விடுதலைப் புலிகள் வசம் இருந்து இலங்கை அரச படையினர் கடைசியாக கைப்பற்றியிருந்த புதுமாத்தளன் பகுதிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை முதல் முறையாக இலங்கை இராணுவம் அழைத்துச் சென்றிருந்தது.
கொழும்பிலிருந்து புதுமாத்தளன் சென்றிருந்த ஊடகவியலாளர் குழுவில் இடம்பெற்றிருந்த பிபிசி செய்தியாளர், சற்று தொலைவில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியுள்ள பிரதேசத்திலிருந்து வெடிச் சத்தத்தைக் கேட்கக்கூடியதாகவும் புகை கிளம்புவதை பார்க்கக்கூடியதாகவும் இருந்தது என்று குறிப்பிடுகிறார்.
மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் தொடர்ந்து வெளியேறிவருவதை காணக்கூடியதாக இருக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.