இலங்கையின் வடக்கே மருத்துவமனை மீது தாக்குதல்:45 பேர் பலி

vanni0002.jpgஇலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் மீது இலங்கையின் அரச படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளும் அந்த மருத்துவமனை தகவல்களும் தெரிவிக்கின்றன  என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிவரும் தற்காலிக மருத்துவமனை மீது இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணி வாக்கில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் இடம் பெற்ற தாக்குதலில் காயமடைந்து தங்கியிருந்தவர்களில் சிலரும் பலியாகியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இலங்கை அரசின் அதிகார்கள் கூறியுள்ளனர். இலங்கை இராணுவம் அப்பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறது என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • kamal
    kamal

    12.05.2009
    மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

    இன்று காலை 7.45 மணியளவில் முள்ளிவாய்கால் அரச வைத்தியசாலையில் எறிகனை விழுந்து வெடித்ததின் காரணமாக 26 நோயாளிகள் உடன் ஸ்தலத்திலும் சில நிமிடங்களின் பின் மேலும் 10 பேர் இறந்ததோடு 100 பேருக்கும் மேல் படுகாயமுற்றுள்ளார்கள் என்பதை மிக்க வருத்தத்துடன் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். பீதியுடன் வாழும் மக்களை நோக்கி ஏவப்படும் எறிகனை தாக்குதலை தாங்கள் தலையிட்டு உடன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேறு சம்பவங்களிலும் படுகாயமுற்ற ஏனையோருடன் 1000 ற்கும் மேற்பட்ட மக்கள் 2 நாட்களுக்கு மேலாக இதுவரை எதுவித சிகிச்சையும் பெறாமல் இருப்பதனால் உடனடியாக வைத்திய குழுவினை தயவு செய்து அனுப்பிவைக்கவும். இச் சம்பவம் விடுதலைப் புலிகளினால் தான் ஏற்பட்டிருந்தாலும் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

    நன்றி
    வீ. ஆனந்தசங்கரி,
    தலைவர்,
    தமிழர் விடுதலைக் கூட்டணி

    Reply