மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் யானைகளின் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதையும் தோட்டங்கள், பயிர்கள் அழிக்கப்படுவதையும் வன்மையாகக் கண்டித்து வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் மீளக் குடியேறிய மக்கள் ஆர்ப்பாட்டம மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் யானைகள் தாக்கி 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 219 குடிமனைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தெரிவித்தார். அரசாங்கமும் அதிகாரிகளும் யானைகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லையெனத் தமிழ்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.