ஊடகங்கள் மீது தணிக்கை விதிக்கும் என்.பி.பி அரசாங்கம்..?
ஊடகங்களுக்கு தணிக்கை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஊடக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
ஊடகங்களும் அரசாங்கமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். மக்களுக்காக ஊடகங்களை முறையாக நிர்வகிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றுவதாகவும் ஊடகங்கள் மீது தணிக்கை விதிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் வெகுஜன ஊடக அமைச்சு பொறுப்பற்ற, செயலிழந்த இடமாக மாற்றப்பட்டுள்ளதால் வெகுஜன ஊடக அமைச்சை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
ஊடகங்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்படக்கூடிய சூழலை உருவாக்கி ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.