எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே – Black Saturday : இந்தியா தேர்தல் முடிவு : த ஜெயபாலன்

Pirabakaran_VIndian_Election1.
எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே இன்று என்றால் மிகையல்ல. இந்தியத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்பி ஒரு துண்டுநிலத்தை தேர்தல் வரை தக்க வைத்துக் கொண்ட எல்ரிரிஈ க்கும் அதன் ஆதரவு சக்திகளுக்கும் பேரிடியாகி உள்ளது தமிழகத் தேர்தல் முடிவு. மேலும் கடந்த கால்நூற்றாண்டாக தமது கட்டுப்பாட்டில் ஏதாவது ஒரு பிரதேசத்தை வைத்திருந்த எல்ரிரிஈ இன்று தனது இறுதித் துண்டு நிலத்தையும் இழந்துகொண்டு உள்ளது.

எல்ரிரிஈ அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபனதும் சர்வதேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாபனதும் கடைசி வேண்டுகோள்களும் பலனளிக்காத நிலையில் இந்திய – தமிழக தேர்தல் முடிவுகளும் எல்ரிரிஈ இன் எதிர்பார்ப்பிற்கு மாறாக வந்துகொண்டு உள்ளது. மீண்டும் மத்தியில் காங்கிரசும் தமிழகத்திலும் திமுகவும் ஆட்சியமைக்கலாம் என்றே இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ‘மம்மியின் வரவுக்காக காத்திருந்த தம்பி’ இத்தேர்தலில் ‘மம்மி’யைத் தொலைத்துவிட்hர். இதனாலும் இலங்கை இராணுவம் ஈட்டியுள்ள இராணுவ வெற்றியினாலும் ‘தம்பி’யின் நிலை அவருடைய அரசியல் எதிர்காலம் மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உள்ளது.

திரையுலகத்தையும் வைக்கோ போன்ற சில அரசியல் தலைவர்களையும் நம்பி பணம் கட்டிய எல்ரிரிஈ தமிழ் நாட்டு மக்களிடம் நெற்றியடி வாங்கி உள்ளனர். தமிழ் நாட்டு மக்களுடைய தேர்தலை தமிழீழத்திற்கான வாக்கெடுப்பாக பிச்சாரம் பண்ணி இன்று தாமே தமக்கு மண்ணள்ளிப் போட்டு உள்ளனர். மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை கோ பதினேழாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளால் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் துடைத்தெறியப்படும் என்று முழங்கிய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் வைக்கோ தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பிரச்சினையை மட்டும் வைத்துக் கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்ய முற்பட்டவர்களுக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ள அரசியல் பாடமாகவே இது அமைந்து உள்ளது. அயல்நாட்டு அரசியலை வைத்துக் கொண்ட இன உணர்வுகளைத் தூண்டிய அரசியல் தலைவர்களுக்கு தமிழக மக்கள் கன்னத்தில் பளீர் என்று அறைந்துள்ளனர்.

இத்தேர்தல் முடிவுகளை வைத்தக் கொண்டு தமிழக மக்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டுவிட்டார்கள் என்ற பிரச்சாரத்தை எல்ரிரிஈ ம் அதன் ஊடகங்களும் கட்டவிழ்த்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழக மக்கள் இலங்கைப் பிரச்சினைக்கு வாக்களிக்வில்லை என்பதே உண்மை. அவர்களுக்கு உள்ள அரசியல் தெரிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. திமுக – அதிமுக என்ற எல்லைக்கு அப்பால் அவர்களுக்கு பெரிதாக வேறு தெரிவுகள் இல்லை. அதனால் தவிர்க்க முடியாமல் இவ்விரு கட்சிகளில் ஒன்றே ஆட்சியமைக்கின்றன. இதற்குள் குறுக்கு வழியில் இலங்கையில் நடைபெறும் மனித அவலங்களைக் கொண்டு தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப முற்பட்டவர்களுக்கு இத்தேர்தல் மிகப்பெரும் ஏமாற்றமே.

2005ல் ஆட்சிக்கு வந்த மகிந்த அரசு புலிகளை அழிப்பதற்கான புரஜக்ற் பீக்கன் திட்டத்தை வடிவமைத்த போது தமிழகத் தேர்தல் இருப்பதை அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. புரஜக்ற் பீக்கனின் இரண்டாவது கட்டம் ஏப்ரல் 30 முடிவடையும் என்று திட்டமிடப்பட்ட போது அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா, இது தனது தேர்தலைப் பாதிக்காது என்பதை சரியாகவே கணித்து உள்ளது என்றே சொல்லலாம். தமிழின உணர்வாளர்கள் வெத்து வேட்டுக்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 30 முடிவுக்கு வர வேண்டிய இலங்கை அரசின் புரஜக்ற் பீக்கன் 16 நாட்களே பிந்தியுள்ளது. இராணுவ ரீதியில் திட்டம் வகுத்து குறித்த கால எல்லைக்குள் அதனை நிறைவேற்றும் அளவிற்கு இலங்கை இராணுவம் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதையும், அதற்கு சர்வதேச ஆதரவு இருப்பதையும் எல்ரிரிஈ கணிக்கத் தவறிவிட்டுள்ளது. புரஜக்ற் பீக்கன் திட்டத்தை இரு ஆண்டுகளுக்கு முன்னரேயே எல்ரிரிஈ அறிந்திருந்த போதும், அவர்களிடம் இருந்த அதீத நம்பிக்கையும் தமிழக தமிழ் இன உணர்வாளர்கள் மற்றும் புலம்பெயர் புலி ஆதரவு சக்திகளில் இருந்த நம்பிக்கையும் அவர்களை ஒரு மாயைக்குள் தள்ளி இருந்ததாகவே கருத முடிகிறது. ஆயுதங்களை வாங்குவது போல் சில தலைவர்களையும் மக்களையும் நினைத்தவுடன் வாங்கி விடலாம் என்ற எண்ணத்திற்கு தமிழகத் தேர்தல் சிறந்த பாடமாக அமைய உள்ளது.

Wanni_War2.
நேற்று (15 மே 2009) முதல் இன்று (16 மே 2009) மதியம் வரை 20000க்கும் அதிகமான மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர். இவர்களில் புலிகளின் கடற் தளபதி சூசையின் மனைவி பிள்ளைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 11 பேரும் அடங்குகின்றனர். எல்ரிரிஈ சார்பு ஊடகங்கள் வன்னியில் கொல்லப்பட்ட மக்களின் அவலங்கைளக் கொண்டு தங்கள் பிரச்சாரங்களை முடக்கிவிட, வெளியேறும் மக்களின் நேரடியான காட்சிகள் இலங்கைத் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒலி பரப்பப்பட்டுக் கொண்டு உள்ளது. இவ்விரண்டு பிரச்சாரக் காட்சிகளும் அம்மக்கள் எவ்வளவு கொடுமையான சூழலுக்குள் வாழ நிர்ப்பத்திங்கப்பட்டு இருந்தார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றனன.

இன்று மதியம் வரை 12000 பேர்வரை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ரிரிஈ தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் 165000 பேர் உள்ளனர் என்று குறிப்பிட்ட போதும் 50,000 வரை அங்கு இருந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டு இருந்தது. தற்போது 20000 மக்கள் வெளியேறிய போதும் யுத்தப் பகுதியில் இன்னமும் பல்லாயிரக் கணக்கானோர் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

50000 இராணுவம் ஒரு சில கிலோமீற்றரைச் சுத்தி உள்ள நிலையில் எல்ரிரிஈக்கு தொடர்பில் இருந்த சிறு கடற்பரப்பும் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தற்போது 500 சதுர மீற்றர் பகுதிக்கு உள்ளேயே எல்ரிரிஈ குறுக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலும் தாக்குதல்கள் மந்தமடைந்து உள்ளதால் பாரிய உயிரிழப்புகள் இன்று ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜனவரி முதலான மூன்று மாத காலப்பகுதியில் 8000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் அதனைப் போன்று பல மடங்கானோர் காயப்பட்டு உள்ளதாகவும் யுஎன் மதிப்பிட்டு உள்ளது.

யுத்தப் பகுதியில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு உடனடியான சமைத்த உணவுகளை வழங்குவதாக உலக உணவுத் திட்டம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது. பல நாட்கள் வாரத்திற்குப் பின் அவர்களுக்குக் கிடைக்கும் முதலாவது சமைத்த உணவு என உலக உணவுத் திட்டம் தெரிவிக்கிறது.

SL_Army_in_Final_Phase3.
தமிழ் மக்களுக்கு தங்கள் கெட்ட கனவிலும் தோண்றியிராத இந்தக் கொடுமையை இலங்கை இராணுவமும் எல்ரிரியும் சேர்ந்தே இழைத்துள்ளனர். வெளியேறி வருபவர்களின் வாக்குமூலங்கள் தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களின் கண்களையும் குளமாக்கி உள்ளது. புலத்தில் உள்ளவர்கள் தங்கள் மண்ணை விட்டு வெளியேறிய இவர்களை துரோகிகளாக முத்திரை குத்த முற்பட தெற்கில் உள்ள சிங்கள முஸ்லீம் சமூகங்கள் தங்களாலான உடனடி உதவிகளுடன் ஆபத்தில் கைகொடுக்க வந்துள்ளனர்.

தங்களது போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவிட்டதாக புலகாங்கிதம் அடையும் புலத்தில் உள்ள போராட்டக்காரர்கள் அந்தக் கவனம் அந்தப் போராட்டத்தால் அல்ல அது அந்த மக்கள் தங்கள் உயிரைவிட்டு பெற்ற கவனயீர்ப்பு என்பதை மறந்துவிடுகின்றனர். எல்ரிரிஈ யும் அதன் ஆதரவு சக்திகளும் மக்களின் உயிரைப் பிழிந்து தான் போராடி முடியும் என்பதை ஒரு போராட்ட தந்திரமாகவே மேற்கொண்டிருந்தனர். புலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கே சமைத்த உணவை வருவித்து வழங்கியவர்கள், வாரங்களாக பட்டினிச்சாவில் இருந்து வரும் மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பதிலும் பார்க்க, அம்மக்களை இழிவுபடுத்துகின்ற முறையிலேயே செயற்பட்டனர். யுத்தத்தில் சிக்குண்ட மக்களின் நலனை எவ்விதத்திலும் பிரதிபலிக்காத புலத்து போராட்டங்கள் அர்த்தமற்றுப் போனதில் – பயனற்றுப் போனதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

இலங்கை முகாம்களுக்கு மே 5ம் 6ம் திகதிகளில் சென்று திரும்பிய எல்ரிரிஈ க்கு அனுதாபமான லிபிரல் டெமொகிரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிபிசி ரெடியோ 4 ற்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி:

BBC Radio 4: A Group of MPs just returns from fact finding mission to Sri Lanka. We are joining one of them, Malcolm Bruce, the Liberal Democrat Chairs of International Affairs Select Committee. Good morning!

Malcolm Bruce, MP: Good morning!

BBC: What did you find?

Malcolm Bruce, MP: Horror stories in Britain about conditions in Sri Lanka camps housing hundreds of thousands of Tamil refugees are wrong. There may be shortages, but refugees I spoke to were happy to have escaped the fighting in the North.

BBC: You are just using the word, terrorists. It is a very loaded one. We are talking about the Tamil Tiger rebels here, Aren’t you?

