புகைத் தலினால் தெற்காசியாவில் மாத்திரம் வருடாந்தம் 1.2 மில்லியன் பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இலங்கையில் நாடளாவிய ரீதியில் பொது இடங்களில் புகைத்தல் மற்றும் போதைவஸ்து பாவனை தொடர்பாக 6342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3, 716 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட் டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக புகைத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் சுகாதார நலன்புரி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இத் தகவல்கள் வெளியிடப்பட்டன.