மஸ்கெலியா மண்சரிவு: வீடுகளில் வெடிப்பு; குடியிருப்பாளர்களை வெளியேற உத்தரவு

home.jpgஅம்பக முவ பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா நகரத்தில், மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியின் அருகில் அமைந்திருந்த குடியிருப்புகள் சில நில வெடிப்பு காரணமாக பாதிப்படைந்துள்ளன.

மவுசாக்கலை நீர்தேக்கத்தின் கரையில் அமைந்திருந்த இந்த வீடுகளில் குடியிருந்த 5 குடும்பங்களை உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் பணித்துள்ளார். தற்போது மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இக்குடியிருப்புப் பகுதி மண்சரிவு அபாயத்தையும் எதிர்நோக்கியுள்ளது.

இந்த வீடுகளின் சுவர்கள் 4-5 அங்குலம் வரை வெடித்து இடைவெளிகளுடன் காணப்படுகின்றன. சில வீடுகளின் சுவர்கள் நிலவெடிப்புகள் காரணமாக நிலத்தினுள் புதைந்துள்ளன. தொடர்ந்தும் மழைபெய்தால் நிலவெடிப்புகளின் அளவு அதிகரிப்பதோடு, பாரியளவு மண்சரிவு அபாயத்தையும் எதிர் நோக்கும் என புவி சரிதவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 குடும்பங்களும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். இவர்களுக்கான நிவாரணங்களை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *