August

August

இலங்கையில் முழுமையாக தடைசெய்யப்பட்ட இன்னுமொரு பொருள் !

பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் உக்காத லஞ்சீட் பாவனை இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அதனை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட பட்டியலை அமைச்சரவை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பிளாஸ்ரிக்கினால் தயாரிக்கப்படும் கத்தி, கரண்டி, முள்கரண்டி, ஊதுபத்தி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன், உரிய பருமைக்கும் குறைவான பொலித்தீன்கள், பிளாஸ்ரிக் உற்பத்தியிலான பூமாலைகள், இடியப்பத் தட்டுக்கள் மற்றும் கோப்பைகளும் தடை செய்வதற்கான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியாவில் 4 லட்சம் மக்கள் பஞ்சத்தில் – ஐக்கிய நாடு சபை அறிக்கை !

எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. வெளியிட்ட அறிவிப்பில்,

“ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த 12 மாதங்களில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.

இப்பகுதியில் குழந்தைகளின் உடல் நலம் எங்களுக்கு அச்சத்தைத் தருகிறது. டைக்ரேவில் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பரிசோதனை செய்ததில் இருவரில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

டைக்ரேவில் சுமார் 4 லட்சம் மக்கள் பஞ்சத்தில் வாழ்கின்றனர். மேலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அவசர உணவுத் தேவையில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக டைக்ரே பகுதியில் உள்ள இனக்குழுக்களிடம் மோதல் நிலவுகிறது.

முன்னதாக, 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டது. அண்டை நாடான ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவிவந்த ராணுவ ரீதியிலான சிக்கலைக் கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்குக் கொண்டுவந்தார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சொந்த நாட்டில் நிலவும் இனக்குழு பிரச்சினைகளை அபய் அகமதுவால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லையா? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒலிம்பிக்கில் போட்டி இலக்கத்தை சட்டை ஊசியால் குத்திச்சென்ற இலங்கை வீரர் – சமூக வலைத்தளங்களில் விமர்சனம் !

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடந்த போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் குவிந்து வருகின்றன.

Gallery

நிமாலி நியனாராச்சி என்ற இவர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார்.

தனது போட்டி இலக்கத்தை அவர் சட்டை பின் ஒன்றின் மூலம் கட்டி தொங்கவிட்டு காட்சிப்படுத்தியுள்ளதே விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தலா 100 டொலர்கள் பரிசு !

அமெரிக்காவில் புதிதாக கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தலா 100 டொலர்களை (சுமார் 20,000 இலங்கை ரூபா) வழங்குமாறு அமெரிக்காவின் உள்நாட்டு அரசுகளை ஜனாதிபதி ஜோ பைடன் கோரியுள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

அத்துடன், அமெரிக்க சமஷ்டி அரச ஊழியர்களுக்கு தடுப்பூசி தொடர்பான புதிய அறிவுறுத்தல்களையும் அவர் விடுத்துள்ளார்.

சமஷ்டி அரச ஊழியர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் அல்லது கட்டாய சோதனைக்கு உட்படுவதுடன் முகக்கவசம் அணிய வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மக்கள் தொகை சுமார் 33 கோடியாகும். இவர்களில் 16.38 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டின் தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மத்திய நிலையத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சகலதுறை வீரரான இசுரு உதான !

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா, 33 வயதான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை நிர்வாகத்திடம் அறிவித்துள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இடதுக்கை வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான இசுரு உதான, இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் 237 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இதேபோல 34 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 27 விக்கெட்டுகளையும் 256 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.