இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர்குழு அவசரப்பட்டுவிட்டது : ரஜீவ விஜேசிங்க

rajee-vija.jpg“இலங்கை விவகாரம் குறித்த விடயத்தில் ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர்கள் குழு அவசரப்பட்டுவிட்டது என்று கருதுகின்றோம். இலங்கைக்கு சர்வதேச விசாரணை குழுவை அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை சுயாதீன நிபுணர்கள் குழு முன்வைத்திருந்தாலும் அதனை பாதுகாப்பு சபை அங்கீகரிக்கவேண்டியது அவசியமாகும்” என்று அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளரும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் மனிதாபிமான நிலவரம் குறித்து ஆராய்வதற்கு சர்வதேச விசாரணைக் குழுவை அனுப்பவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணர்கள் குழு ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *