்பற்றி 2 வது இடத்தில் உள்ளார். கும்ளே (இந்தியா) 619 விக்கட்களும், மெக்ராத் (அவுஸ்திரேலியா) 563 விக்கெட்களும், வோல்ஸ் (மே. தீவு) 434 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

முத்தையா முரளீதரனின் சாதனைகளைப் போலவே 1995ம் ஆண்டு முதல் பந்து வீச்சு பாணி தொடர்பிலான சர்ச்சைகளும் பிரல்யமானவை. அவுஸ்திரேலியர்கள் குறிப்பாக நடுவர் டெரல் ஹெயார், ரொஸ் எமர்சன் மற்றும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவார்ட் போன்றவர்கள் முரளீதரன் பந்தை வீசி எறிவதாக விமர்சித்திருந்தனர். இறுதியின் இந்த சர்ச்சைக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்வினை முன்வைக்கும் முகமாக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது.

விஸ்டன் கிரிக்கட் வீரர் உள்ளிட்ட உலக அளவிலான மிக முக்கியமான கிரிக்கட் விருதுகளை முரளீதரன் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டுவன்ரி 20 போட்டிகளில் பங்கேற்பது தெடார்பில் ஆராய்ந்து வருவதாக முரளீதரன் தெரிவித்துள்ளார். உலக நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முரளீதரன் ஓய்வு இலங்கை அணிக்கு மட்டுமன்றி உலக சுழற் பந்து ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

முத்தையா முரளீதரன் டி-20 அறிமுகம் 22 டிச. 2006
முத்தையா முரளீதரன் ஐ.பி.எல் அறிமுகம் 19 ஏப். 2008

முரளீதரனின் சாதனையை முறியடிப்பதென்பது ஹிமாலய சவாலாக அமையும் – மற்றமொரு உலக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன்

முரளீதரன் பந்தை வீசி எறிவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித நியாயமும் கிடையாதென அவர் குறிப்பிட்டுள்ளார். முரளீதரனின் பந்து வீச்சுப் பாணி தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், முரளீதரனை பின்பற்றி பந்து வீசும் இளம் தலைமுறையினர் சில வேலைகளில் பந்தை வீசி எறியக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிறவியிலேயே முரளீதரனின் கைகளில் காணப்படும் வளைவு காரணமாக பந்தை வீசி எறிவது போன்று தோற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முரளீதரன் சவால்களை அதிகம் விரும்புவதாகவும், அவரது அபார திறமை பாரட்டுக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முரளீதரனின் சாதனையை முறியடிப்பதென்பது ஹிமாலய சவாலாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முத்தையா முரளீதரனின் டெஸ்ட் பந்து வீச்சு சாதனையை எவரும் முறியடிப்பார்கள் என தாம் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

murali-800-w2.jpg 

முரளிக்கு விசேட விருது

இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ரெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே 800 விக்கெட்டுக்களை பெற்றவுள்ள நிலையில் பகல் போசன இடைவேளையின் போது காலி விளையாட்டரங்கிற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முத்தையா முரளிதரனுக்கு விசேட விருது ஒன்றை வழங்கி கௌரவித்தார்.

மண்ணின் மைந்தனால் இலங்கைக்கு பெருமை – ஜனாதிபதி

உலகளாவிய கிரிக்கெட் வீரர்களிடையே மிகுந்த கெளரவத்தை பெறும் வகையில் ஒரு சாதனை மிகு பந்து வீச்சாளராக உயர்ந்த ஸ்தானத்தை எட்டியுள்ள எமது மண்ணின் மைந்தனான முத்தையா முரளிதரனால் இலங்கை பெருமை கொள்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முரளிதரனுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

133 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுக்களை கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள முரளிதரன் 18 வருட காலம் கிரிக்கெட் விளையாடிய பின் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அத்துடன் இதுவரை 337 ஒரு நாள் போட்டிகளில் 515 விக்கெட்டுக் களையும் கைப்பற்றியுள்ளார். முரளி என்று நாம் அனைவரும் அழைக்கும் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகில் ஒரு அலங்கார ஆபரணத்தைப் போல் இருந்து வந்துள்ளார்.

மிகவும் சிரமமான பல சவால்களுக்கு முகம் கொடுத்து ஒரு சுழல் பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ள அவர் தனக்கும் தனது அணிக்கும் தனது நாட்டுக்கும் வெற்றியை தேடித்தந்திருக்கிறார். இந்த மண்ணின் மைந்தனால் இலங்கை பெருமை கொள்கிறது என்று ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப் பட்டுள்ளது.

சாதிக்க முடியாத சாதனை: முரளிக்கு அரசு பாராட்டு

கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு ஓய்வு பெற்றுள்ள சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு அரசாங்கம் சார்பாக வாழ்த்துத் தெரிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, முத்தையா முரளிதரன் குறித்து பெருமை அடைவதாகவும் உரிய காலத்தில் ஓய்வுபெற்றுள்ள அவர் அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

இலங்கையில் அபிவிருத்தி; மீள்கட்டுமானத்தில் புலம்பெயர் தமிழர் பங்கேற்க விருப்பம் – ரொபட் ஓ பிளேக்

r-b.jpgகடந்த வருடம் புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் நண்பனாக இருந்து வந்துள்ளது. அந்த நட்புறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த பெருவெற்றி மற்றும் அவரது கட்சிக்கு கிடைத்த அதே போன்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றி ஆகியவை மூலம் இலங்கை இப்போது மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின் நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது. இவ்வாறான சமாதான நிலையில் நல்லிணக்கத்தை பெற்றுக் கொள்வது முக்கிய காரணியாக அமைகிறது என்று. கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஒபிளேக் தெரிவித்தார்.
 
ஊடகவியலாளர்களிடையே அவர் மேலும் கூறியதாவது, புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்ததாகக் கூறும் அவர்  இலங்கையின் அபிவிருத்தியில் அவர்களைப் பங்கெடுக்குமாறும் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார அபிவிருத்தி, மீள் கட்டமைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முன்னணி உதவி வழங்குநராக அமெரிக்கா தொடர்ந்தும் இருந்து வருகிறது. கண்ணிவெடி அகழ்வு, மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு குடியேறும் இடம்பெயர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டங்களை வரைதல், மற்றும்புதிய பொருளாதார வாய்ப்புகளை வடக்கில் ஏற்படுத்துவதற்கான தனியார் துறை முதலீடுகளை பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றில் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும். கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்கா இலங்கைக்கு 140 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது என்று ரொபர்ட் பிளேக் கூறினார்.

இலங்கைக்கான தனது விஜயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் அரசாங்க அமைச்சர்கள், வர்த்தக சமூகம், எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துப் பேசியதாக கூறினார்.

ஜனாதிபதியுடனான தனது பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் நல்லிணக்கம், ஆளுமை மற்றும் சாத்தியமான அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல விடயங்களைப் பற்றி பேசியதாக குறிப்பிட்டார். இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் திருப்தியளிப்பதாகவும் இரண்டு லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து குறுகிய காலத்தில் அகதிகளின் எண்ணிக்கையை 37 ஆயிரமாக குறைக்க முடிந்தமை திருப்தியானது என்று பிளேக் கூறினார்.

மட்டக்குளி பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரண்

மட்டக்குளி பொலிஸ் நிலையம் மீது கடந்த 03 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்று சந்தேகிக்கப்படுபவர் நேற்று சட்டத்தரணி மூலம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

முரளி – 799ஆவது டெஸ்ட் விக்கட்

murali.jpgகாலியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் 5ஆவது நாளான இன்று முரளிதரன் விளையாடும் இறுதி டெஸ்ட் நாளாகும்.

இன்றைய போட்டியில் சற்று நேரத்திற்கு முன் தனது 799ஆவது டெஸ்ட் விக்கட்டைப் பூர்த்தி செய்தார். இன்னும் ஒரு விக்கட்டைப் பெற்றால் 800 விக்கட்டுகள் பெற்ற சாதனைக்குரிய வீரராக முரளி மாறிவிடுவார்.

கிரிக்கட் உலகில் சாதனை நாயகனாகத் திகழும் முரளி மீதமான ஒரு விக்கட்டையும் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்க் உலகில் மற்றுமொரு சாதனையைப் படைக்க தேசம்நெற் இன் வாழ்த்து.

தேங்காயினுள் குழந்தையின் கை உருவம்; கல்முனையில் பரபரப்பு

coc.jpgகல்முனை பிரதேசத்தில் நேற்று முன்தினம் உடைக்கப்பட்ட தேங்காய் ஒன்றினுள் குழந்தையொன்றின் கை வடிவத்தில் தேங்காய் முளை காணப்பட்டுள்ளது.  இந்த கை வடிவத்திலான விரல்களுடன் கூடியதாகக் காணப்படும் இத் தேங்காய் முளையை பெருந்திரளான மக்கள் அதிசயமாகக் கருது பார்வையிடுகின்றனர்.

கல்முனைக்குடி – 14, எம். சி. அஹ்மது அவெனியூவில் வசித்துவரும் நிஸாம் மெளலவியின் வீட்டில் உணவு சமைப்பதற்காக உடைக்கப்பட்ட தேங்காயிலேயே இவ்வாறு முளை காணப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் நிலைவரம் திருப்தி அளிப்பதாக இல்லை – சென்னையில் ரணில்

இலங்கையின் தற்போதைய நிலைவரம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நியமித்திருக்கும் விசேட நிபுணர் குழு தொடர்பான விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதித்திருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க லடக் செல்லும் வழியில் செவ்வாய் அதிகாலை 4.30 மணிக்கு சென்னைக்கு வருகை தந்திருந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் ரணில் கூறியிருப்பதாவது; வட,கிழக்கு மாகாணங்களிலுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை அரசு தமிழர்களை மீள்குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது. இதுவரை 50 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான சிக்கல்கள் குறித்து பாராளுமன்றத்தில் அரசிடம் விளக்கம் கேட்டோம்.

எதிர்க்கட்சிகள் நிறைவேற்றதிகார பிரதமருக்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. பொலிஸ், நீதி, நிர்வாகம், தொழில் துறைகளில் பாரிய மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்தியா இலங்கை மீனவர்கள் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சு நடத்த வேண்டுமென்று ரணில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாத 3ஆவது கிழமை டெங்கு தடுப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனம்

mos.jpgஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது கிழமையை “டெங்கு தடுப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த வார நாட்களில் துப்புரவுபடுத்தும் நடவடிக்கைகள் டெங்குத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மாநாட்டின்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, தேசிய டெங்கு தடுப்பு திட்டத்தின் ஓரங்கமாக சுத்தப்படுத்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மாதத்தின் முதலாவது, இரண்டாவது திங்கள் கிழமைகளிலும் மூன்றாவது, நான்காவது சனிக்கிழமைகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த வருடம் மாத்திரம் டெங்கு நோயால் 158 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் 21 ஆயிரம் பேர் பீடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் கைவினைத் திறன் கண்காட்சி

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத் தொழில் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள கைவினைத் திறன் கைத்தொழில் கண்காட்சி இன்று கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். மேற்படி அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்திச் சபை, தேசிய கைப்பணி சபை, கைத் தொழில் அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்புச் சபை ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இக்கண்காட்சி இன்றும் 22ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெறும்.

மூன்று அம்சங்களாக இடம்பெறும் இந்நிகழ்வில் கண்காட்சி, விற்பனை, நவீன கைத் தொழில் பயிற்சி ஆகியன உள்ளடங்குவதுடன் 156 கண்காட்சிக் கூடங்கள் இதில் இடம்பெறுகின்றன.

முதல் நாள் 22ம் திகதி மாலை 5.30 மணிக்கும் பின்னரும் அடுத்தடுத்த நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை இக்கண்காட்சியைப் பொது மக்கள் பார்வையிட முடியும்

புனர்வாழ்வு முகாமில் 7980 பேர் மட்டுமே: டியூ குணசேகர

due.jpgசரணடைந்துள்ள முன்னாள் போராளிகள் 12,000 பேருள் 7980 பேர் மட்டுமே தற்போது புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் 364 பேர் பரீட்சை முடிவடைந்ததும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் என அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நேற்று தெரிவித்தார்.