புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தோருக்கு விநியோகிப்பதற்காக தெற்கில் பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் வவுனியா செட்டிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு தினமும் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இலங்கை விமானப் படையின் சரக்கு விமானங்கள் பல இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வவுனியாவிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலருணவுப் பொருட்கள், மருந்து வகைகள், குடிநீர், மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இவ்வாறு விமானம் மூலம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.