ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.4.8 கோடி பரிசு

images-ipl.jpg2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியது. மே 24 ந்தேதி வரை இந்தப்போட்டி அங்குள்ள 8 நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 2 வது இடம் பிடித்த சென்னை சூப்பர் சிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
 
இந்தப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.4.8 கோடி பரிசாக வழங்கப்படும். 2 வது இடத்துக்கு ரூ.2.4 கோடி கிடைக்கும்.  இதில் விளையாடும் 120 வீரர்கள் ரூ.1430 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
 
இதில் டோனி அதிகபட்சமாக 52 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தெண்டுல்கர், கங்குலி, யுவராஜ்சிங் உள்ளனர். வெளி நாட்டு வீரர்களில் அதிகமான தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர் ஜெயசூர்யா ஆவார்.  ஐ.பி.எல். போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1.8 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *