கொழும்பில் இன்று 24 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையான 24 மணி நேர நீர் வெட்டு அமுல் செய்யப்படவிருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமை ப்புச் சபை அறிவித்துள்ளது.

மாளிகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான நீர் விநியோக குழாயிலும் மற்றும் ஹெவ்லொக் டவுனிலும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதனாலேயே இந்த நீர் வெட்டு அமுல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கிருலபனை, பூர்வாராம மாவத்த, ஹெவ்லொக் டவுண், திம்பிரிகஸ்யாய, பாம்மன்கட, நாரஹேன்பிட்டி, பொரல்ல, சஹஸ்புர, மருதானை, மாளிகாவத்தை, கருவாத்தோட்டம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், வித்தியாலய மாவத்தை, சென்றல் வீதி, ஆட்டுப்பட்டித்தெரு, ஜிந்துப்பிட்டி வீதி, ஆண்டிவால் வீதி, விவேகானந்தா மேடு, வாழைத்தோட்டம், அல்ஸ்ட்ரோஸ் வீதி, ஸ்டேஸ் வீதி, லெயாட்ஸ் ப்ரோட்வே, புளுமெண்டல் வீதி, மஹவத்த ஆகிய பிரதான வீதிகளிலும் அவற்றுடன் இணைந்த அனைத்து கிளை வீதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவிருப்பதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொலன்னாவ பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அரச தொழிற்சாலைகள், ஸ்ரன்வி மின் உற்பத்தி நிலையம், வெல்லம்பிட்டிய, சேதவத்த, வென்னவத்த, கெட்டுவில, மற்றும் இத்தமபவ்வ பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல் செய்யப் படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *