2020

2020

“நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடிக்கிறீர்கள் ” –  தமிழ்க்கட்சிகள் மீது வியாழேந்திரன் பாய்ச்சல் 

“நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடிக்கிறீர்கள் ” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் எஸ்.வியாழேந்திரன் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது புதிய வடிவம் வந்துள்ளது. பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் இருக்கின்ற  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், வியாழேந்திரனைப் பாருங்கள் என்றும் வடக்கிலே அங்கஜனைப் பாருங்கள் என்றும் எங்களைப்பற்றிதான் குறைகூறிக்கொண்டிருக்கின்றனர்.

எனக்கொரு சந்தேகம் அபிவிருத்தியையும் உங்களால் பெற்றுக்கொடுக்க முடியாது. நீங்கள் என்ன சொல்லி தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருவோம், உரிமையைப் பெற்றுத்தருவோம் என்று அதைப் பெற்றுக்கொடுங்கள். நாம் அபிவிருத்தியை செய்கிறோம்.

ஆனால் நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை.! நீங்கள் எதிர்க்கட்சியில்  இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடித்து அரசாங்கம் தரும் வாகன அனுமதிப்பத்திரத்தை, மாத சம்பளத்தை பொலிஸ் பாதுகாப்பையும், அரசாங்கம் தரும் சிற்றூண்டிச் உணவையும் நன்றாகச் சாப்பிட்டு, அரசாங்க விடுதியில் நன்றாக படுத்து நித்திரை கொண்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதற்கு இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கின்ற அரசியல் தலைவர்கள் எம் மக்களுக்குத் தேவை. உங்களால் தமிழ் மக்களுக்குரிய அடிப்படைப் பிரச்சினையை கூட பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் எதற்கு அரசியலில் இருக்கின்றீர்கள். நாங்கள் ஆளும் கட்சியில் இருந்தாலும் எமது இனத்திற்கு எதிரான வேலைகளை ஒரு போதும் செய்ய மாட்டோம்.

மக்களின் எதிர்பார்ப்பை நாடி பிடித்து   நிறைவேற்றுபவன்தான் உண்மையான மக்கள் தலைவனாக இருக்க வேண்டும்.  பத்திரிகைக்கும்  நாடாளுமன்றில் சத்தமிடுவதாலோ பத்திரிகைகளில் அறிக்கை விடுவதாலோ தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுவதில்லை.

எதிர்க்கட்சியில் இருக்கின்ற இரா.சம்பந்தன் உட்பட அத்தனை  நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் இரு கரம் கூப்பி அழைக்கிறேன் .வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை சார்பாக எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்றில்லாமல் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றாகப் பேசுவோம். நாங்கள் உங்களோடு வருகிறோம்.

உங்களுக்கு அது முக்கியமில்லை பிரச்சினையிருந்தால்தான் உங்களுக்கு அரசியல். எங்களுக்கு  எவ்வாறாவது பிரச்சினையைத் தீர்த்துக்கொடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடிக்கிறீர்கள்

“தமிழ்மக்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர அனுமதி மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்”  – அனுரகுமார திஸநாயக்க 

“தமிழ்மக்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர அனுமதி மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்”  என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைக்கு இடமில்லை என்று ஆளுங்கட்சியினர் வீரவசனம் பேசுவது, இது கடும்போக்குவாத இனவாத எதேச்சதிகார அரசு என்பதை வெளியுலகத்துக்கு எடுத்துக் காட்டுகின்றது.

பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளாலே தான் ஜனாதிபதியாக வந்தேன் என்ற இறுமாப்பு கோட்டாபய ராஜபக்சவின் மனதில் இருக்கும் வரைக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் தலைமையிலான அரசு தொடர்ந்து முன்னெடுத்தே செல்லும். இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

இன, மத, மொழி ஒற்றுமைகளைச் சிதறடிக்கும் இந்த அரசின் ஆட்சிக்குப் பாடம் புகட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஓரணியில் திரள வேண்டும்.போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நினைவுகூர அனுமதி மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2ஆம் திகதியுடன் ஊரடங்கை நீக்க இங்கிலாந்து அரசு முடிவு! 

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவிய வைரஸ் தொற்று, ஜூன் மாதத்தில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, மார்ச் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் இங்கிலாந்தில் கொரோனாவின் 2-ம் அலை பரவத் தொடங்கியது. இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அங்கு மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார்.

நவம்பர் 5-ந் திகதி முதல் டிசம்பர் 2-ந் திகதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், தேவை ஏற்பட்டால் மீண்டும் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால். டிசம்பர் 2-ந் திகதியுடன் நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

அதே நேரத்தில் மாகாண அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போரிஸ் ஜான்சன் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

20 ஆயிரத்தை தாண்டியது இலங்கை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  !

நேற்றைய தினம் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் 391 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 04 பேர், கட்டார் – தோஹாவிலிருந்து 03 பேர், சீனாவிலிருந்து ஒருவர் மற்றும் ரஷ்யாவிலிருந்து ஒருவர் ஆகியோர் இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 171ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 479 பேர் நேற்றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6 ஆயிரத்து 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 456 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றால் நேற்றையதினம் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை ​சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், பொரளை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு இறப்புக்களுடன் கொரோனா இலங்கை உயிரிழப்பு நிலவரம் 87 ஆக அதிகரித்துள்ளது.

 

இலங்கையில் புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு! 

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு புதிய அமைச்சுகள், ஜனாதிபதியினால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில மாற்றங்கள் ஏற்படும் என அரசாங்கத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு புதிய அமைச்சுகள், ஜனாதிபதியினால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இலங்கையில் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், மேலும் சில அமைச்சுகளின் விடயதானங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி செயற்படவுள்ளது.

இதுவரையில், ஜனாதிபதி செயலகத்தின் கீழிருந்த இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், சிறிலங்கா ரெலிகொம் மற்றும் அதன் நிர்வாக நிறுவனங்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இதுவரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கீழிருந்த பொலிஸ் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்பன புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

“இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த புலம்பெயர் ஆதரவாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது” – பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார்.

“இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த புலம்பெயர் ஆதரவாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது” ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று [22.11.2020] ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலே இந்த சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.

இந்நிலையில் பசில் ராஜபக்ஷவுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடாமல், அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள தீர்மானித்திருப்பார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரட்டை குடியுரிமை பெற்றிருந்த ஒருவரை மத்திய வங்கியின் ஆளுனராக நியமித்ததன் காரணமாகவே மத்திய வங்கி பிணைமுறி மோசடிகளின் போது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தற்போது சிங்கப்பூரிலே இருக்கின்றார். இந்த நிலைமைகள் ஏற்படாமல் இருப்பதற்காகவே இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றப்படடது.

இதேவேளை இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பினர் தேர்தலில் போட்டியிட்டு , தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இவர்கள் இவ்வாறு தேர்தலை வெற்றிக் கொண்டு நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்திச் சென்றுவிட்டால்  யாரிடம் அது தொடர்பில் கேள்வி எழுப்புவது. இதனால் தான் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்கினேஸ்வருனும் பாராளுமன்றத்தில் அவ்வாறு உரையாற்றியுள்ளார் போன்று தோன்றுகின்றது.தேசப்பற்றாளர்கள் என்று அடையாம் காட்டிக் கொள்ளும் ராஜபக்ஷர்களின் செயற்பாடுகள் இவ்வாறே அமையப் பெற்றுள்ளது” எனவும் கூறி தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார் மரிக்கார்.ko

“இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை தடுக்க ஐக்கியநாடுகள் சபை தவறிவிட்டது “- உறுதியளிக்கப்பட்ட நிலத்தில் ஒபாமா குற்றச்சாட்டு !

“பனிப்போரின் இடை நடுவில் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளிடையிலான பிளவுகளால் ஒருமித்த கருத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அரிதாக இருந்தன. அதனால் சோவியத் ஒன்றியத்தின் டாங்கிகள் ஹங்கேரிக்குள் நகர்ந்தன. ஐ. நா. கைகட்டி பார்த்து நின்றது. அமெரிக்க விமானங்கள் வியட்நாம் கிராமங்களில் நேபாம் குண்டுகளைப் போட்டன.”

“பனிப்போருக்குப் பின்னரும் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் நீடித்த பிளவுகள் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஐ. நாவின் திறனை கொண்டு நடத்தின.

“சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ. நாவின் உறுப்பு நாடுகளிடையே வழி முறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ இருக்கவில்லை” – என்று முன்னாள் அதிபர் ஒபாமா தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கை “இனப்படுகொலை” என்பதை ஒபாமா “ethnic slaughter” என்ற ஆங்கில வார்த்தையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்

உலக நெருக்கடிகளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள், தீர்மானங்களை விமர்சிக்கும் அத்தியாயங்களில் இலங்கைத் தமிழர் படுகொலைகளை ஒபாமா சுட்டிக்காட்டியிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

தனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம் ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்பட்டு கடந்த செவ்வாயன்று வெளியாகியது.

சமகால உலகத் தலைவர்கள் பற்றிய தனது எண்ணங்கள், தனது பதவிக்காலத்தில் பூகோள அரசியல் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், சொந்த வாழ்க்கைப் பின்னணி எனப் பல தகவல்களை பதிவு உள்ளடக்கிய அந்த நூலில், தென்னாசிய அரசியல் மையமான இலங்கை குறித்தும் அதன் இறுதிப் போர் பற்றியும் ஒபாமா என்ன கூறப்போகிறார் என்று நூல் வெளியாகுவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இலங்கையில் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொன்றொழிக்கப்பட்ட இறுதி யுத்த காலப்பகுதியில் அமெரிக்க அதிபராகப் பதவியில் இருந்த ஒபாமா, வன்னியில் பாதுகாப்பு வலயங்களுக்குள் கனரக பீரங்கிகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை தவிர்க்குமாறு அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“புலிகளால் விரட்டப்பட்டு அகதியான போதும் கூட பிச்சை எடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை” – ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட் பதியுதீன்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் ‘இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொணட சதிமுயற்சியே ஏப்பிரல் 21 தாக்குதல் என  தெரிவித்துள்ளார்.

மேலும் ஆணைக்குழுவினரால் பல கேள்விகள் ரிஷாட்பதியுதீனிடம் கேட்கப்பட்டன.

கேள்வி :- துருக்கியில் தடைசெய்யப்பட்ட எவ்.ஈ.டி.ஓ என்ற அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளில் தலையிட்டீர்களா..?

பதில் :-  பதிலளிக்கும் போது ரிசாத் பதியுதீன் ‘அந்த குற்றச்சாட்டு உண்மையில்லை. எனக்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை’ என தெரிவித்துள்ளதுடன் விசாரணைகளில் தான் தலையிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி :- கனடாவில் உள்ள ரிசாத் பதியுதீனின் சகோதரியின் வீட்டினை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தியமை குறித்து அறிந்திருக்கின்றீர்களா?

பதில்:- “நான் அதனை அறிந்திருக்கவில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே அதனை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட வீட்டிற்கு தான் விஜயம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி :- உங்கள் தம்பி எப்போதாவது கைதுசெய்யப்பட்டாரா?

பதில் :- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது அவர் கைதுசெய்யப்பட்டார். சினமன் கிரான்டில் தாக்குதலை மேற்கொண்டவர் எனது சகோதரரிற்கு ஏழு தொலைபேசி அழைப்புகளை விடுத்துள்ளார், என்பதை ஊடகங்கள் மூலம அறிந்தேன் ” என ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் நான் எனது சகோதரரிடம் இன்சாவினை ஏன் அவர் தொடர்புகொண்டார் என கேட்டதற்கு அரசாங்கம் செப்பு ஏற்றுமதியை இரத்துசெய்தமையால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தே பேச்சுக்களை மேற்கொண்டதாக எனது சகோதாரர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி :- நீங்கள் மறைமுகமாக இன்சாவ் சகோதரர்களிற்கு ஆதரவளித்துள்ளீர்களா?

 

பதில்:- நான் இந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றேன்,இன்சாவ் சகோதரர்களிற்கு நான் உதவவேயில்லை என தெரிவித்துள்ளார்.

கேள்வி :- விடுதலைப்புலிகள் வடக்கிலிருந்து வெளியேற்றிய பின்னர் ஐந்து வருடங்கள் முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள்? செல்வந்தராக மாறினீர்கள்? என ஆணைக்குழுவின் நீதிபதியொருவர் ரிசாத்பதியுதீனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ரிசாத் பதியுதீன் நான் அகதியாகிவிட்டதால் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை,என்னால் வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் உங்கள் அமைச்சு பதவிகளை பயன்படுத்தி இவ்வளவு சொத்தினை சேர்த்தீர்களா? உங்கள் குடும்பத்தினையும் , வர்த்தகத்தினையும் முன்னேற்றினீர்களா? என்ற கேள்விக்கு ரிசாத்பதியுதீன் நான் எந்த வர்த்தகத்தினை முன்னேற்றுவதற்கு எனது அமைச்சு பதவியை பயன்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

“விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை” – மனோகணேசன் காட்டம் !

“விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(11.22.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எவராவது மரணித்தால் சவப்பெட்டி வாங்குவதற்குக் கூட திண்டாட வேண்டியுள்ளது. அவர்கள் இவ்வாறு துன்பப்படுகையில் மக்களை இழிவுபடுத்தும் வகையில் விமல்வீரவங்ச கருத்து வெளியிடுகின்றார்.

விமல் வீரவன்சவின் வீட்டிலுள்ள நாயை பராமரிப்பதற்குக் கூட மாதமொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா செலவிடப்படுகின்றது என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிடுகின்றார்.

விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை. அந்தத் துரோகி கட்சிக்கு மட்டுமல்ல கொழும்பு மாவட்ட மக்களுக்கும் இன்று துரோகம் இழைத்துள்ளார். கொழும்பு மாநகர சபைக்கு சைக்கிளில் வந்த அவர் கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு இன்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அடுத்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் விமலுக்குத் தக்க பாடத்தை புகட்டுவார்கள்” – எனவும் குறிப்பிட்டுள்ளார் மனோகணேசன்.

பிரேஸிலில் கறுப்பினத்தவர் அடித்துப்படுகொலை – கொலைக்கு நீதி கேட்டு அதிகரிக்கும் மக்கள் போராட்டம் !

தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(வயது 40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோவை ஒரு பாதுகாவலர் பிடித்துக்கொள்ள மற்றொரு பாதுகாவலர் அவரின் முகத்தில் கடுமையாக தாக்கினார்.
கருப்பினத்தவர் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் அடித்து கொலை - பிரேசிலில் தொடரும் போராட்டம் || Tamil News Protests in Brazil after security guards beat black man to death
இந்த தாக்குதலில் ஜோவோ அல்பெர்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல்பொருள் அங்காடியில் வேலை செய்துவந்த பெண் ஊழியரை
ஜோவோ அல்பெர்டோ தாக்கியதாகவும், அந்த பெண் ஊழியர் கடை பாதுகாவலர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, கடை ஊழியர்கள் இருவர் அல்பெர்டோவை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோவோ அல்பெர்டோவை பாதுகாவலர்கள் தாக்குவதை அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பெண் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ பிரேசில் உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், சமூகவலைதளத்திலும் வைரலானது.
இதையடுத்து, கருப்பினத்தவர் மரணத்திற்கு நீதிகேட்டு பிரேசிலின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சம்பவம் நடைபெற்ற பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் பேரணியும் நடத்தி வருகின்றனர்.
WIN NEWS INDIA
இதற்கிடையில், ஜோவோ மீது தாக்குதல் நடத்திய பல்பொருள் அங்காடி ஊழியர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பிரான்சை தலைமையிடமாக கொண்ட அந்த பல்பொருள் அங்காடி நிறுவனம் தனது அங்காடியில் பணியாற்றிய அந்த 2 ஊழியர்களையும் நீக்கியுள்ளது.  ஜோவோ கொலைக்கு கண்டனம் தெரிவித்து பிரேசிலில் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் போலீசார், ராணுவம் என பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரேசிலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
அண்மையில் ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜ்ப்ளைட் என்னும் கறுப்பினத்தவர் அந்நாட்டு பொலிஸாரால் அடித்துக்கொலை செய்யப்பட்டமை உலக அளவில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.