வன்னியிலிருந்து வந்த 4,325 பேர் தென்மராட்சியில் தங்கவைப்பு

Wanni_War_Welfare_Campவன்னி புதுமாத்தளன் பகுதியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கடந்த 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மட்டும் 4 ஆயிரத்து 325 பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இவர்களில் 2 ஆயிரத்து 70 பேர் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயத்திலும் 2 ஆயிரத்து 259 பேர் சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

யாழ். மாவட்ட அரச அதிபரின் மேற் பார்வையில் தென்மராட்சி பிரதேச செயலகம் இவர்களுக்கான சமைத்த உணவை வழங்கி வருகிறது. சாவகச்சேரி நகர சபையின் நீர் வழங்கல் பிரிவு குடிநீர் வசதிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வன்னியில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமான நாளிலிருந்து இதுவரை இடம்பெயர்ந்து வந்தவர்களில் தென்மராட்சியில் மட்டும் 9 ஆயிரத்து 516 பேர் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தென்மராட்சியிலுள்ள 5 நலன்புரி நிலையங்களிலும் 2 பாடசாலைகளிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *