ஐ.பி.எல். கிரிக்கெட் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிப்பு

images-ipl.jpgதென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆட்டத்தின் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் 2 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகின்றன. 37 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

வழக்கமாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் 3 மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் இந்த முறை ஒவ்வொரு ஐ.பி.எல். ஆட்டமும் 31/4 மணிநேரம் நடைபெறும். கூடுதலாக 15 நிமிடங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஒவ்வொரு இன்னிங்சின் போதும் 10 ஓவர்கள் வீசப்பட்டதும், 71/2 நிமிடங்கள் இடைவெளி விடப்படும். இந்த வகையில் 15 நிமிடங்கள் அதிகமாக கிடைக்கும். முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துக்காக நேரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

வணிக நோக்கமே இந்த புதிய இடைவேளை திட்டத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், ஆப்பிரிக்காவில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் இந்த இடைவெளியில் காண்பிக்கப்பட உள்ளன. இதன் மூலமும் ஐ.பி.எல்.க்கு வருவாய் கிட்டுகிறது. மொத்தம் 118 இரண்டரை நிமிட விளம்பர இடைவேளை விற்பனைக்கு தயாராக உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பும் உரிமையை சோனி மற்றும் உலக ஸ்போர்ட்ஸ் குரூப் (டபிள்ழூ.எஸ்.ஜி.) பெற்றுள்ளன. அவை, 9 ஆண்டுகால ஒளிபரப்புக்கு ரூ.8200 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவில் சோனி செட்மேக்ஸ் சேனல் ஐ.பி.எல். ஆட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஒவ்வொரு ஆட்டத்துக்கும் 33 நிமிடங்கள் விளம்பரம் ஒளிபரப்ப நேரம் தர வேண்டும் என்று ஒளிரப்பு தாரர்கள் கேட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு ஓவர்கள் முடிவிலும் 40 வினாடிகளும், விக்கெட் விழுந்தால் அந்த இடைவெளியில் சுமார் ஒரு நிமிடமும் விளம்பரத்தை ஒளிபரப்ப அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், ஓர் இன்னிங்சில் மொத்தமே 2 அல்லது 3 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தாலோ அல்லது 15 ஓவர்களுக்குள்ளேயே போட்டிகள் முடிவடைந்தாலோ அது ஒளிபரப்புதாரர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றும் நிகழ்ச்சி தயாரிப்பு அதிகாரி தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *