புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்திலிருந்து அவரது இடுப்புப்பட்டி, பிரத்தியேக கைத்துப்பாக்கி, செய்மதி செல்லிடத் தொலைபேசி போன்றவற்றை படையினர் கைப்பற்றியுள்ளதாக ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.
பிரபாகரன் இறுதியாக சுற்றி வளைக்கப்பட்ட வெள்ள முள்ளி வாய்க்கால் பகுதியிலேயே கனரக ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர். பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்துத் தேடுதல்களில் ஈடுபட்ட படையினர், கடற்புலிகளின் தலைவர் சுசை உட்பட ஏழு புலிகள் முக்கியஸ்தர்களின் சடலங்களையும் கைப்பற்றினர்.
Kusumbo
பிரபா சூசை பொட்டும்மானை எத்தனை தடவைதான் உயிர்கப்பண்ணிப்பண்ணிச் சுடப்போகிறார்களோ தெரியவில்லை
rohan
சரி – ஆனால், சூசை பொட்டு ஆகியோரின் படங்கள் வெளியிடப்பட்டனவா?