இலங்கையின் வடக்கே பல்வேறு இடங்களில் உள்ள் முகாம்களிலிருந்து 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வெளியே அனுப்பபடுவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக இலங்கை அரசின் மனித உரிமைகள்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தமிழோசையிடம் கூறும் போது, இந்த திட்டமானது ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்றும், ஏற்கனவே சுமார் இரண்டாயிரம் முதியவர்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஏற்கனவே உள்ள முதியோர் இல்லங்களுக்கும் மேலாக புதிய இடங்களுக்கும் தாங்கள் ஏற்பாடு செய்து இருப்பதாகவும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இந்துக் கோயில்களிலும் இவர்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.