October

October

பிரித்தானியாவில் ஒரு நாளுக்கு 4 000 மரணங்கள் சம்பவிக்கலாம்!!! பொறிஸ் ஜோன்சனின் வினைத்திறனற்ற முடிவுகளின் விளைவு!

பிரித்தானிய பிரதமரின் அசமந்த போக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்ல இருக்கின்றது. கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. அவர்களின் மதிப்பீட்டின் படி நவம்பர் மாதத்தில் மரண எண்ணிக்கை நாளொன்றுக்கு 2000 முதல் 4000 வரை சம்பவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமைக்கு மாறாக 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் பிரித்தானியாவைப் பொறுத்தவரை இன்னமும் வெப்பநிலை கணிசமான அளவில் வீழ்ச்சி அடையவில்லை. வழமைக்கு மாறாக நாடு இன்னமும் கடுமையான குளிருக்குச் செல்லவில்லை. வெப்பநிலை வீழ்ச்சி அடைந்து கடும் குளிர் ஏற்படும் போது நோயின் பரம்பல் மிகத்தீவிரமாகும். வழமையான காய்ச்சல் தடிமன் என்பன இக்காலகட்டத்திலேயே அதிகமாக பரவுவது வழமை. அதுவும் பாடசாலைகளே இந்நோய் பரம்பலின் மையமாக திகழ்ந்து வருகின்றன.

நவம்பர் 5ம் திகதி முதல் இங்கிலாந்தில் மிக இறுக்கமான லொக்டவுன் கொண்டுவரப்பட உள்ளது. ஒரு மாதகாலத்திற்கும் நீடிக்கும் இந்த லொக்டவுன் டிசம்பர் 2 வரை நீடிக்க உள்ளது. இவ்வாறான இறுக்கமான லொக்டவுன் காலத்திலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறந்து வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது தேவையான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் தலைமையும் கொன்சவேடிவ் கட்சியின் பழமைவாத தனிநபர்வாத சிந்தனை முறையும் இதுவரை எண்பதிணாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்து உள்ளது. ‘சமூகம்’ என்ற ஒன்றில்லை என்ற சிந்தனை முறையோடு வாழ்கின்ற இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ‘சமூகம்’ என்ற ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவரோ அவருடைய கட்சியின் கொள்கைகளோ அதனை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை.

இந்தப் புதிய பிரித்தானிய அரசு கோவிட்-19 யை கையாண்ட முறை மிக மிக மோசமானது. தனது அரசின் விஞ்ஞான மருத்துவக் குழுக்களின் அலோசணைகளை புறம்தள்ளிவிட்டு குறுக்கு வழியில் தேர்தலை வெறிற்கொள்ள திட்டம் வகுத்த டொமினிக் கம்மிங்ஸ் போன்ற மண்டையன் குழுக்களின் அலோசனையின் படியே பொறிஸ் ஜோன்சன் ஆட்சி செய்கின்றார். அவருடைய நிதியமைச்சர் சான்ஸ்லர் ஒப் எக்செக்கர் ரிசி சுநாக் கூட புதிதான எந்த பொருளாதாரக் கொள்கை வகுப்பையும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மன் அரசு அறிவித்த உதவிநலத்திட்டங்களை தாங்களும் மறுநாள் அறிவித்தனர். அல்லது பல வாரங்கள் கழித்து அறிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் மார்ச்சில் லொக்டவுனுக்குச் சென்ற போது பிரித்தானிய அரசையும் லொக்டவுன் அறிவிக்க அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். அதனால் லொக்டவுன் அறிவிக்க ஏற்பட்ட தாமதத்தால் பிரித்தானியாவின் கோவிட்-19 பரவலும் மரணமும் உலக எண்ணிக்கையில் உச்சத்தைத் தொட்டது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருவாரங்கள் முன்னதாக லொக்டவுனை அறிவித்து இருந்தால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

முதற்தடவை கோவிட்-19 பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை; தவறு இழைக்கப்பட்டுவிட்டது என்றால். ஆனால் இரண்டாவது அலை பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாலாம் என்ற எச்சரிக்கை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு தொடர்ச்சியாக அரசை எச்சரித்து வந்துள்ளது. பிரித்தானியாவில் வேல்ஸ், நொர்தன் ஐலன்ட்ஸ் அரசுகள் ஏற்கனவே ஒரு மாத லொக்டவுனை அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் பொறிஸ் ஜோன்சன் ‘தனக்குத்தான் தெரியும் தான் தான் படைப்பன்’ என்று சன்னதம் ஆடிக்கொண்டு திரிகின்றார். ஒரு மனிதனுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்தி சொல்லக் கூடியவர்களின் புத்திமதியயையாவது கேட்கவேணும். இந்த இரண்டும் இல்லாத ஒன்று பிரித்தானிய வல்லரசுக்கு பிரதமர் ஆனால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.

கடந்த ஆறு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தொற்று இல்லாத நாடாக தாய்வான் இருக்கின்றது. தங்களைப் பற்றிய பெரிய விம்பங்களைக் கட்டிக்கொண்டு திரிகின்ற இந்த காலனித்துவ சிந்தனையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கொரோணாவுக்கு பிளீச் குடிக்க கொடுக்கும் அளவுக்கு – அமெரிக்க வல்லரசின் ஏஜென்டாக இருந்தாலும்; அவ்வளவு முட்டாள்கள் என்று சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த நிலைக்குத் தான் பிரித்தானிய வல்லரசின் நிலை வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய அமெரிக்க பிரித்தானிய வல்லரசுகள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்றளவிற்கு கேவலமாகிவிட்டது. போதை ஏறியவுடன் வருகின்ற உசாரில் ‘வெட்டுவோம் பிடுங்குவாம்’ என்ற கணக்கில் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும், அவருடைய கிட்டத்தட் அண்ணன் மாதிரியான டொனால்ட் ட்ரம்மும் விடுகின்ற ரீல்கள் உள்ளது. கோவிட்-19 க்கு வக்சீன் கோடிக்குள் இருக்கின்றது, ‘தைப்பொங்கலுக்கு தமிழீழம்’ என்ற கணக்கில் தான் ‘புதுவருசத்தில் கோவிட்-19 க்கு கோவிந்தா’ என்றெல்லாம் பிலா விடுகின்றார்கள்.

உண்மை நிலவரம் அதுவல்ல. கோவிட்-19 வக்சின் அண்மைக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவ்வாறு வந்தாலும் அதனை முழு மக்கள் தொகைக்கும் வழங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அது அரசுடைய நோக்கமும் கிடையாது. இந்த கோவிட்-19 ஒட்டுமொத்த மக்கள்கொகைக்கும் பரவி இயற்கையான நிர்ப்பீடண சக்தி ஒவ்வொருவரது உடலிலும் ஏற்படுவதன் மூலமே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மக்கள் தொகைக்குள் இந்நோய் பரவுகின்ற போது அதனை ஒரே நேரத்தில் பரவ அனுமதித்தால் நாட்டில் உள்ள சுகாதார சேவைகளால் அதனை தாக்குப் பிடிக்க முடியாது. கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தால் காட்டாற்று வெள்ளத்தில் மக்கள் மரணிப்பது போல் தகுந்த சிகிச்சை இல்லாமல் பல்லாயிரம் மக்கள் மரணிக்க வேண்டி இருக்கும்.

அதனால் கோவிட்-19 மக்கள் தொகைக்குள் பரவுவதை மட்டுப்படுத்ப்பட்ட வீதத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த மட்டுப்படுத்தல் என்பது நாட்டின் சுகாதார சேவையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய எண்ணிக்கையயை வைத்து தீர்மானிக்கப்படும்.

பிரித்தானியாவில் இந்நோய்க் கிருமியானது இதுவரை 15 வீதமான மக்களுக்கு பரவி இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. உலகில் ஈரானிலேயே கூடுதல் மக்கள் தொகைக்கு – 28வீதம் – இந்நோய் பரவி உள்ளது. கீழுள்ள வரைபு வெவ்வேறு நாடுகளில் எவ்வளவு வீதமான மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒரு நாட்டின் எழுபது வீதமான மக்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டு இருந்தாலேயே அந்நாட்டில் மக்கள் குழும நீர்ப்பீடனம் ஏற்பட்டதாகக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கின்ற போது எல்லா நாடுகளுமே முழு நாட்டுக்குமான நீர்ப்பீடனத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவிலேயே உள்ளனர். பிரித்தானியா அவ்வாறான ஒரு நீர்ப்பீடனத்தை பெறுவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மோலாகலாம். இப்பொழுதுள்ள நிலையில் ஈரான் மிகவிரைவில் ழுழுநாட்டுக்குமான குழும நீர்ப்பீடணத்தை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கோவிட்-19 ஏற்படுத்துகின்ற அடுத்த பெரும் பிரச்சினை பொருளாதார தாக்கம். தற்போது வரை கோவிட்-19க்காக செலவிடப்பட்ட நிதியயை மீளப் பெறுவதற்கு 50 பில்லியன் பவுண் வரியயை அரசு விதிக்க வேண்டியேற்படும். கோவிட்-19 க்கு முன்னதாகவே பிரித்தானிய சுகாதாரசேவைகள் உட்பட பொதுச்சேவைகளுக்கான நிதிவழங்கலை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கொன்சவேடிவ் அரசு குறைத்துக் குறைத்து வந்தது. பொதுச்சேவைகள் அனைத்தும் கோவிட்-19 க்கு முன்னதாகவே ரிம்மில் தான் ஓடிக்கொண்டிருந்தன. சில உதாரணங்களையும் அதன் விளைவுகளையும் மட்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

பிரித்தானிய சுகாதார சேவைகளில் 50,000 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சுகாதார சேவைகளிடத்தில் போதுமான நிதி இருக்கவில்லை. பாடசாலைகளில் 10,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதற்கான நிதி பாடசாலைகளில் இல்லலை. பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் வெளியானா ஆய்வின்படி கோவிட்-19 காலத்திற்கு முந்தைய நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி மட்டத்திற்கும் சாதாரண மட்டத்தில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மட்டத்திற்குமான இடைவெளி இரண்டு ஆண்டுகளாக இருந்தது. கோவிட்-19 க்குப் பின் இவ்விடைவெளி ஐந்து மடங்காக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதன்படி ஆண்டு 13இல் கல்வி கற்கின்ற பிற்படுத்தப்பட்ட சமூகமட்டத்தில் உள்ள ஒரு மாணவனின் கல்விமட்டமும் 9ம் ஆண்டில் கல்விகற்கின்ற ஒரு சாதாரண தரத்தில் உள்ள மாணவனின் கல்விமட்டமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.

அரசு ஏற்கனவே பல உள்ளுராட்சி நூலகங்களை மூடிவருகின்றது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் நூலகங்கள் இல்லை அல்லது பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. பிறக்கின்ற குழந்தையின் அடிப்படைத் தேவைகளில் அதன் வளர்ச்சியில் ஏற்படுத்தப்படுகின்ற போதாமைகள் அதன் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கின்றன. இதன் காரணத்தினால் கோவிட்-19க்கு முன்னதாக பிரித்தானிய சிறைகளை நிரப்புகின்ற குற்றவாளிகளில் 80 வீதத்தினர் பாடசாலைகளில் இருந்து கலைக்கப்பட்ட மாணவர்களாக பாடசாலைக் கல்வியயை விட்டு ஒதுங்கியவர்களாக இருக்கின்றனர்.

பொதுச் சேவைகளில் முதலீடுகள் செய்யப்படாத போது வீட்டுத் திட்டங்கள் போக்குவரத்துக்கள் கல்வி என்று சகலவிடயங்களிலும் பிற்படுத்தப்பட்ட தரப்பினர் மிக மோசமாக பாதிக்கப்படுவர். சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி கோவிட்-19 க்கு பின் மிகமோசமடையும். சமூகப் பதட்டம் தவிர்க்க முடியாததாகும். இது பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

2007இல் அமெரிக்காவின் வீட்டுச் சந்தையில் இலாபமீட்டும் வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது பிரித்தானியாவை மிக மோசமாகத் தாக்கியது. இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு மீண்டும் இப்பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னைய நிலைக்கு பிரித்தானியாவால் செல்ல முடியவில்லை. முன்னைய பொருளாதார நிலையயை எட்ட 12 ஆண்டுகள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த கோவிட்-19 ஏற்பட்டது. கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியானது 2007 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியயைக் காட்டிலும் மோசமானது. அத்தோடு கோவிட்-19க்கு முன்னதாகவே உலக பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அதீதமாக தங்கி இருக்கும் நிலையயை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது.

அதன்படி மனித உழைப்பு அதன் முக்கியத்துவத்தை இழந்துவருகின்றது. இந்த மனித உழைப்பின் அவசியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இந்த கோவிட்-19 தாக்கத்தினால் மேலும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது. அதன்படி இன்று உள்ள 60 வீதமான வேலைகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும். சுப்பர்மார்க்கற், வங்கிகள், தபாலகங்கள், ஊபர் ரைவர்கள் ரக்ஸிகள் கணக்காளர்கள் பெற்றோல் நிலையங்கள் என்பன எமது வீதிகளில் இருந்து காணாமல் போய்விடும். வேலையின்மையும் வறுமையும் மலிந்திருக்கும் எதிர்காலம் என்பது பலருக்கு இருளாகவும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒளிமயமானதாகவும் இருக்கும். அதனால் அதற்கான திட்டமிடல்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது. அரசு எவ்வாறான சூழலானாலும் வர்த்தக நிறுவனங்களின் நலனையே முன்நிறுத்தும்.

இன்றும் இந்த கொரோனா காலத்திலும் ரெஸ்ற் அன் ரேர்ஸ் திட்டத்தை அரசிடம் உள்ள அனுபவம் மிக்க 40க்கும் அதிகமான வைரோலொஜி ஆய்வுகூடங்களுக்கு வழங்காமால் தனியார்களிடமே கையளித்துள்ளது. பிரிக்ஸிறின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு தனியார் நிறுவனங்களிடம் கடற்பாதைப் போக்குவரத்தை கையளித்தது. அவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒரு நிறுவனம் தான் சீப்புரோன் அதனிடம் ஒரு பெரிகூட இருக்கவில்லை. அதனிடம் அது பற்றிய திட்டமும் இருக்கவில்லை. ஆனால் அரசு பல மில்லியன் ஒப்பந்தத்தை அந்நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மேற்கொண்டது.

மேலும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஈரோரணல்க்கு அதில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்காததால் 33 மில்லியன் பவுண்கள் நஸ்ட்டஈட்டை அரசு வழங்கியது. ஆனால் பாடசாலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை காலத்திலும் உணவு வழங்குவதற்கான வவுச்சரை வழங்க அரசு மறுத்துவிட்டது. அதற்கான செலவு 5 மில்லயன் பவுண் மட்டுமே. இவ்வாறு தான் அரசு வினைத்திறன் அற்று செயற்படுகின்றது.

கோவிட்-19 தாக்கத்தனால் ஏனைய நோயாளிகள் வைத்திய சேவைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை மோசமடையவும் விரைவில் மரணத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கோவிட்-19 அபாயநிலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியின் பக்கக விளைவுகளால் 700,000 பேர்களின் ஆயுட்காலம் குறைவடையும் அதாவது அவர்கள் விரைந்து மரணத்தை தழுவுவார்கள் என மதிப்பிட்டுள்ளது.

நீண்டகால தனிமைப்படுத்தல்களும் கை கழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளும் கூட எதிர்காலத்தில் எமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையயை வலுவிழக்கச் செய்யும். ஏனைய வைரஸ் மற்றும் பக்ரீரியா போன்ற நுண் கிருமிகளின் தாக்கத்திற்கு நாம் ஆளாக வாய்ப்பளிக்கும். எமது உடலானது நுண் கிருமிகளைப் பற்றிக்கொள்ளும் போதே தனது நோய் எதிர்ப்பு சக்தியயை வளர்த்துக்கொள்கின்றது. இதுவொரு இயற்கை வக்சின் போன்றது. மேலும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்தத் தனிமைப்படுத்தல்கள் ஊக்குவிக்கின்றது.

இதுவொரு மிகுந்த நெருக்கடியான கால கட்டம். இதனை கையாள்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது நடைமுறைசார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள வேண்டும். தங்களை இசைவாக்கிக் கொள்ள முடியாதவர்களே பெரும்பாலும் கூடுதல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். முடிவெடுக்கும் ஆற்றல் என்பது ஒவ்வொருவருடைய நுண் திறன்சார்ந்தது. அதனை வளர்த்துக்கொண்டு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளையும் பல வழிகளில் தீர்க்க முடியும். ஆனால் அந்ததந்த் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அதனால் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதன் விளைவால் கூடுதல் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற போது நாங்கள் தவிர்கக்கின்ற முடிவுகளால் ஏற்டுகின்ற நன்மை தீமைகளையும் ஆராய்ந்து உணர்ச்சித் தூண்டலா முடிவெடுக்காமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்தால் நாம் எமது முடிவுகளில் வெற்றி பெறுவதங்கான வாய்ப்புகள் அதிகம்.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கொரோனாவின் சமூகப் பரம்பலின் முக்கிய இடங்களாகும். அங்கு சமூக இடைவெளியயை ஏற்படுத்துவது அசாத்தியமான ஒன்று. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து கற்கும் தொலைதூர கல்விக்குச் சென்றதால் பல்கலைக்கழகங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் பாடசாலைகளைப் பொறுத்தவரை மாணவர்கள் பாடசாலைக்கு வந்தே கல்வியயைத் தொடருகின்றனர். இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதாக இருந்தால், அரசு தற்போது வந்த அரைத்தவணை விடுமுறையோடு பாடசாலைகளை நான்கு வாரங்களுக்கு மூடி, இதனைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

இப்போது அரைத்தவணை முடிந்து, பெரும்பாலான பாடசாலைகள் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கும். ஆகையால் நோய்பரம்பலை அரசு எதிர்பார்க்கின்ற அளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது. தொழிற்கட்சி உட்பட அரசுக்கு பலர் எடுத்துக்கூறியும்; ஏனைய அதிகாரப்பகிர்வு செய்யப்பட்ட அரசுகள் விரைந்து செயற்பட்ட போதும்; பொறிஸ் ஜோன்சன் அரைத்தவணைக் காலத்தை வீணடித்துக்கொண்டார். இனி மரணங்கள் எகிறி மருத்துவமனைகள் நிரம்பிவழிய ஆரம்பிக்கவே அவர் பாடசாலைகள் மூடுவது பற்றி சிந்திப்பார். இது நோய்க்கிருமி பரவலை அதிகரிப்பதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான காலத்தையும் அதிகரிக்கும். விரைந்து செயற்படாததால் கூடுதலான கற்பித்தல் காலங்கள் வீணடிக்கப்படும்.

இன்றுள்ள இந்த பிரித்தானிய பிரதமரையும் அமெரிக்க ஜனாதிபதியயையும் அன்று தெரிவு செய்கின்ற போது மக்கள் சிந்தித்து ஆராய்ந்து உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுத்து இருந்தால் இந்தப் பேரழிவு இவ்வளவு மோசமானதாக அமைந்திருக்காது.

பிரித்தானிய பிரதமரின் அசமந்த போக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்ல இருக்கின்றது. கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. இன்னும் சில நாட்களில் இங்கிலாந்தில் மிக இறுக்கமான லொக்டவுன் கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறான இறுக்கமான லொக்டவுன் காலத்திலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறந்து வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது தேவையான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் தலைமையும் கொன்சவேடிவ் கட்சியின் பழமைவாத தனிநபர்வாத சிந்தனை முறையும் இதுவரை எண்பதிணா யிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்து உள்ளது. ‘சமூகம்’ என்ற ஒன்றில்லை என்ற சிந்தனை முறையோடு வாழ்கின்ற இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ‘சமூகம்’ என்ற ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவரோ அவருடைய கட்சியின் கொள்கைகளோ அதனை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை.

இந்தப் புதிய பிரித்தானிய அரசு கோவிட்-19 யை கையாண்ட முறை மிக மிக மோசமானது. தனது அரசின் விஞ்ஞான மருத்துவக் குழுக்களின் அலோசணைகளை புறம்தள்ளிவிட்டு குறுக்கு வழியில் தேர்தலை வெறிற்கொள்ள திட்டம் வகுத்த டொமினிக் கம்மிங்ஸ் போன்ற மண்டையன் குழுக்களின் அலோசனையின் படியே பொறிஸ் ஜோன்சன் ஆட்சி செய்கின்றார். அவருடைய நிதியமைச்சர் சான்ஸ்லர் ஒப் எக்செக்கர் ரிசி சுநாக் கூட புதிதான எந்த பொருளாதாரக் கொள்கை வகுப்பையும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மன் அரசு அறிவித்த உதவிநலத்திட்டங்களை தாங்களும் மறுநாள் அறிவித்தனர். அல்லது பல வாரங்கள் கழித்து அறிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் மார்ச்சில் லொக்டவுனுக்குச் சென்ற போது பிரித்தானிய அரசையும் லொக்டவுன் அறிவிக்க அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். அதனால் லொக்டவுன் அறிவிக்க ஏற்பட்ட தாமதத்தால் பிரித்தானியாவின் கோவிட்-19 பரவலும் மரணமும் உலக எண்ணிக்கையில் உச்சத்தைத் தொட்டது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருவாரங்கள் முன்னதாக லொக்டவுனை அறிவித்து இருந்தால்,கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

முதற்தடவை கோவிட்-19 பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை; தவறு இழைக்கப்பட்டுவிட்டது என்றால். ஆனால் இரண்டாவது அலை பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாலாம் என்ற எச்சரிக்கை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு தொடர்ச்சியாக அரசை எச்சரித்து வந்துள்ளது. பிரித்தானியாவில் வேல்ஸ், நொர்தன் ஐலன்ட்ஸ் அரசுகள் ஏற்கனவே ஒரு மாத லொக்டவுனை அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் பொறிஸ் ஜோன்சன் ‘தனக்குத்தான் தெரியும் தான் தான் படைப்பன்’ என்று சன்னதம் ஆடிக்கொண்டு திரிகின்றார். ஒரு மனிதனுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்தி சொல்லக் கூடியவர்களின் புத்திமதியயையாவது கேட்கவேணும். இந்த இரண்டும் இல்லாத ஒன்று பிரித்தானிய வல்லரசுக்கு பிரதமர் ஆனால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.

கடந்த ஆறு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தொற்று இல்லாத நாடாக தாய்வான் இருக்கின்றது. தங்களைப் பற்றிய பெரிய விம்பங்களைக் கட்டிக்கொண்டு திரிகின்ற இந்த காலனித்துவ சிந்தனையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கொரோணாவுக்கு பிளீச் குடிக்க கொடுக்கும் அளவுக்கு – அமெரிக்க வல்லரசின் ஏஜென்டாக இருந்தாலும்; அவ்வளவு முட்டாள்கள் என்று சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த நிலைக்குத் தான் பிரித்தானிய வல்லரசின் நிலை வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய அமெரிக்க பிரித்தானிய வல்லரசுகள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்றளவிற்கு கேவலமாகிவிட்டது. போதை ஏறியவுடன் வருகின்ற உசாரில் ‘வெட்டுவோம் பிடுங்குவாம்’ என்ற கணக்கில் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும், அவருடைய கிட்டத்தட் அண்ணன் மாதிரியான டொனால்ட் ட்ரம்மும் விடுகின்ற ரீல்கள் உள்ளது. கோவிட்-19 க்கு வக்சீன் கோடிக்குள் இருக்கின்றது, ‘தைப்பொங்கலுக்கு தமிழீழம்’ என்ற கணக்கில் தான் ‘புதுவருசத்தில் கோவிட்-19 க்கு கோவிந்தா’ என்றெல்லாம் பிலா விடுகின்றார்கள்.

உண்மை நிலவரம் அதுவல்ல. கோவிட்-19 வக்சின் அண்மைக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவ்வாறு வந்தாலும் அதனை முழு மக்கள் தொகைக்கும் வழங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அது அரசுடைய நோக்கமும் கிடையாது. இந்த கோவிட்-19 ஒட்டுமொத்த மக்கள்கொகைக்கும் பரவி இயற்கையான நிர்ப்பீடண சக்தி ஒவ்வொருவரது உடலிலும் ஏற்படுவதன் மூலமே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மக்கள் தொகைக்குள் இந்நோய் பரவுகின்ற போது அதனை ஒரே நேரத்தில் பரவ அனுமதித்தால் நாட்டில் உள்ள சுகாதார சேவைகளால் அதனை தாக்குப் பிடிக்க முடியாது. கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தால் காட்டாற்று வெள்ளத்தில் மக்கள் மரணிப்பது போல் தகுந்த சிகிச்சை இல்லாமல் பல்லாயிரம் மக்கள் மரணிக்க வேண்டி இருக்கும்.

அதனால் கோவிட்-19 மக்கள் தொகைக்குள் பரவுவதை மட்டுப்படுத்ப்பட்ட வீதத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த மட்டுப்படுத்தல் என்பது நாட்டின் சுகாதார சேவையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய எண்ணிக்கையயை வைத்து தீர்மானிக்கப்படும்.

பிரித்தானியாவில் இந்நோய்க் கிருமியானது இதுவரை 15 வீதமான மக்களுக்கு பரவி இருக்கலாம் என்று நியூ சயன்றிஸ்ட் மதிப்பிடப்படுகின்றது. உலகில் ஈரானிலேயே கூடுதல் மக்கள் தொகைக்கு – 28 வீதம் – இந்நோய் பரவி உள்ளது. கீழுள்ள வரைபு வெவ்வேறு நாடுகளில் எவ்வளவு வீதமான மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒரு நாட்டின் எழுபது வீதமான மக்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டு இருந்தாலேயே அந்நாட்டில் மக்கள் குழும நீர்ப்பீடணம் ஏற்பட்டதாகக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கின்ற போது எல்லா நாடுகளுமே முழு நாட்டுக்குமான நீர்ப்பீடணத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவிலேயே உள்ளனர். பிரித்தானியா அவ்வாறான ஒரு நீர்ப்பீடணத்தை பெறுவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மோலாகலாம். இப்பொழுதுள்ள நிலையில் ஈரான் மிகவிரைவில் ழுழுநாட்டுக்குமான குழும நீர்ப்பீடணத்தை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கோவிட்-19 ஏற்படுத்துகின்ற அடுத்த பெரும் பிரச்சினை பொருளாதார தாக்கம். தற்போது வரை கோவிட்-19க்காக செலவிடப்பட்ட நிதியயை மீளப் பெறுவதற்கு 50 பில்லியன் பவுண் வரியயை அரசு விதிக்க வேண்டியேற்படும். கோவிட்-19 க்கு முன்னதாகவே பிரித்தானிய சுகாதாரசேவைகள் உட்பட பொதுச்சேவைகளுக்கான நிதிவழங்கலை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கொன்சவேடிவ் அரசு குறைத்துக் குறைத்து வந்தது. பொதுச்சேவைகள் அனைத்தும் கோவிட்-19 க்கு முன்னதாகவே ‘ரிம்’மில் தான் ஓடிக்கொண்டிருந்தன.

பிரித்தானிய சுகாதார சேவைகளில் 50,000 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சுகாதார சேவைகளிடத்தில் போதுமான நிதி இருக்கவில்லை. பாடசாலைகளில் 10,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதற்கான நிதி பாடசாலைகளில் இல்லலை. பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் வெளியான ஆய்வின்படி கோவிட்-19 காலத்திற்கு முந்தைய நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி மட்டத்திற்கும் சாதாரண மட்டத்தில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மட்டத்திற்குமான இடைவெளி இரண்டு ஆண்டுகளாக இருந்தது. கோவிட்-19 க்குப் பின் இவ்விடைவெளி ஐந்து மடங்காக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதன்படி ஆண்டு 13இல் கல்வி கற்கின்ற பிற்படுத்தப்பட்ட சமூகமட்டத்தில் உள்ள ஒரு மாணவனின் கல்விமட்டமும் 9ம் ஆண்டில் கல்விகற்கின்ற ஒரு சாதாரண சமூகமட்டத்தில் உள்ள மாணவனின் கல்விமட்டமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.

அரசு ஏற்கனவே பல உள்ளுராட்சி நூலகங்களை மூடிவருகின்றது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் நூலகங்கள் இல்லை அல்லது பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. பிறக்கின்ற குழந்தையின் அடிப்படைத் தேவைகளில், அதன் வளர்ச்சியில், ஏற்படுத்தப்படுகின்ற போதாமைகள் அதன் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கின்றன. இதன் காரணத்தினால் கோவிட்-19க்கு முன்னதாக பிரித்தானிய சிறைகளை நிரப்புகின்ற குற்றவாளிகளில் 80 வீதத்தினர் பாடசாலைகளில் இருந்து கலைக்கப்பட்ட மாணவர்களாக; பாடசாலைக் கல்வியயை விட்டு ஒதுங்கியவர்களாக இருக்கின்றனர்.

பொதுச் சேவைகளில் முதலீடுகள் செய்யப்படாத போது வீட்டுத் திட்டங்கள், போக்குவரத்துக்கள், கல்வி என்று சகல விடயங்களிலும் பிற்படுத்தப்பட்ட தரப்பினர் மிக மோசமாக பாதிக்கப்படுவர். சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி கோவிட்-19 க்கு பின் மிகமோசமடையும். சமூகப் பதட்டம் தவிர்க்க முடியாததாகும். இது பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

2007இல் அமெரிக்காவின் வீட்டுச் சந்தையில் இலாபமீட்டும் வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது பிரித்தானியாவை மிக மோசமாகத் தாக்கியது. இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு, இப்பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னைய நிலைக்கு பிரித்தானியாவால் செல்ல முடியவில்லை. முன்னைய பொருளாதார நிலையயை எட்ட 12 ஆண்டுகள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த கோவிட்-19 ஏற்பட்டது. கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியானது 2007 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியயைக் காட்டிலும் மோசமானது.

அத்தோடு கோவிட்-19க்கு முன்னதாகவே உலக பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அதீதமாக தங்கி இருக்கும் நிலையயை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. அதன்படி மனித உழைப்பு அதன் முக்கியத்துவத்தை இழந்துவருகின்றது. இந்த மனித உழைப்பின் அவசியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இந்த கோவிட்-19 தாக்கத்தினால் மேலும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது. அதன்படி இன்று உள்ள 60 வீதமான வேலைகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும். சுப்பர்மார்க்கற்கள் போன்ற கடைத்தெரு வியாபார நிலையங்கள் (உணவகங்கள், மருந்தகங்கள், புடவைக்கடைகள் சில்லறைக் கடைகள்), வங்கிகள், தபாலகங்கள், ஊபர்கள் – ரக்ஸிகள், கணக்காளர்கள் பெற்றோல் நிலையங்கள் என்பன எமது வீதிகளில் இருந்து காணாமல் போய்விடும். வேலையின்மையும் வறுமையும் மலிந்திருக்கும். எதிர்காலம் என்பது பலருக்கு இருளாகவும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒளிமயமானதாகவும் இருக்கும். அதனால் அதற்கான திட்டமிடல்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது.

அரசு எவ்வாறான சூழலானாலும் வர்த்தக நிறுவனங்களின் நலனையே முன்நிறுத்தும். இன்றும் இந்த கொரோனா காலத்திலும் ரெஸ்ற் அன் ரேர்ஸ் திட்டத்தை அரசிடம் உள்ள அனுபவம் மிக்க 40க்கும் அதிகமான வைரோலொஜி ஆய்வுகூடங்களுக்கு வழங்காமால் தனியார்களிடமே கையளித்துள்ளது. பிரிக்ஸிறின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு தனியார் நிறுவனங்களிடம் கடற்பாதைப் போக்குவரத்தை கையளித்தது. அவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்றுதான் ‘சீப்புரோன்’ நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தமும். ஆனால் ‘சீப்புரோன்’ னிடம் ஒரு பெரி – ferry கூட இருக்கவில்லை. அதனிடம் அது பற்றிய திட்டமும் இருக்கவில்லை. ஆனால் அரசு பல மில்லியன் ஒப்பந்தத்தை அந்நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மேற்கொண்டது.

மேலும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஈரோ ரணல்க்கு அதில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்காததால் 33 மில்லியன் பவுண்கள் நஸ்ட்டஈட்டை அரசு வழங்கியது. ஆனால் பாடசாலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை காலத்திலும் உணவு வழங்குவதற்கான வவுச்சரை வழங்க அரசு மறுத்துவிட்டது. அதற்கான செலவு 5 மில்லயன் பவுண் மட்டுமே. இவ்வாறு தான் அரசு வினைத்திறன் அற்று செயற்படுகின்றது.

கோவிட்-19 தாக்கத்தனால் ஏனைய நோயாளிகள் வைத்திய சேவைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை மோசமடையவும் விரைவில் மரணத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கோவிட்-19 அபாயநிலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியின் பக்கக விளைவுகளால் 700,000 பேர்களின் ஆயுட்காலம் குறைவடையும் அதாவது அவர்கள் விரைந்து மரணத்தை தழுவுவார்கள் என மதிப்பிட்டுள்ளது.

நீண்டகால தனிமைப்படுத்தல்களும் கை கழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளும் கூட எதிர்காலத்தில் எமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையயை வலுவிழக்கச் செய்யும். ஏனைய வைரஸ் மற்றும் பக்ரீரியா போன்ற நுண் கிருமிகளின் தாக்கத்திற்கு நாம் ஆளாக வாய்ப்பளிக்கும். எமது உடலானது நுண் கிருமிகளைப் பற்றிக்கொள்ளும் போதே தனது நோய் எதிர்ப்பு சக்தியயை வளர்த்துக்கொள்கின்றது. இதுவொரு இயற்கை வக்சின் போன்றது. நீண்டகால தனிமைப்படுத்தலும் அதீத சுகாதாரப் பழக்கங்களும் நாங்கள் நோய்கிருமிகளுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்கும். அவ்வாறு நீண்ட காலத்திற்கு நோய்க்கிருமிகளில் இருந்து எமது உடலைப் பாதுகாத்து வந்தால் எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழக்கும். மேலும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்தத் தனிமைப்படுத்தல்கள் ஊக்குவிக்கின்றது.

இதுவொரு மிகுந்த நெருக்கடியான கால கட்டம். இதனை கையாள்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது நடைமுறைசார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள வேண்டும். தங்களை இசைவாக்கிக் கொள்ள முடியாதவர்களே பெரும்பாலும் கூடுதல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். முடிவெடுக்கும் ஆற்றல் என்பது ஒவ்வொருவருடைய நுண் திறன்சார்ந்தது. அதனை வளர்த்துக்கொண்டு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளையும் பல வழிகளில் தீர்க்க முடியும். ஆனால் அந்ததந்த் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அதனால் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதன் விளைவால் கூடுதல் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற போது, நாங்கள் தவிர்கக்கின்ற முடிவுகளால் ஏற்டுகின்ற நன்மை தீமைகளையும் ஆராய்ந்து; உணர்ச்சித் தூண்டலால் முடிவெடுக்காமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்தால், நாம் எமது முடிவுகளில் வெற்றி பெறுவதங்கான வாய்ப்புகள் அதிகம்.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கொரோனாவின் சமூகப் பரம்பலின் முக்கிய இடங்களாகும். அங்கு சமூக இடைவெளியயை ஏற்படுத்துவது அசாத்தியமான ஒன்று. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து கற்கும் ஒன்லைன் கல்விக்குச் சென்றதால் பல்கலைக்கழகங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் பாடசாலைகளைப் பொறுத்தவரை மாணவர்கள் பாடசாலைக்கு வந்தே கல்வியயைத் தொடருகின்றனர். இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதாக இருந்தால், அரசு தற்போது வந்த அரைத்தவணை விடுமுறையோடு பாடசாலைகளை நான்கு வாரங்களுக்கு மூடி, இதனைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். இப்போது அரைத்தவணை முடிந்து, பெரும்பாலான பாடசாலைகள் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கும். ஆகையால் நோய்பரம்பலை அரசு எதிர்பார்க்கின்ற அளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது. தொழிற்கட்சி உட்பட அரசுக்கு பலர் எடுத்துக்கூறியும்; ஏனைய அதிகாரப்பகிர்வு செய்யப்பட்ட அரசுகள் விரைந்து செயற்பட்ட போதும்; பொறிஸ் ஜோன்சன் அரைத்தவணைக் காலத்தை வீணடித்துக்கொண்டார். இனி மரணங்கள் எகிறி மருத்துவமனைகள் நிரம்பிவழிய ஆரம்பிக்கவே அவர் பாடசாலைகள் மூடுவது பற்றி சிந்திப்பார். இது நோய்க்கிருமி பரவலை அதிகரிப்பதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான காலத்தையும் அதிகரிக்கும். விரைந்து செயற்படாததால் கூடுதலான கற்பித்தல் காலங்கள் வீணடிக்கப்படும்.

இன்றுள்ள இந்த பிரித்தானிய பிரதமரையும் அமெரிக்க ஜனாதிபதியயையும் அன்று தெரிவு செய்கின்ற போது மக்கள் சிந்தித்து ஆராய்ந்து உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்து இருந்தால் இந்தப் பேரழிவு இவ்வளவு மோசமானதாக அமைந்திருக்காது. மக்கள் எடுத்த அரசியல் முடிவுக்கு அவர்கள் தற்போது கொடுத்துக்கொண்டிருக்கின்ற இந்த விலை மிக அதிகமானதே. அதற்கு அவர்கள் இனிவரும் காலங்களில் கொடுக்கப் போகின்ற விலை இன்னும் அதிகமாக இருக்கும். போது கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த விலை மிக அதிகமானதே. அதற்கு அவர்கள் கொடுக்கப் போகின்ற விலை இன்னும் அதிகமாக இருக்கும்.

வரலாற்றில் தமிழர்களை வெட்கித் தலைகுனிய வைத்த நாள்: 1990 ஓகஸ்ட் 30 : சுதர்சன் சரவணமுத்து

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் யாழ் முஸ்லீம் மக்களின் இருண்ட நாள்!

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி:
வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின,சுமார் 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.

ஒரு இனம் அல்லது சமயக் குழுவினை மற்றுமொரு இனம் அல்லது சமயக் குழு திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், சிங்கள அரசு 1983 இல் தமிழர்களை விரட்டியடித்ததை விட, புலிகள் 1990 இல் முஸ்லீம்களை 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து விரட்டப்பட்ட இனச்சுத்திகரிப்பு என்பது எப்போதும் மன்னிக்கவே முடியாதது.

ஒரு சிறுபான்மையாக இருந்த இனம், பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடியவர்கள் தமக்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த சமூகத்தின் மீது அதிகாரம், வன்முறை, அடக்குமுறை, இனஅழிப்பு என மேற்கொண்டதன் நியாயம் என்ன? ஒரு சிலர் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்த முடியாது.

ஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது எப்படி வெறுப்பு இருந்ததோ, அதே போல இலங்கையில் வாழும் பணக்கார முஸ்லீம் சகோதரர்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு இருந்தது, சிங்களவன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், புலிகள் முஸ்லீம் சகோதர்களை தாம் பிறந்து வாழ்ந்த இடத்தை விட்டு விரட்டியடித்ததற்கும், புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா?

ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் கூட அந்த கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக் குழந்தைகளோடு எதிர்காலமே என்னவென்று தெரியாத நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி:
வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின, சுமார் 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.

காலை 10 மணியளவில் புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டனர் புலிகள்.

அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினார்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். அப்போது இளம்பருதி என்ற புலி மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று இளம்பருதி என்ற புலி அறிவித்தது.

ஜின்னா மைதானமே கதிகலங்கியது. பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினார்கள். சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். இது எங்களுடைய சொந்த இடம் என கூச்சலிட்டு கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.

புலிகளுக்கு ஏது மனசாட்சி:
புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் ொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச்சத்தத்தினால் அதிர்ந்தது.

அனைவரும் பயந்து நடுநடுங்கி அழுது வீங்கிய முகங்களுடன், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறினார்கள்.
புலிகள் அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள்; காதணிகளைக்கூட விடவில்லை.

சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர்.

ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர்.

சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலா புறமும் சிதறி வாழ வைத்தார்கள் இந்தப் புலிகள்.

மனோகரா தியேட்டரில் அடைக்கப்பட்ட பலர் மந்தைகளாக புலிகளின் வாகனங்களில் ஏற்றப்பட்டு கேரதீவுக்குள் விடப்பட்டார்கள். கடல்ப் பயணத்திற்கு பழக்கமற்ற அப்பாவி மக்கள் தம்வசம் வைத்திருந்த ஆடை மூட்டைகளுடன் கடலுக்குள் விழுந்து நனைந்தார்கள். பற்றைக்காடுகளும் முட்புதர்களும் சேற்று நிலங்களும் கடந்து நடைப்பயணமாக பல மணித்தியாலங்கள் அலைந்து வவுனியா பூந்தோட்ட அகதிமுகாமில் தஞ்சமடைந்தார்கள். ஒரு காலத்தில் குட்டி சிங்கப்பூரென வர்ணிக்கப்பட்ட சோனகத் தெருவின் வர்த்தகர்களான முஸ்லீம் சகோதரர்களை, நிவாரணப் பொருட்களையும், நிவாரண உணவுகளையும் கையேந்த வைத்தனர் புலிகள்.

யாழ் பூமிக்கு அவர்களும் சொந்தக்காரர்கள்தான். இது அவர்களது பாரம்பரிய பூமி. பல வருடங்களாக முஸ்லிம்களும் தமிழர்களும் மொழியால் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் இருந்தார்கள். அவர்கள் மதத்தால் இனத்தால் வேறுபட்டவர்கள் என்பதால் வெளியேற்றப்பட்டார்கள்.

ஒரு மாகாணத்திலிருந்து முழு இனமும் வெளியேற்றப்படுவது சர்வதேச சட்டத்தில் குற்றமென்று தெரிந்தும் கூட அன்றைய காலகட்டத்தில் அவர்கள் வெளியேற்றப்பட்டதை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்த, எந்த ஊடகமும், எந்த அரசியல் வாதிகளும் முன்வரவுமில்லை, அதற்கு முயற்சிக்கவுமில்லை.

நடை பெற்ற சம்பவத்திற்கு இதுவரையும் எந்தவொரு ஊடகமும் மன்னிப்பும் கோரவில்லை. அந்த அளவுக்கு மனிதாபிமானம் அற்ற. ஊடக தர்மம் அற்ற ஊடகங்கள் தான் இன்றும் உள்ளது. ஆக குறைந்தது ஒரு கண்டன கூட்டத்தைக் கூட ஏற்பாடு செய்யவில்லை.

ஆனாலும் யாழ் பூமியிலிருந்து முஸ்லீம் மக்களை புலிகள் வெளியேறும்படி கேட்டபோது, இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும் கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.

புலிகளின் ஆயுதங்களையும் மீறி ஒரு சில தனிநபர்கள், ஒரு சில முஸ்லீம் குடும்பங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முன்வந்தனர், அதில் ஒருவர் எனக்கு படிப்பித்த, நான் பிறந்த இடத்தில், பிரபல தனியார் ரியூட்டரி நடாத்திய, எனக்கு மிகவும் பிடித்த மனித நேயம் மிக்க ஆசிரியர் உதவ முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

புலிகள் முஸ்லீம் மக்களுக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல. ஆனாலும் புலிகளின் பெரும் படுகொலைகளில் ஒன்று அந்த காத்தன்குடி பள்ளிவாசல் படுகொலை. தொழுகையிலிருந்த அந்த முஸ்லீம்கள் மீதான படுகொலை பெரும் ரத்த அடையாளம். அவர்களின் மிகக் கொடூரமான வெறிக்கு பெரும் சாட்சி. புனிதமான மசூதி அன்று இரத்த காடாயிற்று. குரான் ஒலித்த இடம் அன்று ஓப்பாரி ஓலத்தில் அழுதது.

இச்சம்பவத்தில் 3 வயது குழந்தையினை புலிகள் கொன்ற கோரமும் உண்டு. 10 வயதிற்குட்பட்ட 30 சிறுவர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். அந்த பள்ளிவாசலில் பிஞ்சுகள் உட்பட ஏராளமானோர் கொல்லபட்டு மசூதி ரத்தத்தில் நனைந்தது. இதனை எல்லாம் கடந்து புலிகள் சாதித்தது என்ன? தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு அமைவாக அடுத்த சில ஆண்டுகளிலேயே புலிகள் யாழ் மண்ணில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அடுத்த இரு தசாப்தங்களிற்குள் புலிகள் இவ்வுலகில் இருந்தே களையப்பட்டனர்.

உலகம் இவற்றை அறிந்ததால்தான் இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றது. இறுதி யுத்தத்தில் ஈரான், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்ல புலிகள் தலைமேல் வைத்துக் கொண்டாடிய மேற்கு நாடுகளும் இலங்கை அரசோடு இணைந்து பிரபாகர சம்காரம் செய்தனர்.

என்னிடம் ஆயுதம் இருக்கின்றது. இது என் நாடு. அதனால் எல்லோரையும் கொன்றுகொண்டே இருப்பேன் என்பது போராட்டம் ஆகாது. அதன் பெயர் காட்டுமிராண்டித்தனம். ஏன் உங்களிடம் ஆயுதமிருந்தால் எதுவும் செய்வீர்களா? எங்களிடம் இருக்கும் ஆயுதங்களை காட்டட்டுமா? என உலக நாடுகள் திரண்ட பொழுது புலிகள் காணாமல் போனார்கள்.

“இலங்கையில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் மிகச் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது” ஶ்ரீஜயவர்தனபுர பல்கலை கழக ஆய்வில் கண்டுபிடிப்பு !

தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலை கழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

அத தெரண ´BIG FOCUS´ நிகழ்ச்சியில் இன்று (31.10.2020) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கந்தக்காடு மற்றும் கடற்படை கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு என்று வந்தது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும், நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச் செய்யும்” – தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் .

“கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச் செய்யும்’ என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.

வடக்கு மாகாண சபையால் 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு  அமைவாகக் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பொ. ஐங்கர நேசன் வெளியிட்டுள்ள ஊடகச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த ஊடகச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களுக்கும் மரங்களுக்கும் இடையேயிருந்த பண்பாட்டுப் பந்தம் மிகவும் உணர்வு பூர்வமானது. மூதாதித் தமிழர்கள் மரங்களை இறையாக வழிபட்டார்கள் . உருவ வழிபாடு ஆரம்பித்ததும் மரங்களை இறைக்கு நிழற்
குடைகளாக்கி வலம் வந்தார்கள். மரங்களைக் குலக் குறிகளாக்கிக் கொண்டாடினார்கள். போர்க்களத்தில் பூமாலைகள் அணிந்தே எதிரிகளுடன் பொருத்தினார்கள். மங்கையர்கள் மரங்களைக் காதலர்களாக உருவகித்து நாணி நின்றார்கள்.

மறைந்த உறவினர்களின் நினைவுகளை மரங்களில் ஏற்றிக் கைதொழுதார்கள். ஒரு மரத்தை அழித்துத்தான் என் உயிரைக் காப்பாற்ற வேண்டுமெனில் மரம் வாழட்டும். நான் சாகிறேன்’ என்ற சங்கப் புலவனின் வாரிசுகளான நாமோ, இன்று எவ்விதக் கருணையும் இன்றி மரக் கொலைகளைச் செய்து
வருகிறோம்.

அறிவியல் வளர்ச்சி மரங்களுடன் நாம் கொண்டிருந்த பண்பாட்டு உறவைப் புறமொதுக்கியுள்ளது. அறிவியல் எப்போதும் அபிவிருத்தியின் பக்கம் சார்ந்ததாகவே இயங்கும். அபிவிருத்தி தன் பாதைக்குக் குறுக்காக நிற்கும் எதனையும், அது மனிதர்களாக இருந்தாலும் அழிப்பதற்குத்
தயங்காது.

இதனாலேயே வீதி அகலிப்பின்போதும், தொலைத்தொடர்பு வழித்தடங்கள், மின்வழித்தடங்களை அமைக்கும் போதும் மாற்றுவழி பற்றிச் சிந்திக்காது மரங்களைக் குற்றுயிரும் குலையுயிருமாகச் சாய்த்து வருகிறோம்.

உலகம் பூமி சூடேறிக் கொண்டிருப்பதால் படுபாதகமான காலநிலை மாற்றங்களை இன்று எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இன்னொரு புறம் வைரசுக்கள் விகாரிகளாகித் தாக்குவதால் கொரோனா, சார்ஸ் போன்ற கொடிய நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இப்பேரிடர்கள் யாவும் காடுகளை அழித்ததால், இயற்கையைச் சிதைத்ததால் ஏற்பட்டதன் விளைவுகளே என அறிவியல் மெய்ப்பித்ததன் பின்னர், இப்போது காடு வளர்ப்பும் மரங்களின் நடுகையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இம் முயற்சிகள் தனியே அறிவியல் அணுகுமுறையுடன் மாத்திரம் அமையாது, பண்பாட்டுப் பிரக்ஞையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மரநடுகையை மேற்கொள்வதற்குக் கார் என்ற மழையின் பெயரைத் தன்பெயராகக் கொண்ட கார்த்திகை மிகப் பொருத்தமான மாதம்.

அறிவியல் ரீதியான காரணத்துக்கும் அப்பால் தமிழர் வாழ்வியலில்
கார்த்திகை பண்பாட்டு முக்கியத்துவம் பெற்ற ஓர் மாதமுமாகும். வீடுகளில் விளக்கேற்றி வழிபடும் தீபத்திருநாளையும் இறந்த மறவர்களின் நினைவுகளை நெஞ்சிருத்தி நெக்குருகும் நாட்களையும் இம்மாதம் தன்னகத்தே கொண்டுள்ளது.

மரங்கள் மனிதர்கள் உயிர் வாழுவதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும் கரிப்பிடிக்கும் காற்றைச் சுத்திகரிக்கும் வெம்மை தணிவிக்க மழையைத் தரும் என்று கற்றுத்தருகின்ற அறிவியலும், வெட்டு மரங்களாகக்கை நிறையக் காசு தரும் என்று போதிக்கும் பொருளியலும் மரங்களுக்கும் எங்களுக்கும் இடையே காலங்காலமாக நிலவி வந்த பண்பாட்டு உறவைத் துண்டித்துவிட்டன. மரங்களுடனான பண்பாட்டு உறவே மரங்கள் மீதான பற்றுதலை வளர்க்கும். இழந்துவிட்ட இந்தப் பண்பாட்டு உறவை மீட்டுருவாக்கும் ஓர் தமிழ்த்தேசியச் செயற்பாடே கார்த்திகை மாத மரநடுகை ஆகும்.

தேசியம் என்பது ஒரு இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, நம்பிக்கைகள் ஆகியன பின்னிப்பிணைந்த ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில் கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச் செய்யும் என்றும்
குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு இந்த வருடம் மேலதிகமாக 10 ஆயிரம் மாணவர்கள் தகுதி !

இலங்கையில் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்தத் தகவலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மருத்துவ பீடங்களுக்கு 371 மாணவர்களும், பொறியியல் பீடங்களுக்கு 405 மாணவர்களும் இம்முறை இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

இந்தநிலையில், 2020 ஒக்டோபர் 28ஆம் திகதி கம்பஹா விக்கிர மாராச்சி ஆயுள்வேத கற்கை நிறுவனத்தைப் பூரணமான பல்கலைக்கழகம் என அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட் டத்தின் பிரிவு 21 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய ஆணையத்துடன் கலந்தாலோசித்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

“மனைவியோடு சென்று வாக்களித்தார் ஜோபைடன்“ – தேர்தலில் வாக்களித்த பின் கறுப்பின இளைஞன் படுகொலைக்கு கண்டனம் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ம் தேதி என்றாலும், முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அமெரிக்காவில் உண்டு. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவே முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உண்டு.
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை புளோரிடாவில் வாக்களித்தார். இந்நிலையில், ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடன், அவரது மனைவி ஜில்லும் தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் பிடன் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஜோ பிடன் கூறியதாவது:
“பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொலை செய்த நிலையில் வெடித்த வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஜனாதிபதியானால் போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலையொட்டி கிட்டத்தட்ட 5 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் பிரச்சினையில் தலையீடு செய்வது இலங்கையின் வேலை அல்ல” – சீனாவுக்கான இலங்கைத்தூதுவர்.

இலங்கை மீது தொடர்ச்சியாக சீனா எடுக்கின்ற கரிசனை , அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் வருகை என பல விடயங்களை சுட்டிக்காட்டி பல தரப்பினரும் அமெரிக்க – சீன பனிப்போரின் ஒரு பகுதியாக இலங்கை பயன்படுத்தப்படுவதாக பல தரப்பினரும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் பொம்பியோவின் வருகையின் போது ஜே.வி.பி கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பேரணி ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் “அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் பிரச்சினையில் தலையீடு செய்வது இலங்கையின் வேலை அல்ல” என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித்த கொஹொண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிடும் போது ,

“இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் சிறந்தவொரு உறவு உள்ளது. அந்த உறவை வலுப்படுத்துவதே எனது நோக்கம். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தெளிவான நோக்கம் உள்ளது. தற்போது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் பிரச்சினை உள்ளது. அதனை அந்த இரு நாடுகளும் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதில் தலையிடுவது எமது நோக்கம் அல்ல. நாட்டின் நலன், சுயாதீன தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பது முக்கியமாகும். இலங்கை ஒரு பிரிப்படாத நாடு என்ற வகையில் உலக வல்லரசு நாடுகளின் பிரச்சினைகளில் தலையிடுவது எமது நோக்கம் அல்ல´ என அவர் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.

“வரும் மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால் தமிழர் பிரச்சனைகள் நீர்த்துப்போகும்” – எம்.கே.சிவாஜிலிங்கம் !

“வரும் மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால் தமிழர் பிரச்சனைகள் நீர்த்துப்போகும்” என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று (30.10.2020) யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில்;

2002.12.05 நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் கூட்ட அறிக்கையில் சமஷ்டியை பற்றி ஆராய்வதற்கு இணக்கம் காணப்படுகிறது. தற்காலிகமாக 13வது திருத்தத்தை காப்பாற்றிக்கொண்டு, அதை ஒரு தீர்வாக நோக்கி பயணிப்பதற்கு வேண்டுகோள் விடுப்பதன் ஊடாக சமஷ்டியை நோக்கி பயணிக்கவேண்டும்.

அந்தவகையில்தான் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசிற்கு கொடுத்த அழுத்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு 13வது திருத்தத்தை வைத்துக்கொண்டு சமஷ்டிக்கான தீர்வை நோக்கி பயணிக்கவேண்டும் . இது தான் அரசியல் தீர்வாக இருக்கமுடியும் . இலங்கைக்கான நோர்வே சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசிய கட்சிகள் கேட்டுக்கொண்டால் சமஷ்டிக்கு ஆதரவாக தான் வேலை செய்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் தமிழ் தேசிய கட்சிகள் எரிக்சொல்ஹெய்மிடம் வேண்டுகோளை விடுக்கவேண்டும்

மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால் எமது பிரச்சனைகள் நீர்த்துப்போகும். மீண்டும் இவர்களுக்கு காலநீட்டிப்பு கொடுத்தால் உலகத்திலே மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கும். ஆகவே அது பிரயோசனம் இல்லை. எந்த தீர்மானமும் எடுக்காவிட்டால் காலாவதியாகிவிடும். ஆகவே ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு அனுப்பப்படவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்க்கட்சிகள் அனைத்தும் முன்வைக்கவேண்டும்.

அதை இப்பொழுதே முன்வைப்பதனூடாக மார்ச் மாதம் அந்த விடயம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து நியூயோர்க் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு நகர்த்தவேண்டும் என்ற கோரிக்கையை நாம் அனைவரும் முன்வைக்கவேண்டும்”  என தெரிவித்தார்.

மைக்பொம்பியோ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்காதது ஏன்..? – காரணத்தை வெளியிட்டது பிரதமர் அலுவலகம் !

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ வருகை தந்த போது அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்திக்கவில்லை என்பது மிகப்பெரும் குறையாக முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அதற்கான காரணம் என்ன ..? என பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொம்பியோவை சந்திக்கவில்லை என்பதுடன் முன்னரேயே சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கவுமில்லை” என பிரதமர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் அனுராதா ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் அனுராதா ஹேரத் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது-

“அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்காமை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

உண்மையில் ஆரம்பத்திலேயே பிரதமர் மைக் பொம்பியோவை சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கவில்லை.பொம்பியோவின் மிகக் குறுகிய கால விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் தலைமைகளில் ஒருவரை மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டது” எனவும் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸ் – ஒரே நாளில் ஒரு லட்சத்தை நெருங்கும் புதிய தொற்றாளர் தொகை !

சீனாவின் வுகான் நகரத்தி பரவ ஆரம்பித்ததாக கண்டுபிடிக்கப்பட்ட  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அத்துடன் புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஒருநாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. தற்போது அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 970-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது 30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வரும் செவ்வாய்க்கிழமை அங்கு ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்கம் வேகம் எடுத்திருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஜனாதிபதி டிரம்பின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.