November
November
“ஒவ்வோர் ஆண்டும் சுமார் 700 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்கின்றமை மோசமான வளர்ச்சியாகும்” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பீடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதேவேளை மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தவும் நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்களை உருவாக்க ஒரு பொறிமுறையை விருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
இவ்வாண்டு நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கை 10,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கை 371ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 700 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்கின்றனர். இது ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மோசமான வளர்ச்சியாகும் என்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளித்து சோதனை செய்யும் திட்டம் முதலில் தொடங்கியது. அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசி பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டு 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அமீரகத்தில் பரிசோதனை செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்கனவே சீனாவின் வுகான் நகரத்தில் உள்ள சைனா நேசனல் பயோடெக் குழுமத்தின் சார்பில் வெற்றிகரமாக 2 கட்டமாக பரிசோதனை செய்யப்பட்டது.
அடுத்தபடியாக 3-வது கட்ட பரிசோதனை அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், அமீரக மந்திரிகள் உள்பட பலருக்கு தடுப்பூசி உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் 42 நாட்களில் 17 முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
சோதனை முயற்சியில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரி முடிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று துபாயில் உள்ள சுகாதார மையத்திற்கு வருகை புரிந்த அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிற்கு கொரோனா தடுப்பூசி மருந்து உடலில் செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் மருத்துவ நிபுணர்களிடம் அந்த மருந்தினை குறித்து கேட்டறிந்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர் கூறும்போது, “அனைவரும் சுகாதார பாதுகாப்பு, சிறந்த உடல் நலத்தை பெற வேண்டும் என விரும்புகிறேன். அமீரகத்தில் தடுப்பூசியை கிடைப்பதற்கு இடைவிடாமல் உழைத்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் பாராட்டுகள். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய பணி நம்மை பெருமையடைய செய்கிறது. அமீரகத்தில் எப்போதும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
இந்த கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி பெற்றால் அமீரகத்தில் பெரிய வர்த்தக ரீதியிலான கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என அமீரக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தேவாலயம் அருகே 6 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது.
வியன்னாவின் தேவாலயப் பகுதியில் 6 இடங்களில் கண்மூடித்தனமாக மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் உட்பட 04 பேர் பலியாகினர். பொதுமக்களில் பலர் படுகாயமடைந்தனர்.
தற்போது இந்த தாக்குதலுக்கு உலகின் மிக கொடூரமான பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அபுதாங் அல்பேனி எனவும் அறிவிக்கப்பட்டு அவரது புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் பயங்கரவாதி அல்பேனி, தானியங்கி துப்பாக்கி, கூரிய ஆயுதம், பிஸ்டல் ஆகியவற்றை கையில் வைத்திருக்கிறார்.
“பசில் ராஜபக்ஷ மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்து பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பை வழங்குவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(03.11.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள டிலான் பெரேரா ,
“பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவிப்பதை போன்றே வெளியில் உள்ளவர்களும் விருப்பத்துடன் உள்ளனர். ஆனால் அதனை அவரே தீர்மானிக்க வேண்டும். எனினும் அவர் பாராளுமன்றத்திற்கு வந்து பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பை வழங்குவார் என்ற நம்பிக்கை நாட்டு மக்களில் கட்சி பேதமின்றி அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயலணியில் சுயேற்சையாக முன்னின்று தற்போது செயற்பட்டு வருகின்றார். நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்த்திட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வருகின்றார். கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை பிரச்சினை காணப்பட்டபோது, அவருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது கோட்டாபய ராஜபக்ஷவை பூதாகரமாக காட்டினார்கள் தற்போது பசில் ராஜபக்ஷவை பூதாகரமாக காட்ட முயல்கின்றார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது வயதுச் சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதான வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உடுவில் – சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் நேற்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நட்சத்திர விடுதியில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய தாய் மற்றும் மகள்கள் இருவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.அவர்களில், ஒன்பது வயதுச் சிறுமிக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாய் மற்றும் இன்னொரு பிள்ளைக்கு முதல் பரிசோதனையில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி – உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் இரண்டு வயது மகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த முறைதான் மிக அதிக அளவில் அமெரிக்காவில் வாக்குகள் பதிவாகி உள்ளது. கிட்டத்தட்ட 160 மில்லியன் வாக்குகள் அமெரிக்காவில் இந்த முறை பதிவாகி உள்ளது. இதில் 101 மில்லியன் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது.
அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள காங்கிரஸ் அவை தேர்தலில் செனட் சபையில் ஜனநாயக கட்சியும், பிரநிதிகள் சபையில் குடியரசு கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் 50 மாகாணங்களிலும் தற்போது வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் அங்கு காங்கிரஸ் சபைக்கான தேர்தலும் நடந்து வருகிறது. காங்கிரஸ் சபை என்பது அமெரிக்காவின் பாராளுமன்ற சபை ஆகும். இதில் இரண்டு அவைகள் உள்ளது. ஒன்று செனட் இன்னொன்று பிரநிதிகள் சபை. இங்கு மொத்தம் 535 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தப் பாராளுமன்றில் உள்ள செனட் சபையில் 100 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல் பிரதிநிதிகள் சபையில் 435 பிரநிதிகள் உள்ளனர்.
இந்த அவையில் எந்த கட்சி எவ்வளவு உறுப்பினர்களை வெல்கிறது என்பதை பொறுத்தே இனி வரும் நாட்களில் சட்டங்களை இயற்ற முடியும். அதாவது புதிய சட்டங்களை ஜனாதிபதி இயற்ற வேண்டும் என்றால் இந்த செனட் மற்றும் பிரநிதிகள் சபையில் பெரும்பான்மை இருக்க வேண்டும். இதனால் இங்கு அதிக இடங்களில் வெற்றிபெறுவது அவசியம் ஆகும்.
அமெரிக்க காங்கிரஸ் அவையில் பிரதிநிதிகளை 2 வருடங்களுக்கு ஒருமுறையும், செனடர்களை 6 வருடங்களுக்கு ஒருமுறையும் தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 செனட்டர்கள் வீதம் 100 செனட்டர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிரநிதிகள் எண்ணிக்கை மாறுபடும்.
இந்த நிலையில் தற்போது நடந்துள்ள காங்கிரஸ் அவை தேர்தலில் முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் செனட் சபை – ஜோ பைடனின் ஜனநாயக கட்சி 40 இடங்களில் வென்றுள்ளது. டிரம்பின் குடியரசு கட்சி 37 இடங்களில் வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவை.
காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை தேர்தலில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி 68 இடங்களில் வென்றுள்ளது. டிரம்பின் குடியரசு கட்சி 87 இடங்களில் வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை.
“நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முழுமையாக ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” என ஜே.பி.வி.யின் (மக்கள் விடுதலை முன்னணி) தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றில், இன்று (03.11.2020) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது,
“தற்போது கொரோனா, பொதுவான ஒரு எதிரியாக மாற்றமடைந்துள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்தும் காணப்பட்டால், நாடே பெரிதும் பாதிக்கப்படும்.
இன்று இராணுவத்தினர், சுகாதார அதிகாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்துதான் நிலைமையை கட்டுப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். எனினும், இந்த கட்டமைப்பில் ஏதேனும் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டால், அது பாரதூரமாக அமைந்துவிடும். இதனை அரசாங்கம் புரிந்துக் கொள்ளவேண்டும்.
இது தேசிய ரீதியிலான பிரச்சினை. இதனை முறியடிக்க தேசிய ரீதியிலான பொறிமுறையொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம். இந்த விடயத்தில் அரசியல் பேதங்களை கடந்து செயற்பட வேண்டும். அரசாங்கம் இதற்குத் தயார் என்றால், நாமும் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இன்றையதினம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. இந்தத்தேர்தலில்இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடனும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் என்றொரு பகுதி உள்ளது. அதில் டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற நகரும் மில்ஸ்பீல்டு என்ற நகரும் உள்ளன. அதில், டிக்ஸ்வில்லி நாட்ச் நகரில்தான் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அதுவும், அனைத்து வாக்குகளையும் அவர் சுருட்டிக்கொண்டுள்ளார், அவரை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால், டிக்ஸ்வில்லி நாட்ச் நகரின் மொத்த மக்கள்தொகையே 12 தான் (2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி). அதிலும் 5 பேர்தான் வாக்காளர்கள்! அந்த ஐந்து பேர் வாக்களித்ததில், ஐந்து பேருமே ஜோ பிடனுக்குதான் வாக்களித்துள்ளார்கள். ஆகவே, 5 வாக்குகளையும் பெற்று ஜோ பிடன் வெற்றிபெற, ஒரு வாக்கு கூட கிடைக்காமல் தோல்வியடைந்துள்ளார் டிரம்ப்.
அதேபோல், 12 மைல் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு நகர் மில்ஸ்பீல்டு, அதன் மக்கள் தொகை 21. அந்த 21 பேரில், 16 வாக்குகள் டிரம்புக்கும், 5 வாக்குகள் ஜோவுக்கும் கிடைத்துள்ளன. ஆக, அந்த தொகுதியில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.