ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 30 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த பாடசாலை அதிபர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று இன்று (25.05.2009) கொழும்பில் நடைபெறுகின்றது. இதற்கென 1050 மில்லியன் ரூபா நிதியினை ஆசிய அபிவருத்தி வங்கி வழங்கவுள்ளது.