Malcolm Bruce, MP: Well, I have to say these Tamil Tigers have assassinated many many Tamils including in and out of governments and the opposition parties and we had very credible evidence many of the people we met in camps to say they were threatened and shot at by their own side and told them if they try to leave the conflict zone their lives be at risk and in those circumstances, I think there is a clear indication that this is a divided community and the unless you end terrorism you can’t actually build the united Sri Lanka.

http://www.nowpublic.com/world/tamil-tigers-are-terrorists-malcolm-bruce-mp-2

நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் அர்த்தமற்றுப் போவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. வன்னி முகாம்களில் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் உண்டு. இலங்கை அரச படைகள் பல்வேறு மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளனர். பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிரிழப்புகளுக்கு இலங்கை அரசபடைகள் காரணமாக இருந்துள்ளன. அதேசமயம் இவை அனைத்திற்கும் எல்ரிரியும் காரணமாக இருந்த உள்ளது. ஆனால் புலத்தப் போராட்டங்கள் உண்மையான தகவல்களின் அடிப்படையில் அல்லாமல் அரசியல் சார்புநிலையுடன் செயற்பட்டதால் அவை வெறும் சலசலப்பையே ஏற்படுத்தின.

வன்னி மக்கள் எதிர்கொண்ட அவலத்திற்கு இலங்கை அரசும் எல்ரிரியும் சம பொறுப்புடையவர்கள். எல்ரிரிஈ பயங்கரவாதிகள் என்றும் இலங்கை அரசு சட்டரீதியானதும் என்று பார்த்தால் இலங்கை அரசு இந்த அவலத்திற்கு கூடுதல் பொறுப்பை ஏற்கவேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பக்கத்தில் நின்று பார்த்தால் வன்னி மக்களின் இந்த அவலத்திற்கு எல்ரிரிஈ யே கூடுதலான பொறுப்புடையவர்கள். தங்களை நம்பி வந்த வன்னி மக்களின் முதுகில் எல்ரிரிஈ குத்தியுள்ளது.

இலங்கை அரசு எல்ரிரிஈ இன் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால் மட்டும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ததுவிட முடியாது. இராணுவ ரிதியாக நிலப்பரப்பை வெற்றி கொள்வதும் கட்டுப்படுத்துவதும் ஒப்பீட்டளவில் இலகுவானது. ஆனால் அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் இதயங்களை வெல்வதன் மூலம் மட்டுமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

எவ்வாறாக எல்ரிரிஈ யை விபரித்தாலும் அவர்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்தது இலங்கை அரசின் இனவாதப் போக்கு. இனம் காணப்பட்டு உள்ள அப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்காமல் இலங்கை அரசு இலங்கையில் சமாதானத்தை எதிர்பார்க்க முடியாது. எல்ரிரிஈ அழிக்கப்பட்டால் இலங்கையில் சமாதானம் வந்துவிடும் என்பது அர்த்தமற்ற வாதம். இன்று மக்களுக்குள்ள உடனடிப் பிரச்சினை உயிரைப் பாதுகாப்பது. அதனால் அவர்கள் ஏனைய பிரச்சினைகள் இரண்டாம்தரமாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் ஏனைய பிரச்சினைகள் மீண்டும் முன்னிலைக்கு வருவது தவிர்க்க முடியாதது.

இதுவரை இலங்கை அரசு தனது மனிதத்துவத்திற்கு எதிரான அத்தனை செயற்பாடுகளுக்கும் எல்ரிரிஈ யை முன்னிறுத்தி அவற்றில் இருந்து தப்பிக் கொண்டது. இன்று முழு இலங்கையும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக இலங்கை அரசு பறைசாற்றுவதால் நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு அரசு முழுமையான பொறுப்புடையது. எல்ரிரிஈ அங்கும் இங்குமாக மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை நடத்தக் கூடியதாக இருந்தாலும் அரசு சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டிய கடமைப்பாடு உடையது.

இலங்கை அரசின் புரஜகற் பீக்கனின் மூன்றாவதும் இறுதியானதுமான கட்டம் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை தொடர உள்ளது. எல்ரிரிஈ யைக் களையெடுக்கும் இத்திட்டம் மிகவும் சிரமமானது. இதில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைத்து மக்களை அரசியல் ரிதியாக வென்றெடுக்காத வரை இதில் அரசு வெற்றிபெற முடியாது. அவ்வாறு செய்யாதபட்சத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இன ஒடுக்குமுறைக்கு உள்ளானால் அது தமிழ் மக்களை மீண்டும் எல்ரிரிஈ யை நோக்கித் தள்ளுவதாகவே அமையும். அவ்வாறான ஒடுக்குமுறை தொடருமானால் வன்னி முகாம்கள் எல்ரிரிஈ இன் விளைநிலங்களாக மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்ரிரிஈ உடன் இராணுவ வெற்றியைக் கொண்டுள்ள அரசு எதிர்காலத்தில் மக்களை வென்றெடுக்க வேண்டிய கடுமையான சூழலை எதிர்கொள்ளும். இது தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்தின் இனப்படுகாலையைத் தடுப்பதற்கான ஆலோசகர் பிரான்ஸிஸ் டெங் இன் கருத்து குறிப்பிடத்தக்கது.

”இந்தத் துருவ முரண்பாடு இன மத – அடையாளம் சார்ந்த ஆழமான பிளவைக் கொண்டது. இது வெல்பவர்கள் தோற்பவர்கள் என்பதில் முடிவுக்குவராது. இது இராணுவ வெற்றியுடன் மட்டும் முடிவுக்குவராது. சட்டப்படியான பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வுகாணாமல் நீண்ட காலத்தில் இராணுவ வெற்றிகளை தக்க வைக்க முடியாது.”

ஐநா செயலாளர் நாயகத்தின் இனப்படுகாலையைத் தடுப்பதற்கான ஆலோசகர் பிரான்ஸிஸ் டெங்

”This polarizing conflict is identity–related, with ethnicity and religion as deeply divisive factors. It will not end with winners and losers, and it cannot be ended solely through a military victory that may not be sustainable in the long run unless legitimate grievances are addressed.”

Francis Deng. _ Special Adviser of the Secretary-General on the Prevention of Genocide.

Show More

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இந்திய மக்கள் தெளவிவாகவே இருக்கின்றார்கள் என்பதைத் தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இலங்கைத் தமிழர்களின் பிரைச்சினைகளை வைத்து படம் காட்டியவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டி விட்டார்கள். குறிப்பாக மதிமுக மற்றும் பாமகவிற்கு மக்கள் தெளிவாகவே பாடம் புகட்டியுள்ளார்கள்.

    Reply
  • palli.
    palli.

    பல்லி எதிர்பார்த்த முடிவுதான். அதனால்தான் பல்லி பல பின்னோட்டங்களில் தமிழக தேர்தலில் நாம் தலையிட்டு கருத்து (பக்கசார்பாக) சொல்லி அது தவறாக போனால் அதுவே எமக்கும் எமது இனத்துக்கும் கேடாய் விடும் என சொல்லியுள்ளேன். ஆனால் புலியின் ஆதரவாளர்கள் புலிக்கு ஜெயலலிதா ஆதரவு தருவார் என நம்ப்பி கருனானிதி காங்கிரஸ் கூடனியை மிககேவலமாக அனாகரிகமாக எழுதினார்கள். ஏன் புலம்பெயர் பட்டினி சதிராட்டத்தில் கூட இவர்களுக்கு எதிரான கோசத்துக்கு குறையில்லை. அம்மா வருவா ஆசை முத்தம் தருவா என்பது போல் ஜெயலலிதா ஈழம் வேண்டிதருவார். இந்த 16ம் தேதி மட்டும் தான் தலைக்கு ஏழரைசனி பின்பு தமிழக வரவுடன் குரு உச்சத்தில் நிக்கும் அப்போது மகிந்தா அரசுக்கும் புலியை மிரட்டிய தமிழரையும் ஒரு விரல்(கை) பார்க்கலாம் என ஏப்பம் விட்ட பலர் இன்று ஏதாவது ஒரு ஊடகத்தில் கருனானிதிக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பார்கள்.

    கருனானிதியின் வெற்றி எமக்கு பிரச்சனையல்ல. ஆனால் எமது இனத்துக்கு எதிராக பலரை புலிகள் உருவாக்குவது ஏன் என்னும் பலருக்கு புரியவில்லை. ஒரு சில மாதங்களில் ஜெயலலிதா விபசாரி என முற்பகுதியிலும் கருனானிதி பொறுக்கி என பிற்பகுதியிலும் ஏன் புலிக்காய் பிறப்பெடுத்த திருவை கூட ஏழனமாய் பேச இளயோர் அமைப்பு பின்வாங்காது. எது எப்படியோ ஈழதமிழர் போல் தாமும் இரத்த வெள்ளத்தில்
    வாழ வேண்டாமே என்பதுதான் இன்றய இந்திய தேர்தல் முடிவு.

    Reply
  • மாயா
    மாயா

    தமிழ் நாடு இன்னொரு தமிழீழமாக மாற புத்தியுள்ளவர்கள் தயாரில்லை என்பதை மக்கள் காட்டி விட்டனர். கூத்துப் பார்க்க வந்தவர்களையும் சேர்த்து கூத்தாடிகள் என்று கணக்கிடுவது தப்பானது.

    காசு கொடுத்து பேசுவதற்கும், தானாக எழுந்து பேசுவதற்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. தமிழக மக்கள் பிரச்சனைகளை விரும்பவில்லை.

    Reply
  • thurai
    thurai

    எதற்கும் ஜிரிவி யின் அரசியல் ஆய்வினை பொறுத்தே தமிழகம் செயற்படும். தமிழகமென்ன உலகமே அவர்களின் கையில்தான். நான் கூறுவது புலிகளின் புலத்துத் தமிழுலகம்.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இதில் கொடுமை என்னவென்றால் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று சூளுரைத்தவர்களை, மக்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    திமுக மக்களுக்கு பலதை செய்துள்ளது. 1 கிலோ அரசி 1 ரூபாய்க்கு.(அதன் விலை வெளிக் கடையில் 25ரூபா) ஒரு குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி. அடுத்து டீவி இல்லாத வீடுகளுக்கு கலர் டீவி. 30% கொடுக்கப்பட்டு அடுத்தது இத் தேர்தலில் வெற்றி பெற்றால் கிடைக்கும் என்றது + ஆச்சுது.

    பாமக கட்சி மாறியதிலும், பாமகவிலிருந்த பலர் திமுகவுக்கு மாறியதிலும் இருந்த வாக்குகள் சிதறிவிட்டன.

    வைகோ பாவம். ஜெயோடு இருந்தும் கடைசியாக கவனிக்கப்பட்டவர்.

    ஜெக்கு தமிழீழ ஆதரவால்தான் 10வது கிடைத்துள்ளது. ஜெயின் வாக்குகளை உடைத்து தம் பக்கம் இழுத்தவர் விஜயகாந். இது திமுகவுக்கு சாதகமாகிவிட்டது.

    காங்கிரஸ் தமிழீழ பிரச்சனையால் வாரப்பட்டு விட்டது.

    உணர்வுகள் எப்படியானாலும் ,தமது நிலையை மக்கள் பார்த்துள்ளனர். இனி ஸ்டாலின் முதல்வர் ஆவது மட்டுமே மிகுதி. அது இம்முறை டொப் நியுஸாக இருக்கும்.

    Reply
  • Thambiah Sabarutnam
    Thambiah Sabarutnam

    நேற்று மதிவதனி பாலச்சந்திரன் உட்பட முக்கிய புலிகளின் குடும்பத்தவர் போலி அடையாள அட்டைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்து விட்டபோதும் இன்று இராணுவத்தினர் அவர்களை அடையாளம் கண்டு விட்டனர். ஞாயிறு காலை ராஜபக்சே பிரபாகரன் மரணமான செய்தியை தெரிவிக்க இருப்பதாக இங்கே சொல்லப்படுகிறது.

    இந்திய தீர்வை இருபது வருடத்திற்கு முன்னர் ஏற்றிருந்தால் முப்பதாயிரம் புலிகள் மாவீரர்கள் என்று மாய்ந்திருக்க வேண்டியதில்லை. கிளிநொச்சி பிடிபட்டதோடு யுத்த நிறுத்தம் அறிவித்திருந்தால் வன்னி மக்கள் இவ்வளவு இழப்புகளையும் அவலங்களையும் சந்ததித்திருக்க வேண்டி வந்திருக்காது.
    அரசியல் சூனியங்களை அறிவு கெட்ட முழு முட்டாள்களை புளுகு புளுகு என்று புளுகி இந்தா பண்ணப் போகிறான் படைக்கப் போகிறான் என்று பிலிம் காட்டி கடைசியில் கண்டது என்ன
    பங்கருக்குள் …………… மரணமானதும் இன்னமும் புலி வாலுகள் அகபட்டதை சுருட்டி கொண்ட பின்னர் அரசாங்கம் அறிவித்த பின் தாமும் பிரபா பிணமானதை அறிவிக்க உள்ளார்கள்.

    இனியாவது அரசியல் பிழைப்பு நடத்தும் நரியர்களை நம்பாது ஒன்றுபட்டு முன்னேறுவோம்.

    Reply
  • padamman
    padamman

    இன்று 3மணியளவில் எல்லாம்மே முடிந்து விட்டது நாளை காலையில் மகிந்தா இதை அறிவிப்பார் கொளும்பில் கடையில் எல்லாம் சிங்ககொடியெற்ற சொல்லிவிட்டதாக தகவல்.

    Reply
  • மாயா
    மாயா

    இறுதியாக கடந்த மே மாதம் 7ம் திகதி , பிரபாகரன் கோபத்தோடு மலேசியாவிலிருக்கும் கேபீயோடு சற்றலைட் தொலைபேசியில் பேசியவற்றை இத்தாலியில் உள்ள உளவுத் துறை கண்காணித்து பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் அக்குரல் பிரபாகரனது குரல்தான் எனவும் உறுதி செய்துள்ளது.

    இந்திய தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், புலிகள் 500 மீட்டர் பரப்புக்குள் 5000 பேரோடு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் கடற் புலிகளின் தலைவர் சூசை , தொலை தொடர்பு சாதனம் வழி பாதுகாப்பு துறையோடு தொடர்பு கொண்டு , படையினர் தமது ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்தாவிட்டால் தம்மோடு இருக்கும் 5000 பேரோடு தம்மை அழித்துக் கொள்ளப் போவதாகவும் , தாம் ஒருபோதும் சரணடைய போவதில்லை என்றும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உண்மையில் இந்தியத் தேர்தல் முடிவுகள் காட்டிய படிப்பினைகள் என்ன என நாம் ஒவ்வொருவரும் இங்கு ஆராய்வது முக்கியம். தமிழக உறவுகள் என்றும் எமது தொப்புள்கொடி உறவுகள் தான் என்பதும் உண்மை. அவர்கள் எமது பிரைச்சினையைக் கரிசனையோடு நோக்குகின்றார்கள் என்பதும் உண்மை. அவர்கள் எமக்குக் காட்டும் ஆதரவை வைத்து அதனைத் தமக்குச் சாதகமாக்கி மதிமுக, பா.ம.க மற்றும் இடதுசாரிக் கட்சிகளும், நெடுமாறன் போன்றவர்கள் காட்டிய அதி தீவிரமான விடுதலைப்புலியாதரவையும், போராட்டங்கள், தீக்குளிப்புகள் என்ற பெயரில் அன்றாடம் பொதுமக்களின் சராசரி வேலைகளைக் கூட பார்க்க முடியாது செய்த அட்டகாசங்களையும் தமிழக மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்த் தான் இப்படித் தமக்கு அசௌக்கரியங்களை ஏற்படுத்துவதில் யார் முன் நின்று செயற்பட்டார்களோ அவர்களையெல்லாம் பாதிக்கபட்ட மக்களே வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். குறிப்பாக வை.கோவின் தோல்வியும், பா.ம.கவின் அனைத்து இடங்களிலுமான தோல்விகளும் இதனை பறைசாற்றுகின்றன. தாம் சார்ந்து நிற்கும் கட்சிதான் என்றும் அரசமைக்கும் என்று பாமக அடிக்கடி கூறும், ஆனால் அதை பா.ம.க அல்ல மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்பதையும் இத்தேர்தல் பா.ம.கவிற்கு புகட்டியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறிய வேண்டுமென்று அறைகூவல் விட்டார்கள். இதை முன்னின்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கிய வை.கோவையே தோற்கடித்தவர் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் தான். காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றியீட்டியிருக்கின்றது. இதன் மூலம் பழைமையான பாரம்பரியம் நிறைந்த காங்கிரஸ் கட்சியை தமிழக மக்களும் புறந்தள்ள விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.

    மொத்தத்தில் தமிழ்நாட்டில் தமக்கு ஏற்பட்ட அசௌக்கரியங்களினால் எப்படித் தமிழக மக்கள் ஆத்திரமுற்றார்களோ அதே நிலையை இன்று புலம் பெயர்ந்து வந்திருக்கும் இலங்கைத் தமிழர்களும் தாம் வாழும் நாட்டிலுள்ள மக்களுக்கு அசௌக்கரியங்களை ஏற்படுத்திக் கொணர்டிருக்கின்றார்கள். இந்நிலை எதிரகாலத்தில் தமிழர்களுக்கெதிரான ஒரு நிலைப்பாட்டை அந்தந்த நாட்டு மக்களும் எடுக்கும் நிலைமைகளை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது தவறான வழிகளில் தம் நடவடிக்கைகளை எடுப்பவர்கள் தமது நடவடிக்கைகளில் மாற்றங்கள் கொண்டு வந்த தமது தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

    Reply
  • thurai
    thurai

    சிங்களவர் சிங்கக்கொடி ஏற்றுவதால் புலிகள் தோல்வி கண்டுள்ளனர் என்பதையே காட்டுகின்றது. தமிழரை சிஙகளவ்ர் வெற்றி கொண்டார்க்ள் என்பதல்ல. புலிப்பயங்கரவாதமே தோற்கடிக்கப்பட்டுள்ளது.

    துரை

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிய தேசத்துக்கு தான் திரும்பிச் செல்வதாக மகிந்த ராஜபக்ஸ ஜோர்தானில் கூடியிருந்த உலக தலைவர்கள் பலர் மத்தியில் சற்றுமுன் தெரிவித்துள்ளார். அவர் தனது பயணத்தை குறிப்பிட்ட தினத்துக்கு முன்னதாகவே முடித்துக் கொண்டு நாளை இலங்கைக்கு திரும்புகிறார்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    அஜீவன், உங்களது
    //சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான்யூ, இலங்கையை பார்த்த பின் இலங்கை போல் சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என எண்ணம் கொண்டு சிங்கப்பூரை உருவாக்கினார். பின்னர் அதே லீ குவான்யூவால் இலங்கை போல் என் நாடு ஆகக் கூடாது என்றும் சொன்னார். முன்னது பெருமை. பின்னது வெட்கம்.// இது தேசத்தில் இடப்பட்ட கருத்து

    முழுக்கருத்தையும் Thambiah Sabarutnam
    athirady.com/ல்
    விடுதலைப் புலிகளின் ஆட்டமும், அடங்கலும்… 1975 முதல் 2009 வரையிலான ஒரு நோக்கு…!! பகுதியில் தனது கருத்தாக பதிந்துள்ளார். இப்படியும் …. ஜென்மங்கள்.

    Reply