04

04

பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து – 17 பேர் உயிரிழப்பு

85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவத்துக்குச் சொந்தமான C-130 விமானம், அந்நாட்டின் தென் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு (அந் நாட்டு நேரப்படி) விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள, சுலு மாகாணத்தின், ஜொலோ தீவில் தரையிறங்க முற்பட்ட வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
குறித்த விமானத்தில் புதிதாக இராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்துள்ளனர் என்றும் அப்பகுதியை ஆக்கிரமித்துள்ள அபூ செய்யப் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொருட்டு அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டடனர் என்றும் மேலும் தெரியவந்துள்ளது.

பசிலின் வருகையால் தீர்வு கிட்டாது – தயாசிறீ காட்டம்

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது போல உருவாக்கப்படும் விம்பங்களில் உண்மையில்லை என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வந்து அமைச்சரானால் மறுநாள் காலை நினைப்பதெல்லாம் நடந்து விடாது. இன்று நம் நாட்டில் டொலர்கள் இல்லை. 2025ஆம் ஆண்டில் கடனை செலுத்த 29 பில்லியன் டொலர் தேவை.
கோட்டாபயவின், மஹிந்தவின் அரசாங்கமோ அல்லது பசில் நாடாளுமன்றத்துக்கு வந்ததால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றிருக்காமல், நாட்டு மக்களுக்கு முதலில் பிரச்சனைகளை தெரிவிக்க வேண்டும். அப்படி கூறினால், இந்த பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை மக்களிடம் கேட்க முடியும். ஏனென்றால் நாம் அனைவரும் இதை எதிர்கொள்ள வேண்டும். எவரேனும் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக கூறினால், அப்படியில்லை. உண்மை நிலைமை இதுதான் – என்றார்.

அதிகரிக்கும் தற்கொலைகள் – இதற்கான தீர்வு என்ன ..?

செய்தி – நேற்றைய தினம் வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப தலைவர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

…………………………………………………………………………………………………………………………………..

தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவருடைய சடலம் மீட்பு என்பது .., வெளியே நின்று பார்த்தால் சாதாரணமான ஒரு தற்கொலையாகவோ அல்லது ஒரு சாதாரண செய்தியாகவோ  தெரியலாம். ஆனால் அந்த முடிவுக்கு அவர் வருவற்கு அவரை தள்ளிய சூழல் பற்றி நாம் அனைவரு் சிந்திக்க மறந்து விடுகின்றோம். அண்மைய நாட்களில் கிடைக்கின்ற அதிக தற்கொலை தொடர்பான செய்திகள் குடும்பங்களுடன் தொடர்புடையனவாகவே இருக்கின்றன.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்த தகவல்களின் படி 2016ஆம் ஆண்டில் தற்கொலைகள் அதிகமாக இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருந்தது. இப்போதும் கூட இந்த தரவுகளின் பட்டியலில் இலங்கை முதல் 20 இடங்களுக்குள் தான் இருக்கின்றதாம். இங்கு நடக்கின்ற அதிகமான தற்கொலைகளுக்கு பிரதானமான காரணம் 03 தான் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

01. மன அழுத்தம். (Depression) :- இது கடன் தொல்லை, காதல் தோல்வி, குடும்பத்தகராறு என்று பட்டியல் நீண்டு செல்லும்.

02. மதுப்பழக்கத்துக்கு அடிமையாதல். இதனுடன் சேர்த்து ஏனைய போதைப்பொருள் பாவனையும் காரணங்களாகும்.

03. பெற்றோர் கண்காணிப்பு இன்மை மற்றும் தனிமை.

முக்கியமாக இந்தத்தற்கொலைகள் கூட இலங்கையில் இந்துக்களிடமும் பௌத்தர்களிடமுமே அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்லாமியரிடையே இது மிக்ககுறைவாகவே காணப்படுகின்றமையும் நோக்கத்தக்கது. ஏனெனில் இஸ்லாமியருடைய மதம் அது தடுக்கப்பட்டது என கூறுவதும் மதம் மது உள்ளிட்ட போதைப்பொருட்களை அது புறக்கணிப்பதாலுமு் அதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் காணப்படுவதாலும் ஒப்பீட்டளவில் ஏனைய மதத்தவர்களை காட்டிலும் இலங்கை வாழ் இஸ்லாமியரிடம் தற்கொலைகள் மிகச்சொற்பமானளவே அந்த  இடம்பெறுகின்து. இது ஏனைய மதங்களின் பீடங்களால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

தற்கொலை என்பது உடனடியாக எடுக்கப்படுகின்ற முடிவு போல தோன்றினாலும் அது தூண்டப்படுகின்றது. ஒரு ஒரு விலைமதிப்பற்றது. மனித உறவுகளுடைய பெறுமதியை இங்கு யாரும் உணர்ந்து கொள்வதில்லை. யாரும் நமக்கில்லை என்ற விரக்தியின் உச்சமே இந்த தற்கொலைகளின் முக்கிய புள்ளி என நினைக்கின்றேன். இங்கு எல்லோரும் குடும்பமாக ஒரு வீட்டில்தான் இருக்கிறோம். ஆனால் தனியாக பிரிந்து இருக்கின்றோம். யாரும் யாருடனும் உரையாடத்தயாராக இல்லை. கேவலம் தொலைபேசியுடன் செலவிடும் நேரத்தை கூட சக வீட்டு மனிதர்களுடன் நாம் செலவிடத்தயாராகவில்லை என்பதே இன்றைய தேதியின் ஆகக்கேவலமான உண்மை.

தற்கொலைகள் எவையுமே தற்கொலைகள் அல்ல. அவை தற்கொலை செய்பவரின் சூழலால் உருவாக்கப்படுகின்றது. ஒருவனுடைய பிரச்சினையை கேட்கக்கூட அவரைச்சுற்றி யாரும் இல்லை என்ற நிலையே இவற்றிற்கான அடித்தளம்.

2020ல்  கிளிநொச்சிக்கருகில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  உண்மையிலேயே அது தற்கொலை அல்ல அது ஒரு கொலை. அவர்கள் நன்றாக படித்தவர்கள். ஆகவே நல்ல நட்பு வட்டமும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுடைய பிரச்சியை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூட முடியாத அளவிற்கு அவர்களை சுற்றியிருந்த நண்பர்கள் வட்டம் தூரமாகியிருந்துள்ளது என்பதே வேதனைக்குறிய விடயம். என்னைக்கேட்டால் அந்த தற்கொலைக்கு அவர்களுடைய நண்பர்களே காரணம்.

அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன என்ற சுயநலமான சிந்தனையும் நம்முள் அதிகம் ஊறிப்போய்விட்டதும் தற்கொலைகளுக்கான காரணம் தான். சுயநலசிந்தனையை விடுத்து மனித உயிரினுடைய பெறுமதியை அறிந்து கொள்ளுங்கள். அடுத்தவன் ஏதாவது பிரச்சினை என உங்களிடம் சொல்ல முற்பட்டால் அதனை முதலில் பொறுமையாக காதுகொடுத்து கேளுங்கள். உங்களால் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆறுதலான வார்த்தைகளை சரி கூற முற்படுங்கள். அதுவாவது ஆறுதலளிக்கும்.

இந்த தற்கொலைகளில் சினிமாவுக்கு இருக்கின்ற பங்களிப்பும் காத்திரமானது. முக்கியமாக நாம் பார்க்கக்கூடிய சினிமாக்களில் பாதி பிரச்சினைகளுக்கு தீர்வாக தற்கொலைகளையே தீர்வாக முன்வைப்பபதை காணமுடியும். அது கண் வழி சென்று மூளையில் பதிந்து அவர்களும் அது போன்றதான ஒரு பிரச்சினையை எதிர் கொள்ளும் போது அதுதான் தீர்வு என எண்ணும் நிலைக்கு அவர்களை தள்ளி விடுகின்றது. நடிகர் சிவகார்த்திகேயனுடைய நடிப்பில் வெளிவந்திருந்த ஹீரோ என்ற படத்தில் ஒரு மாணவி கல்வி வாழ்க்கையில் தோல்வியடைந்ததும் மனமுடைந்து புகையிரதத்தில் இருந்து கீழே குதித்து இறப்பது போன்றதான ஒரு காட்சி உருவாக்கப்பட்டிருக்கும்.  இவர்களுடைய உழைப்பு என்ற விடயத்துக்காக ஏதோ ஒரு உளவியல் தாக்கத்தை திணிக்கிறார்கள் போலவே தோன்றுகிறது. சமூகம் சார்ந்த நோக்கத்தில் அந்தப்படம் எடுக்கப்பட்டிருந்தால் குறித்த மாணவி முயற்சி செய்து தன்னை மீள ஏதோ வகையில் உருவாக்கி வாழ்வில் முன்னேறுவது போலவும் தற்கொலை தீர்வல்ல என்பது போலவும் காட்டியிருக்கலாம். ஆனால் இன்று வரை பல சினிமாக்கள் அதை செய்யத்தவறிவிடுகின்றன.

கடந்த இரு வருடங்களில் கூட அதிகளவிலான பாடசாலை மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அதிகம் பதிவாகியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளும் – பெற்றோருடய முறையான கவனிப்புக்கள் இல்லாமையும் அந்தச்சிறுவர்கள் தற்கொலை செய்ய கரணமாகிவிடுகிறது. பெற்றோர்கள் பணம் – பணம் என ஓடிக்கொண்டிருக்கிறார்களே தவிர அந்தப்பணத்தை ஏன் சேர்க்கிறோம்..? யாருக்காக சேர்க்கிறோம் என எண்ணுவதில்லை.

கல்வி மட்டுமே வாழ்க்கைக்கான திறவுகோள் என திணிக்காதீர்கள். மற்றவருடன் பிள்ளைகளை ஒப்பிட்டு நோக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளுடன் மனது விட்டு பேசுங்கள். ஏதோ கட்டுக்கொப்பாக வளர்ப்பது போல காட்டி வன்முறையை கக்காதீர்கள். அவர்களுக்கு என நுரம் ஒதுக்கி நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்யை கொடுங்கள். பிரச்சினைகள் பற்றி ளெிப்படையாக உரையாடுங்கற் உண்மையிலேயே மாற்றம் இருக்கும்.

மனிதர்களிடையே அன்பை பரிமாறுங்கள் –  உங்கள் அருகிலுள்ள ஒருவனுடைய கடினமான நேரத்தில் பங்கெடுங்கள். அவனுக்கு நம்பிக்கையை கொடுங்கள். நாங்கள் இருக்கிறோம் எழுந்து வா என்ற தன்னம்பிக்கையை கொடுங்கள். சுய நல சிந்தனையை விடுத்து பொதுநலமாக சிந்திக்க ஆரம்பியுங்கள். இந்த பொது நல சிந்தனை தான் தற்கொலைகளை தடுக்கின்றன. உளவியல் வழிகாட்டல்களோ – முறையான உளவியல் வகுப்புக்களோ  தற்கொலைகளை குறைக்கப்போவதில்லை. இந்த பொது நல சிந்தனையும் அடுத்தவர் மீது நாம் காட்டுகின்ற மனித நேயமுமே தற்கொலைகளை தடுக்கும் சக்தி மிக்கன என்பதை புரிந்து கொணள்ளுங்கள். சமூகத்துக்கு போக வேண்டாம்.  வீடுகளில் இதனை தொடங்குங்கள்.  அன்பினாலான சிறு மாற்றம் பெருவெள்ளமாகட்டும்..!