06
06
பிரதமர் ரணில் விக்கிரமங்க நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
“இன்று முதல் உண்மையிலேயே நானும் போராட்டத்திற்கு என்னை தயார்படுத்திக்கொள்கிறேன். நான் அரசாங்கத்தினுள் வந்து 7 நாட்கள் ஆகிறது. இதில் என்ன நடக்கிறது என்று பார்த்தேன். நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க ஆடும் இந்த அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும். ஏனென்றால் டொலர்களைக் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்தையும் இவர் நிறுத்துகிறார்.
நாட்டின் பணப்புழக்கம் குறித்து அவரிடம் எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு எப்படி உணவளிப்பது என்பது பற்றி அவரிடம் எந்த திட்டமும் இல்லை. டொலர்களை எப்படி கொண்டு வருவது என்பது பற்றியும் எந்த திட்டமும் இல்லை. இந்த நேரத்தில் அவர் மக்கள் பிரச்சனைகளை சொல்லிக்கொண்டு திரியாமல் நிதியமைச்சர் என்ற விதத்தில் செயற்பட வேண்டும். உண்மையில் எனக்கு பிரதமர் பதவியில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஏனென்றால் பத்து வருட மல்டிபிள் விசா ஒரு மாதத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையில் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இன்று ஒரு மாதமாக திறைசேரியில் வைத்துக் கொண்டுள்ளனர்.
ஏனென்றால் அவருக்கு ஒரு பழக்கம் உள்ளது, டொலர் வருவது என்றால் உடனே திட்டத்தை நிறுத்த வேண்டும்.
கடந்த சில நாட்களாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம் அதிகமாவதால் குளிர் அதிகரிக்கும் எனவும் இதனால் உடல் வலி, காய்ச்சல், சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும் எனவும் தகவல்கள் பரவுகின்றன. இது முற்றிலும் பொய் என இந்தியாவின் அறிவியல் பலகை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் அவர் கூறிய போது,
ஒவ்வொரு வருடமும் பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகையில் ஒரு கட்டத்தில் சூரியனுக்கு மிக அருகிலும், மற்றொரு காலகட்டத்தில் சூரியனிலிருந்து தூரமாகவும் செல்லும். சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் அதனுடைய வட்டப்பாதையில் எப்போது சூரியனிடமிருந்து தூரமாக இருக்கிறதோ அந்நிகழ்வுக்குப் பெயர் அப்ஹீலியன். எந்த நேரத்தில் மிக அருகில் இருக்கிறதோ அதற்குப் பெயர் பெரிஹீலியன். கிரேக்க மொழியில் ‘அபோ’ என்றால் தூரம். ‘பெரி’ என்றால் அருகாமை. அதே போல் பூமி அதனுடைய சுற்றுப்பாதையில் சூரியனிடமிருந்து மிக அதிகமான தூரத்தில் இருக்கும்போது அதை அப்ஹீலியன் என அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.
பொதுவாக இந்த அப்ஹீலியன் நிகழ்வு ஜூலை மாதத்தில் நடக்கும். இந்த காலகட்டத்தில் சூரியனிடமிருந்து பூமி கிட்டத்தட்ட 152மில்லியன் (15.2 கோடி) கிமீ தூரத்தில் இருக்கும். அதே போல் பூமி சூரியனுக்கு மிக அருகாமையில் அதாவது 147மில்லியன்(14.7 கோடி) கிமீ தூரத்தில் இருக்கும்போது அதற்குப் பெயர் பெரிஹீலியன். இது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிகழும். பூமியின் சுற்றுப்பாதை வட்டமாக இல்லாமல் கோழி முட்டைப் போல் நீள்வட்ட வடிவில் இருப்பதனால் இது ஏற்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் பூமியின் தட்ப வெட்ப நிலையில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
அப்ஹீலியனின் போது சூரியன் பூமியிலிருந்து தூரமாகச் செல்வதால் குளிர் அதிகமாகும் என யாரோ சிந்தித்து, அதனால் காய்ச்சல், குளிர் ஏற்படும் என அவர்களே யூகித்து போலிச் செய்தியை வாட்ஸ் ஆப் மூலமாகப் பரப்பி வருகிறார்கள். அதுவும் அப்ஹீலியனை ‘அலிபென்’ என்ற தவறான பெயரில் மெசெஜ்கள் ஃபார்வர்ட் செய்யப்படுகின்றன இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். உண்மையான அறிவியலைத்தான் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டுமேத் தவிர, இது போன்ற போலிச் செய்திகளை பார்வார்ட் செய்வது தவறு எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் புதிய வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியம், முன்வைத்துள்ள யோசனைகளை கருத்தில் கொண்டு இதனைத் தயாரிப்பதாக அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹன்னா சிங்கர் – ஹம்டியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது அமைச்சர் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக, குறிப்பாக எரிபொருள், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் வதிவிட இணைப்பாளருக்கு விளக்கமளித்தார்.
இதன்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களின் மனிதாபிமான உதவியின் தற்போதைய நிலை குறித்து வதிவிட ஒருங்கிணைப்பாளர் விளக்கினார். ஐக்கிய நாடுகள் சபையால், இலங்கைக்கு வழங்கப்படும் உடனடி உதவிகளில் பெரும்போகத்துக்கான யூரியா, மருந்துப் பொருட்கள், விதைகள் மற்றும் பாடசாலைகளுக்கு ஊட்டமளிக்கும் வேலைத்திட்டம் என்பனவும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
………………….
இதே நேரம் சர்வதேசநாணயநிதியத்தின் கடன் ஒரு மாயவலை எனவும் கிரேக்கம் சூறையாடப்பட்டது போலவே இலங்கையும் மீள முடியா கடன்வலைக்குள் சிக்கும் அபாயம் IMF நிபந்தனைகளால் உண்டாகலாம் என பல தரப்புக்களும் அரசை எசசரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வில் “அனுர குமார திசாநாயக்கவின் வேலை திட்டம் வெற்றி அளிக்கும் என்றால் அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணங்கினால் பிரதமர் பதவியை அனுர குமாரவிடம் ஒப்படைக்க தயார்” என்று இன்று நாடாளுமன்ற அமர்வில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் பதவியை ஏற்க தாம் தயாராகவிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேசத்திற்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். தற்போதைய அரசாங்கம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கு மத்தியிலும் நம்பிக்கை இல்லை. எனவே, தற்போது நம்பிக்கை மிகுந்த நிலையானதொரு ஆட்சிக்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெடுக்க எம்மால் முடியும் எனவும் தெரிவித்தார்.
இதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினா
யாழ்ப்பாணம் வடமராட்சி காட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை இன்று அறிமுகம் செய்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் மோட்டார் பொருத்தியும், மீள் சுழற்சி பொருட்களை பயன்படுத்தியும் அதனை கண்டு பிடித்துள்ளார்.
இன்றைய தினம் குறித்த கலப்பு துவிச்சக்கர வண்டி அறிமுக விழா இளம் புத்தாக்குநர் கழக தலைவர் இராஜ அரவிந்தன் தலைமையில் காட்லிக் கல்லூரி ஆய்வுகூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இன்றைய தினம் குறித்த கலப்பு துவிச்சக்கர வண்டி அறிமுக விழா இளம் புத்தாக்குநர் கழக தலைவர் இராஜ அரவிந்தன் தலைமையில் காட்லிக் கல்லூரி ஆய்வுகூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பாடசாலை அதிபர் தம்பையா கலைச்செல்வன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்டுபிடிப்பை அறிமுகம் செய்து வைத்தார்.
தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறான கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது.
குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள 5 வடக்கு பிராந்தியங்கள் வறட்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வறட்சியால் இத்தாலியின் 30 விழுக்காட்டுக்கும் கூடுதலான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் விவசாயச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மேசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள லோம்பார்டி, எமிலியா-ரோமக்னா, பிரியூலி வெனிசியா கியுலியா, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய 5 வடக்கு பிராந்தியங்களில் இத்தாலி அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவசர நிலை தற்போதைய சூழ்நிலையை அசாதாரண வழிமுறைகள் மற்றும் அதிகாரங்களுடன் நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைமை சீரடையாத பட்சத்தில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.