பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கில் தாலிபான்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இராணுவம்

pakarmy_.jpgபாகிஸ்தான் இராணுவத்தினர் தாலிபான் போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகின்றனர் சுவாத் பள்ளத்தாக்கின் பிரதான நகரமான மிங்கோராவில் தலிபான் போராளிகளைத் தேடியொழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் தெருத் தெருவாக, வீடு வீடாகத் தேடி மோதி வருவதாக பாக்கிஸ்தான ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நகரத்தில் இருந்து தலிபான் போராளிகளை விரட்டியடிக்க சனிக்கிழமை தாக்குதலை ஆரம்பித்த ராணுவம் தற்போது நகரின் மத்தியை புறநகரோடு இணைக்கின்ற வீதியையும், நகரின் முக்கியமான ஐந்து குறுக்குத் தெருக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளது என ராணுவத்தின் சார்பில் பேசிய அதிகாரி தெரிவித்தார்.

மிங்கோரா நகரத்தில் ஞாயிறன்று 5 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர் என்றும் 14 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். சுவாத் பள்ளத்தாக்குக்குள் ராணுவம் ஒரு மாதம் முன்னதாக புகுந்ததில் இருந்து இது வரை நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *