யுத்தநிறுத்த அழைப்போ, விசேட தூதுவரை அனுப்பும் சிந்தனையோ பான் கீ மூனுக்கு இப்போதும் இல்லை – இன்னர்சிற்றி பிரஸ்

UN_Logoஐ.நா:  இலங்கையில் ஆயிரக்ககணக்கில் பலியான பொது மக்களை ஐ.நா. எண்ணிக்கொண்டிருக்கும் அதேசமயம், செயலாளர் நாயகம் பான் கீ மூன் இப்போதும் யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்கவோ அல்லது மோதல் தொடர்பாக விசேட தூதுவர் ஒருவரை அனுப்புவதற்கான ஆயத்தத்தில் ஈடுபடவோ இல்லை என்று ஐ.நா. விலுள்ள இன்னர்சிற்றி பிரஸ் விமர்சித்திருக்கிறது.

உதாரணமாக மோதல் சூன்யப் பகுதியென சொல்லப்படும் இடத்தில் உள்ள குண்டு வீழ்ந்த குழிகள் தொடர்பான செய்மதி புகைப்படங்களையும் இழப்புகளின் எண்ணிக்கையையும் வெளியிட ஐ.நா. ஏன் அனுமதி வழங்காமல் வைத்திருக்கின்றது என்று இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு மூன்று நிமிடங்கள் அளித்த பதிலில்; “நிலுவையாக இருக்கும் சகல விடயங்களையும் உள்ளடக்கிய நீண்ட தொலைபேசி உரையாடல் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இடம்பெற்றது என்று பான் கி மூன் கூறியிருப்பதாக 5 மே 2009 திகதியிடப்பட்ட இன்னர் சிற்றி பிரஸின் செய்தி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்கள் எவையும் யுத்த நிறுத்த அழைப்பை உள்ளடக்கியிருக்கவில்லை. “மனிதாபிமான இடைநிறுத்தம்’ என்ற கோரிக்கையுடன் தனது வேண்டுகோளை பான் கி மூன் மட்டுப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இன்னர் சிற்றி பிரஸுக்கு கசிந்து செல்லும் வரை இழப்புகள் தொகையை வெளியிடாமல் ஐ.நா. வைத்திருந்தது ஏன் என்பது பற்றியோ அல்லது காஸா மோதலின் போது பகிரங்கமாக வெளியிடப்பட்டது போன்ற செய்மதிப் படங்களை யூனோசற்றானது தற்போதும் பகிரங்கமாக வெளியிட மறுப்பது ஏன் என்பது தொடர்பாகவோ, பான் கீ மூன் செவ்வாய்க்கிழமை எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இன்னர் சிற்றி பிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

அதேவேளை, கடந்த ஏப்ரலின் இறுதிப் பகுதியில், கடந்த மாத ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தலைவரான மெக்சிக்கோ தூதுவர் கிளாடி நெல்லர், இலங்கைக்கு அர்ப்பணிப்புடன் கூடிய விசேட தூதுவர் ஒருவரை அனுப்புமாறு பான் கி மூனை கேட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன. மூடிய கதவுக்குள்ளான கூட்டத்தின் போது அவர் இதனை கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது அது தொடர்பாக பான் கி மூன் சிந்திக்கின்றாரா என்று அவரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது.

“அதனை பின்னர் நாம் கலந்தாராய முடியும்’ என்று பான் கி மூன் பதிலளித்துள்ளார்.

பிறகு என்று அவர் கூறுவதன் அர்த்தமானது மோதல் வலயத்தில் இறுதி “தீர்வு’ என்று சிலர் கூறுவதன் பின்னரா அல்லது ஒரு நாளின் பின்னரா அல்லது ஒரு வாரத்தின் பின்னரா? என்பது குறித்து தெளிவில்லாமல் இருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக அல்லது குறிப்பிட்ட ஒரு தடவையாக தனது தலைமை அதிகாரி விஜே நம்பியாரை தூதுவராக பான் கி மூன் அனுப்பியிருந்தார்.

இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பான் கி மூன் அளித்த பதிலை ஐ.நா. அதற்கு வழங்கியிருந்தது. அவை வருமாறு;

இன்னர் சிற்றி பிரஸ்: செயலாளர் நாயகம் அவர்களே! இலங்கை ஜனாதிபதிக்கு நாங்கள் விடுத்த அழைப்புகளை நான் மெச்சுகிறேன். ஐ.நா.வின் நோக்கம் மற்றும் அங்குள்ள பொது மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக சில கேள்விகள் எழுந்துள்ளன. மக்கள் என்ன கூறுகின்றார்கள் என்றால், உதாரணமாக, ஐ.நா.வானது பொது மக்கள் இழப்புகள் தொடர்பான புள்ளி விபரத்தை சேகரித்தது. ஆனால், வெளியிடப்படவில்லை. அண்மையில் யூனோசற் அமைப்பின் செய்மதிமூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் காஸா, சூடான் போன்று அல்லாமல் அவை வெளியிடப்படவில்லை.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் ஐ.நா. ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அங்கு (ஐ.நா.வில்) கேள்வி எழுப்பப்படும்வரை எதுவும் கூறப்படவில்லை. நாட்டின் வட பகுதியிலிருந்து அரச சார்பற்ற தொண்டர் அமைப்புகள் வெளியேற்றப்பட்ட போதும் எதுவும் கூறப்படவில்லை. ஏன் யுத்த நிறுத்தத்துக்கு நீங்கள் அழைப்பு விடுக்கவில்லை என்றும் மனிதாபிமான இடைநிறுத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டீர்கள் ஏன் என்பதும் குறித்து மக்கள் ஆச்சரியமடைந்தது ஏன் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது.

நம்பியார் சென்றார், மனிதாபிமான மதிப்பீட்டுக் குழுவை அனுமதிப்பதற்கான உறுதிப்பாடு இருப்பதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். நீண்ட பட்டியலை முன்வைக்கிறேன் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. இந்த மோதல் ஏன் வேறுபடுத்தப்படுகின்றது?

உண்மையில நீங்கள் யுத்த நிறுத்த அழைப்பை விடுக்கிறீர்களா? ஐ.நா. பாதுகாப்பு சபை இதனை விவாதிக்க முடியாவிடில் நீங்கள் சரத்து 99 ஐ பயன்படுத்தக் கூடுமா? அங்குள்ள பொது மக்கள் தொடர்பான உங்கள் கருத்து என்ன? வானத்திலிருந்து குண்டு வீச்சை எதிர்கொண்டுள்ள மக்கள் தொடர்பாக உங்கள் கருத்து என்ன? மனிதாபிமான அடிப்படையில் நோக்கினால், நிச்சயமாக காஸா மற்றும் டார்பரின் நிலைவரம் தொடர்பாக தாங்கள் வேறுபட்ட முறையில் செயற்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது.

பான் கீ மூன்: இன்று காலை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடினேன். நிலுவையாக உள்ள சகல விடயங்களும் பேசப்பட்டன. சர்வதேச சமூகத்தின் முன்னுரிமைப் பட்டியலில் இலங்கை விவகாரம் உள்ளது. ஜனாதிபதியுடனான உரையாடலில் தற்போது மோதல் வலயத்தில் சிக்கியுள்ள பொது மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பேசினோம்.ஐ.நா. குழு , ஐ.சி.ஆர்.சி.யூடாக மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து முயற்சிக்கிறோம். தற்போது அவர்களுக்கு வழங்கப்படுவது போதாது.

தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐ.நா.ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பு: ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பதில் தலைப்புச் செய்தியான “நிலைமையை நேரில் அறிய வருகைதருமாறு ஐ.நா. செயலாளருக்கு ஜனாதிபதி அழைப்பு’ என்ற செய்தியில் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

இன்னர்சிற்றி பிரஸ்: தூதுவர் ஒருவரை அனுப்புவது பற்றி சிந்தித்துள்ளீர்களா?

பான் கீ மூன்: அதனை பிறகு ஆராய்வோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *