தமிமீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! இங்கு காட்டாற்று வெள்ளம் போல் கூடியிருக்கும் புலம் பெயர்ந்த என் அன்பார்ந்த தமிழீழ மாக்களே! கொள்ளையானந்தன் பேச வருகிறான் என்றதும் விசிலடிப்பதற்கு என்றே வெளி மாவட்டங்களில் இருந்து எல்லாம் சிரமத்தையும் பாராமல் பிரித்தானியா பாராளுமுன்றலில் கூடியிருக்கும் மாணவப் பெருந்தகைகளே! தேசியத் தலைவர் வழிகாட்டலில் வன்னியில் ஒரு சந்ததியே அழிந்தபின் ஆமிக்காரன் சரணடைய வைத்துச் சுட்டுக் கொன்றோ அன்றி சபாரத்தினம் பத்மநாபா ராஜினி திரணகம போன்றோரைக் கொன்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொன்றோ மரணித்துப் போன அண்ணையின்ரை இடத்தை நிரப்பி லண்டனில் இருந்தபடியே தமிழீழம் வாங்கித் தர வந்திருக்கும் எங்கள் தலைவி மேதகு ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதிலே நான் பெருமைப் படுகிறேன்.
இங்கு தேசியத் தலைவரைப் போல போஸ் கொடுத்து அமர்ந்திருக்கும் தலைவி எப்படிப் பட்டவர் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டிய அவசியமில்லை. சிங்கள வெறியர்களுக்கு நான் ஒன்றைத் தெட்டத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் தேசியத் தலைவி ஜனாவின் கோபத்துக்கு ஆளாகி விடாதீர்கள். ஜரோப்பிய பாராளுமன்றத்தில் தன்னம் தனியாக நின்று தமிழீழம் அமைக்கப் போகும் எங்கள் மேதகு தலைவி சொன்னால் வவ்வால் வரும். எப்படி வரும்……. (மாணவர்கள் விசிலடிக்கிறார்கள்.)
தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் தொடங்கியபோது யாழ் லோதிக்க மேட்டுக் குடி மக்களுக்கே உரிய பாணியில் எங்கள் தலைவி சிம்பாப்வேக்கும் பின்னர் நைஜீரியாவுக்கும் தனது பெற்றோருடன் சென்றது எதற்காக? 24 மணி நேரமும் தமிழீழம் எப்படி அமைக்கலாம் என்று சிந்திப்பதற்காகவே என்பது இங்கு நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க் கட்சியினர் சொல்வது போல 30 ஆண்டுகள் நடந்த போராட்த்தில் ஒரு சிறு பாதிப்புக் கூட படாமல் எங்கள் தலைவி தப்பியிருந்தது சொகுசாக வாழ்வதற்கல்ல. தமிழ் மக்களை அண்ணை அம்போ என்று கைவிடும் போது ஓடிவந்து காப்பாத்துவதற்காகவே.
துப்பாக்கிச் சூட்டுக்கும் குண்டு மழையிலும் சிறிலங்கா இராணுவத்தின் அட்டூழியத்திலும் தமிழ் மக்கள் 30 ஆண்டுகள் சீரழிந்த போது தலைவி தமிழீழம் கட்டுவதற்கான படிப்புக்கள் அத்தனையையும் படித்துக் கொண்டு இருந்தார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அவரின் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரத்தைப் பாருங்கள். அதிலே எழுத்துக்களை மாத்திப் போட்டு எம் பி ஏ என்றெல்லாம் படித்திருக்கிறார். அதன் அர்த்தம் பரியாதவர்கள் தலைவி ஏதோ தப்பி ஓடிப் போய் வெளிநாடுகளில் வாழ்ததாகவும் அவருக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாதர் போலும் பூச்சாண்டி காட்டுகிறார்கள். அவர்களுக்கு நான் இரண்டு சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த வேட்பாளராவது இந்தத் தேர்தலில் தனது குவாலிவிக்கேசனைக் காட்டியிருக்கிறர்களா. தலைவியைத் தவிர வேறு யாராவது குவாலிவிக்கேசனைக் காட்டியிருந்தல் நான் இந்த மேடையிலேயே தீக்குளிக்கத் தயார்.
அடுத்தது தலைமை என்பது யாழ்ப்பாணத்திலிருந்து வரவேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட விதி ஆகையால் எங்கள் தானைத் தலைவி கரிகாலி சோழத்து வீராங்கனை தமிழீழ தேசியத் தலைவி ஏகத் தலைவி ஜன ஜநநாயகத்துக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். இதுவே வன்னியா இருந்தா கேக்கிற விதமே வேறை. முல்லைத்தீவில பார்திருப்பீங்கள் எங்கட அண்ணைக்கு வன்னி மக்கள் மண்மூட்டையா நின்றவை. எங்கட விரோதிகள் சொல்லினம் நாங்கள் பலவந்தமா வைச்சிருந்தது என்று. அதில ஒரு துளியும் உண்மையில்லை. வன்னி மாக்கள் அடங்காப்பற்றுடையவர்கள். அவர்களை ஒரு கட்டு வைக்கோலோடு மேய்க்கலாம். தெரியும் தானே கடைசியா அந்தச் சனத்துக்கு தவிடு கரைச்சுக் குடுத்த நாங்கள். இது லண்டனா இருக்கிறபடியா உங்களை எல்லாம் கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து எங்கள் தலைவிக்கு வாக்களியுங்கள்.
ஜரோப்பிய பாராளுமன்றத்தில் ஒரு விதி இருக்கிறது. இது நிறையப் பேருக்குத் தெரியாது. தனித்த வேட்பாளர் அதுவும் லண்டனில் நின்று ஜெயிக்கும் ஒரு வேட்பாளர் எழுந்து எங்களுக்கு தமிழ் ஈழம் வேணும் என்று பேசிவிட்டால் அதுவும் தீபம் ஜிரிவி போன்ற தெல்லைக் காட்சிகளில் அம்ணி பேசும் தங்கிலிஸ் தமிழில் பேசிவிட்டால் உடனே ஒரு பையினுள் போட்டு கையோடு தமிழீழத்தைக் கொடுத்து விட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. சிம்பாப்வே நைஜீரியா பிறகு லண்டன் அதுவும் டபுள் எம்மே படிச்ச ஒரு தலைவி கேட்கும் போது ஜரோப்பியப் பாராளுமன்றமே அதிரப் போகின்றது என்பதை நான் உங்கள் முன் செல்லிக் கொள்வதில் அடங்காத் தமிழன் என்ற முறையில் மார்தட்ச் சொல்லுவேன்.
தயவு செய்து ரத்தத்தில் பொட்டு வைக்க வருபவர்கள் வரிசையாக வந்து தலைவிக்கும் எனக்கும் வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மங்கையக்காவுக்குப் பிறகு ரத்தப் பொட்டு வைக்கிற வீர விளையாட்டுகள் அமந்து போச்சுது. இப்ப எங்கட தானைத் தலைவி வெளிக்கிட்டு இருக்கிறா அவவுக்கு உங்கட வீர விளையாட்டை நீங்கள் காட்டலாம். ஒரு சிறிய வேண்டுகோள். தலைவிக்கு பொட்டுவைப்பவர்கள் குறைந்த பட்சம் சவுத்பாங்க் பல்கலைக் கழகத்திலாவது குவாலிவிக்கேசன் எடுத்திருக்க வேண்டும். அம்மணி இம்பீரியல் எம்மே.
வணங்கா மண் புகழ் டாக்குத்தர் தமிழ் போறம் தலைவர் ஒரு பேப்பர் புகழ் அண்ணன் கோபி என்று எனக்குப் பின் நிறையப் பேர் உங்களுக்கு தமிழீழம் எப்படி எடுப்பது அதற்ககு நீங்கள் எப்படிக் காசு கொடுப்பது. பிறகு நாம் அதை எப்படிப் பிரிப்பது என்து பற்றியெல்லாம் விபரமாகப் பேச இருப்பதால் என் பேச்சை நான் சுருக்கிக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்.
அதில குறிப்பா வணங்கா மண் டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வன்னிப் பேரவலத்தை வைச்சு சேர்த்த காசு வாய்கால் வழியோடி மெற்றோவில விளம்பரம் நோட்டிசுகள் போஸ்ரருகள் என்று நிறையச் செலவாச்சு. இதெல்லாம் எதுக்கு வன்னி மக்களுக்காகத் தானே செய்கிறோம். அவர்களுக்கு தமிழீழம் வாங்கிக் கொடுக்காமல் எங்கள் தலைவி ஜனா ஓயமாட்டார் என்பதை உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழீழம் தொடர்பாக பேசும் போது அப்பனை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று பேட்டி கொடுத்து பின்னர் தமிழீழ உணர்வை ஊட்டி ஊட்டி வளர்த்தார் என் அப்பா என்று கதையளந்த மாபெரும் தத்துவப் பாடகி தற்போது பிச் கிச் என்று எதுகைமோனையுடன் தவைலிக்காக பாடி தனது தலைவிக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கும் மாயா செல்லத்துக்கு இந்தக் கூட்டத்திலே என் இதயத்தைத் தொட்டு நன்றி கூறிக் கொள்கிறேன்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே! ஜனனிக்கு போடுங்கோ. புலம் பெயர் சூழலில் இருக்கும் லண்டன் வாழ் தமிழ் மக்களே தயவு செய்து எங்கள் தலைவி ஜன ஜநநாயயகத்திற்கு போடுங்கோ. வணங்கா மண்ணிலை சுருட்டினது போதாது. கண்ணிர்த் துளிகளில் சேர்ந்தது போதாது. இன்னும் வேணும். அதுக்ககாகவே தேசியத் தலைவர் செத்த செய்தியைக் கூட இன்னும் மறைத்துக் கொண்டு உங்களிடம் வந்திருக்கிறோம். தமிழீழம் வாங்கித் தருவா எங்கடை அக்கா. தயவு செய்து குவாலிவிக்டீகசன் உள்ளவை 10 மணிக்கு முதலும் மற்றவை எல்லாம் 10 மணிக்கு பிறகும் அக்காவுக்கு நேரே பார்த்துப் போடுங்கோ. தமிழீழம் மலரும், ஒரு கேள்வி ஜரோப்பியப் பாராளுமன்றத்தில் கேட்டா போதும். மறு நாளே தமிழீழம் மலரும். மறக்காம நாளைக்கு அக்காவின்யைப் பாத்துப் போடுங்கோ.
மம்மி ஜெய தமிழீழம் வாங்கித் தாறம் என்று வெளிக்கிட இந்தியாக் காரங்கள் எங்கள் முதுகில் குத்திப் போட்டாங்கள். மம்மியை மண் கவ்வ வைச்சிட்டான்கள். மம்மி வருவா ஆசை முத்தம் தருவா என்று பார்திருந்த அண்ணனுக்கு விதி சதி செய்துவிட்டது. மம்மி ஜெயா போனால் என்ன அக்கா ஜனா இருக்கின்றா என்பதை மறந்துவிட வேண்டாம்.
இந்த அரசுகளை நம்ப முடியாது இந்த மாக்களையும் நம்ப முடியாது. போன வருசம் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு லண்டனிலை ஒன்பது பேரைத் தெரிவு செய்தவை. ஆனா இந்த வருசம் 8 ஆக குறைச்சுப் போட்டான்கள். 9வது ஆக ஒரு தமிழன் ஏகபிரதிநிதியாக வந்துவிடக் கூடாது என்று திட்டம் போட்டுச் செய்த சதி இது. இதுக்கு எதிராக நாங்கள் கிளர்ந்து எழ வேண்டும். ஒன்றை மறக்கக் கூடாது வோட்டு போடுற ஆக்களில் 8 வீதம் பேராவது வாக்களித்தால் தான் 8வது இடத்திற்கு வந்து கடைசிக் கதிரையையாவது பிடிக்கலாம். ஆனபடியா அக்காவை வடிவாப் பாத்து அக்காவுக்கு நேர உங்கள் புள்ளடியைப் போடுங்கள். குறைஞ்சது போடுற வோட்டில 2 வீதம் அதாவது 40,000 க்கும் கூடுதலாக அக்காவுக்கு புள்ளடி விழுந்தால் தான் கட்டுக்காசு 5000 பவுண் என்றாலும் கிடைக்கும். வன்னி மக்களுக்காகச் சேர்த்த காசு தயவு செய்து அதை நாசமாகப் போகவிடாதீர்கள். இன்று (யூன் 4) போடுங்கள் வோட்டு அக்காவைப் பாத்து. அக்காவா கொக்கா!!!
நன்றி வணக்கம்.
Constantine
This is another loosing battle led by the desperate LTTE supporters in London. Just waste of time. I will be very surprise if she would secure her deposit.
I am also surprise to note how this ‘intellectual’ cannot understand the simple electoral maths. . Is she a ‘Kuthirai’ Case? Or did she have the qualifications at the same university where late DR Balasingham obtain his PHD in bluffing???
manithan
very nice and intresting aricale,in my opinion she lost her 5000£,howewer that our money,
very good analytical.still tamil peaple beliving she can give the tamil eelam,
my concern for defeat candidate
பார்த்திபன்
ஈழமாறன் அண்ணே,
நீங்க போடு போடு எண்டு சொன்ன பிறகும் போடாமல் விடுவேனா?? வழமையாய் ஒண்டு தான் போடுறனான். இண்டைக்கு நீங்களும் சொன்னதாலே ஒண்டோடை இன்னொண்டையும் சேர்த்துப் போட்டிட்டன். அந்த இரண்டு பாட்டில்கள் மீது சத்தியமாய்ச் சொல்லுறன். “நம்ம தமிமீழத் தேசியத் தலைவி வருவா, ஆனால் வரமாட்டா”….
niru
ஈழமாறன் எங்கட தேசியத் தலைவியின்ரை பொலிற்றிக்கல் அறிவை சொல்ல மறந்திட்டியள. அவ அல்ஜீரா தொலைக்காட்சியிலை சொல்லிறா போராட்டம் 83 ஆம் ஆண்டுதானாம் அரம்பிச்சதாம் என்டு. பிறக ஒரு நாள் சொல்லுறா புலிகள் வன்னியிலை ஆக்களை கட்டாயப் படுத்தி புடிக்கேல்லையாம் எண்டு. ஆதாரம் வேறை கேட்டவா. விம்பிள்டன் புள்ளையார் மேலை ஆணை சத்தியமா ஆதாரம் கேட்டவா. அவவுக்கு எங்கை தெரியப் போகுது.அவதான் ஊரை விட்டு கிளம்பி ரொம்ப நாளாச்சே.பிறகு சொல்லுறா உதைப் போய் புலியளிட்டை கேளுங்கோ எண்டு. பொலிற்றிக்ல் அறிவிலை அக்கா பாலா அண்ணையையும் தேசியத் தலைவரையும் மிஞ்சிட்டா.
Tamil
ஈழமாறன் நல்ல காலம் உங்கள் ஆக்கத்தை நான் இறுதிவரை படித்தது! கடைசி பந்தியை படிக்கும் வரை எனக்கு ஒரே குளப்பம் அதாவது நீங்கள் போடுங்கள் போடுங்கள் என்கிறீர்களே மக்களை வன்முறைக்கு தூண்டுகிறீர்களோ என்று! வோட்டு என்று தெளிவுபடித்தியமைக்கு நன்றி
thevi
ஈழமாறன் உங்கள் எழுத்தைப் படித்தேன். பக்கத்திலைதான் வாக்கு பதிவு நடக்கிறது. எழுந்து போய் போட்டு விட்டேன். யாருக்கு போட்டேன் என தெரியவில்லை. நிச்சயமாய் ஜனநாயகத்துக்கு இல்லை.
ross
கீழ்த் தரமான கட்டுரை. போறாமையின் வெளிப்பாடு. காழ்ப்புணர்ச்சியின் உச்ச வெளிப்பாடு.
anpu
இடையில் அகப்பட்ட வெளிக்குள் தருணம் பார்த்து கடையை விரித்துள்ளா… தெரிவானால் அவவுக்கு நல்ல வியாபாரம்…. தமிழர் தலை எழுத்து இன்னமும்தான் மாறவில்லை.
KUNALAN
ஹய்! றோஸ் கண்டு பிடிச்சிடுடாங்களே ஈழமாறன் இப்ப என்ன செய்வீங்க! இப்ப என்ன செய்வீங்க!!
ஈழமாறன்! உங்களுக்கு தில் இருந்தா நீங்களும் சுத்துமாத்துக்கு ஒரு வழியக் கண்டு பிடிக்கிறதுதானே…?! அதை விட்டுப்போட்டு சும்மா…! போங்க ஈழமாறன். ஜனனி சொத்துச் சேர்க்கப்போறா எண்ட பொறாமை உங்களுக்கு. றோஸ்! நீங்க விடாதேங்க. நானும் உங்கட கட்சிதான்.
குணாளன்
KUNALAN
ஈழமாறனின் கட்டுரையைப் படித்தபின் நானும் உவவுக்கு வோட்டுப் போடத்தான் போனன். அனால் பாருங்கோ ஜனனியக்காவின் இலக்கம் 17. கூட்டினால் 8வருகுது. ஏற்கனவே தலை இந்த எட்டாலதான் கவுண்டு போனார். என்னத்துக்கு பொல்லாப்பு எண்டு அம்பிட்ட ஒண்டக்குக் குத்திப்போட்டு வந்திட்டன். வெரிசொரி ஈழமாறன்.
குணாளன்.
Thevan
I am a Kaduvan dog
endorsing jana for wot she spoke
writing a decent note
she will buy us eelam pls vote
vananka mann is a ship
collected lot good they are cheap
jana cant talk in tamil
because she is a damil
vote your way to eu
she would say to the diaspora cu
palli
ஈழ மாறன் பல்லியும் சின்னதாய் ஒரு கருத்து சொல்லுகிறேன்; என்னடா இது இன்னுடைய கட்டுரைக்கு மட்டும் பல்லி அமைதி காக்குது என தாங்கள் நினைத்து விட கூடாது அல்லவா..,?
தமிழர் தறுதலை கூட்டணி கேட்டது தமிழ் ஈழம்;;;
தமிழர் இயக்கங்கள் கேட்டது தனி தமிழ் ஈழம்;;;
புலி தலலை கேட்டு கெட்டது புலி தனி ஈழம்;;;;
புலம் பெயர் புலிகள் கேட்டது ஜ வோண்டுத ரமில் ஈலம்;;;;
பிள்ளை ஜனனி கேப்பது ஜரோப்பாவில் ஒரு தனி ஈழம்;;;;;
பல்லியின் பார்வையில்;
முதலாவது; இலங்கை தமிழரை ஏமாத்தி கெடுத்தனர்;
இரண்டாவது; பலரது இளமையையும் படிப்பையும் கெடுத்தனர்;
மூன்றாவது; சிறுவர்கள் படிப்பை கெடுத்து பலி கொடுத்தனர்;
நான்காவது; புலம் பெயர் இளயோரை கெடுத்து கெடுத்துவிட்டனர்;
இறுதியானது; பலரது உயிரை முதலாக போட்டு சில வியாபாரிகளின் அசையும் அசையா சொத்துகளை பாதுகாக்க சிலரது ஆலோசனயில் அழகான பெண், அர்த்தமில்லாத பேச்சு, காந்திக்கு விடுதலை உனர்வை கத்து கொடுத்த நாட்டு காத்தை சுவாசித்த தகமையுடன் விஜயசாந்திபோல் களம் இறங்குகிறார்; காந்திமதி போல் பாராளமன்றத்தில் பேசுவாரா? அல்லது குஸ்பு போல் சிலர் கோவில் கட்டுவார்களா? அல்லது ஆச்சி மனோகரம்மா கோவை சரளா போல் நம்மை எல்லாம் சிரிக்க வைக்க போகிறாரா???? எமது தலைஎழுத்து யார் வேண்டுமானாலும் எம்மில் (‘தமிழர்)சவாரி செய்யலாம் என்னும் நிலை வந்து விட்டது என்பதுக்கு இதை விட வேறு சாட்ச்சியங்கள் வேண்டுமா??
பார்த்திபன் தந்த குறை போத்தல் இப்படிதான் சிந்திக்க வைக்கிறது; அக்காச்சி தமிழரை வைத்து தமாஸ் பண்ண போறாங்கோ போறாங்கோ அம்முட்டுதான்;
Poopalarajah
Ms. Jananayagam,
I do not know who put into ur mind that U can become a politician. I feel sorry for U Janani. The best U can get is become a “Thunai Nadigai” in Kodambakkam Kolliwood. Even now it is not too late. Once U lost the election ( Which is of course a certain) please contact me. I will make U a Thunai Nadigai.
palli
அடங்கா தமிழன் கேள்வியல்ல; எடக்கு மடக்குதனமான வேலை எனநினைக்காமல் பல்லியின் சந்தேகத்தை யாராவது தீர்த்து வையுங்கோ; ஈழமாறனும்தான்) இந்த மே த கு என்றால் என்ன; படித்து வாங்கிய பட்டமா? அல்லது வேலுபிள்ளை பாட்டன் வழி சொத்தா? அல்லது இனாமாக பெற்றதா? யாராவது பரிசாக கொடுத்ததா? விலைக்கு வாங்கியதா? திருடியதா,? அயல்நாட்டானா?? உலகபெரு மக்களதா? சோதிட பெயரா? சோதனை காவியமா? கண்டபடி போட்டதா? அர்த்தமே தெரியாதா? அல்லது இதுதான் அதுவா?? சொல்லிக்கப்பா; ஈழமாறன் அந்த பிள்ளைக்கு வேறு அந்த பட்டத்தை பரிமாறியுள்ளார்; அதனால்தான் தவிக்கிறேன்;
KUNALAN
“மே த கு”
எனக்குத் தெரிந்து நீண்ட நெடுங் காலமாக கத்தோலிக்க மதத்தில் மேற்றிராணியாரை அதி.வணக்கத்துக்குரிய “மேன்மை தங்கிய குரவர்” (மேதகு) என்று விழிப்பதையே அறிந்துள்ளேன். இந்த நிலைக்கு வருவதற்கு பல சமய சமூக சேவைகள் செய்திருக்க வேண்டும். கத்தோலிக்க உயர் பீடமாகிய வத்திக்கான் சபையால் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்து இது வழங்கப்படும். ஆனால் இப்போது மேதகு என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப் படுகின்றன.
1.மேல் தட்டு குடி
2.மேல்வீடு தட்டிய குடிமக்கள்
3.மேய்ச்சல் தறை குட்டியாடுகள்
4.மேல் தளத்து குருவானவர்
5.மேனி தளதளத்த குஞ்சப்பர்
இப்படி 72 பட்டங்கள் உள்ளன. இவற்றைத் தாமாகவும் சூடிக்கொள்ளலாம்/ யாராலும் கொடுக்கப் படலாம். இத்தனை காலம் இது தொடர்பான தெளிவின்மையோடுதான் பல்லி வாழ்ந்தாரா…? அடடா.. வாழ்க்கையில் பாதிக் காலத்தை வீணடித்து விட்டீர்களே பல்லி.
குணாளன்
palli
கத்தோலிக்க சபையில் இந்த பட்டம் இருப்பது அறிந்தேன்; அதுக்கு மிக கடின உழைப்பும் அனுபவமும் தேவையென்பதும் தெரியும்; அது பிறரால்(அனுபவமிக்கவர்களால்) கொடுக்கபடுவதும் படித்துள்ளேன்; அதனால் தான் கேக்கிறேன் நமக்கு இது எப்படி கிடைத்தது??
பாதி காலம் பல்லி வீணடித்து விட்டது என்பது குணாளன் கவலை, ஆனால் மிகுதி காலத்தையும் இந்த பிள்ளை கெடுத்து விடுமோ என்பது பல்லியின்????
சந்தனம்
இது எல்லாம் பாலாவின் சிந்தனைசிதறல் யாழ் தினசரி ஊடாக வழங்கபட்டது பல்லி .
msri
ஐனனிக்கு>ஈழமாறனின் தேர்தல் பிரச்சாரம்..!
மாறன் நீங்கள் எதை உள்வாங்கி எழுதினீர்களோ> அது பெரிதாக எடுபடவில்லை! என் பார்வையில் நீங்கள் ஐனனியை வேட்பாளராக அறிமுகம் செய்து> அவவுக்கு ஆதரவாக மாபெரும் கூட்டம் ஒன்றில் சிறப்பரை ஆற்றியள்ளீர்கள்! ஐனனி வென்றால் உங்கள் பங்கும் முக்கியமானது!
thevi
மேனி தளதளத்த குஞ்சப்பர் -மேதகு என்பதற்கு பொருத்தமான அர்த்தம்!
piriyan
கீழ்த் தரமான கட்டுரை இது. போறாமையின் வெளிப்பாடு. காழ்ப்புணர்ச்சியின் உச்ச வெளிப்பாடு.
நீர் ஒரு தமிழனா?
Constantine
Only people get pride in a loosing battle is TAMILS? Is that so??
chandran.raja
கடந்தகால கசப்பான அனுபங்களே கட்டுரையும் அதைத்தொடர்ந்து வந்த சில பின்னூட்டங்களும். தேர்தலில் யார் யார் நிற்கவேண்டும் நிற்க கூடாது நின்றால் விரலை வெட்டுவோம் வாக்குப்போட்ட கையை வெட்டுவோம் என யாரும் சொன்னார்களா? தமிழ்தேசியகூட்டமைப்பை தெரிவு செய்தது போல் இல்லையோ!
ஜனநாயகரீதியில் வேட்பாளராக நின்று மக்களிடையே ஆதரவு தேட யாரும் தகுதி உண்டு. கிறிமினல் குற்றத்திற்கு உட்படாதவரை. ஒசாமா பின்லாடனுக்கும் உண்டு. ஏன் நம்ப பிரபாகரனுக்கும் பொருந்தும். அது தான் ஜனநாயகம் என நினைக்கிறேன்.
BC
//நீர் ஒரு தமிழனா?//
இப்படி ஒரு கேள்வி கட்டுரையாளரை நோக்கி வருமானால் தமிமீழத் தேசியத் தலைவி மேதகு ஜனனி ஜனநாயகம் தான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
Mohamed
many of you guys have degraded JJ. As a person I respect her. She is deserved to be respected like every one else. No doubt she’s giong lose. Any reasonable person would understand that JJ’s no clue about the functions of the Euroean Parliament. More or less the EP is a place of an arguing society. The engine of the EU is the European Commission where the heads of states deliberate and draft laws, i.e Regulations and Directives on issues which concern Europe and its people. Any induvidual has no place in the EC. What JJ can, if she wins, certainly not, do is to argue with fellow MEPs on proposals put forward by the EC. Making Tamils’ issue an EU policy is…(I don’t find any word to describe it). Let the illinformed political advisors of JJ learn something. Why don’t you….make Sri Lankan parliament a vital forum for the Tamils’ genuine political aspirations.
niru
கட்டுரை தமிழில் தானே எழுதப்பட்டுள்ளது. ஏன் தேசியத் தலைவியைப் போல தங்கிலிசில் எழுதவில்லை என்ற விரக்தியா?
kannan
எமது தமிழ் சமூகத்தில் அரசியலுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிலே இருக்கிறது.அப்படி வரும் பெண்களையும் விமர்சனம் என்னும் போர்வையில் கடித்துக் குதறி விரட்டியடிக்கப்படுகின்றனர்.இவையாவும் “பெண் வீடுதலை”என்னும் கோசத்துடன் நடத்தப்படுவதே மிகப்பெரிய அகோரம்.நான் பெரிதும் மதிக்கும் ஈழமாறனிடம் இருந்து இப்படியொரு கீழ்த்தரமான கட்டுரை வரும் என எதிர்பார்க்கவில்லை.ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது.ஆக்கபூர்வமான கருத்துக்களோ விமர்சனங்களோ முன்வைக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
george
…………… i know the old tamil leaders and the tamil rebel including the ltte misleading and given the betrayal to their own people. Tamil eelam is not a bad concept but the way we have gone through was wrong. Once we work hard to release the tamil people from the srilankan state terrorism and the Indian extreme braminism clutches then we could be able to achieve our task. i would like to suggest that ltte , other tamil rebel and other tamil political party please don’t do your duty politics anymore and let the new people who are genuine and who really love the people to involve the future political activities. In order to this, Jan has some speciality, boldness and she knows the art of diplomacy. i hope she will succeeded hers goals. What we can do now rather than criticizing her, give your opinion and suggestion that will be helpful her to moderate hers views and thoughts. You all must understand she never belongs to any tamil arm grouped background so the person who have written the third grade article, he has to go for counselling to get red off from his all complex problems.
Sabes
This is an unnecssary article written with no serious objectve. The best thing that the author can do is engage with Janani in a serious dialogue on imprtant matters facing our community and the best ways forawrd. Using the sacarstic (nakkal) style is un helpful to our progress.
palli
பலரது கேள்வி ஏன் இப்படி ஒரு தமிழனை விமர்சனம் செய்யிறியள்; நீங்கள் தமிழரா?? என்பது நாம் தமிழர் என்பதால் தான் தவறுகளை சுட்டி காட்டுகிறோம்; யாரும் தமிழர்மீது சவாரி செய்யலாம் என்னும் போக்கு 1983ல் இருந்து தமிழர்மீது வருகிறது; அன்று நாம் தமிழராய் விமர்சனம் செதிருந்தால் 39 அமைப்பு கடை போட்டிருக்க வாய்ப்பில்லை; அது (இயக்கம்) வளர்ந்த பின் அதை விமர்சிக்கவோ அல்லது தட்டிகேக்கவோ முடியாமல் போய்தான் இன்று எமது இனமே அனாதையாகி விட்டது; அதே தவறை இனியும் விடபடாது; ஆரம்பத்திலேயே சாத்திய படாது என்பது எமது கருத்து; அதனால் ஏன் உங்களுக்கு கடுப்போ தெரியவில்லை; எமது இனம் படும் துன்பம் ஒரு புதிய அரசியல் வாதியை விட்டு பேசமுடியாது; அதுக்கு அனுபவமிக்க மனிதர்கள் தான் வேண்டும்; ஏற்க்கனவே ஒருவர் தாந்தான் தமிழன் தலைவன் என வந்து முப்பது வருடம் புற்றுநோயை விட எம்மின மக்களின் வாழ்வை அரித்து விட்டு மாயமய் மறைந்து விட்டார்;
எம்மினத்தில் இருந்து தோன்றிய புலிக்கே எத்தனையோ அறிவுஜீவிகள் சொல்லி புரியாத விடயத்தை இவர் இங்கு சொல்லி எதுவும் நடக்கபோவதில்லை; அவர் தாராளமாக ஜரோப்பா பாராளமன்றத்தில் ஜெயித்து அங்கு பணிபுரியட்டும்; தமிழனாய் அதை வாழ்த்தலாம்; ஆனால் தமிழருக்கு சுடசுட தோசை என சொல்லி கடை விரிப்பதைதான் நாம் விமர்சிக்கிறோம்; மூர்த்தியரும் இப்படிதான் கப்பல் விட்டவர்; அதென்னென்றால் காத்து திசை மாறி அடித்து அரசின் கையில் போக போகுதாம்; இதைதானே நாம் இதே தேசத்தில் தவளையாய் கத்தினோம்; எமக்கு மூர்த்தி மீதோ அல்லது ஜனனி மீதோ எந்த கோபமும் இல்லை; இந்த இடைகாட்டார் சொல்லை கேட்டு திரும்பவும் சண்டியர் புறப்படுவதை தவிர்க்க முயல்கிறோம்;நாம் தமிழரோ இல்லையோ ஒரு சமூகஅக்கறை உள்ள மனிதர்; அதனால் தாங்கள் எம்மை தமிழரா என முழம் போட்டு அழப்பதை விட்டு சமுகம்பற்றி சிந்திக்க முயலுங்கள் (முடியாதுதான்) முயற்ச்சியுங்கள் முடியும்;
BC
//பல்லி- ஆனால் தமிழருக்கு சுடசுட தோசை என சொல்லி கடை விரிப்பதைதான் நாம் விமர்சிக்கிறோம்.//
பல்லி கூறியமாதிரி தமிழீழ வியாபாரத்தை தான் கட்டுரையாளர் விமர்சித்துள்ளார். புலிகளை யாராவது பெண்கள் விமர்சித்து விட்டால் அந்த பெண்களை முக்கியமாக வீர வணக்கங்கள் புகழ் சாத்திரி உட்பட புலியாதரவு எழுத்தாளர்கள் எவ்வளவு கேவலமாக விமர்சிப்பார்கள். கண்ணன் அவர்களுக்கு வேண்டுகோள் விடுவது தான் நியாயமானது.
Gee, Hertfordshire
கட்டுரையாளர் பயன்படுத்திய நடை விமர்சனத்துக்குரியதாயினும் இங்கு கூர்ந்து நோக்கப்பட வேண்டடியது ஜனனியின் நோக்கமே. அவர் நல்லது செய்யப் புறப்பட்டிருக்கிறார் என்று வைத்துக்கொண்டாரரலும் லண்டன் புலிவால்கள் ஏன் இப்படி மும்முரம் காட்டுகிறார்கள் என்று சொல்லாமலேயே விளங்கும்.
இன்னொரு விடயம்..லண்டனுக்கு மொத்தம் 8 இடங்கள். போட்டியிடுவோர்/கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 19. வலுவான பிரச்சாரம் காரணமாக ஜனனி இந்த 8 இல் ஒன்றாக வர நிறையச்சந்தர்ப்பம் உண்டு போல் தோன்றுகிறது!
தேவன் கூறியது போல தமிழருக்கு “சீ யு” சொல்லாமலிருந்தால் நல்லது!!
Vannikumaran
//எங்கட அண்ணைக்கு வன்னி மக்கள் மண்மூட்டையா நின்றவை. எங்கட விரோதிகள் சொல்லினம் நாங்கள் பலவந்தமா வைச்சிருந்தது என்று. அதில ஒரு துளியும் உண்மையில்லை. வன்னி மாக்கள் அடங்காப்பற்றுடையவர்கள். அவர்களை ஒரு கட்டு வைக்கோலோடு மேய்க்கலாம். தெரியும் தானே கடைசியா அந்தச் சனத்துக்கு தவிடு கரைச்சுக் குடுத்த நாங்கள்.//திரு மதிப்புக்குரிய ஈழமாறன் எண்ட பேரில இந்த கட்டுரையை எழுதிய நீர் நிச்சயமாக யாழ்ப்பாணதில கடதாசி திண்ட மாட்டுப் பரம்பரையாகத்தானிருக்கும். உமக்கு ஒண்டு சொல்லுறன் வன்னிமக்களை அடைச்சு வைச்ச புலியளை விட அடைபட்டுக் கிடந்தவர்களை குண்டெறிந்து கொலைசெய்த ஆமியை வன்னி மக்கள் பற்றி இழிவாக மாடுகள் என்ற தொனியில் எழுதியிருப்பது கண்டிக்கப்படவேண்டும். ஜெயபாலன் தமிழருக்காக உங்கள் தேசம் 1997முதல் பல நல்ல கருத்துக்களை முன்வைத்து சர்வதேச ரீதியில் ஒரு தரமான தமிழ் சஞ்சிகையாக இருந்தது.தயவு செய்து பிரததேச காழ்ப்புணர்வுகளை உமிழும் இது மாதிரியான கட்டுரைகளை தயவு செய்து தணிக்கை செய்து பிரசுரிக்குமாறு அன்புடன் வேண்டுகீறேன்.புலிகளைக் கிண்டலடித்து பொழுதை வீணடிக்க இது நேரமல்ல. தலைமை இல்லாது தத்தழிக்கும் தமிழினத்துக்கு தகுந்த தலைமையை உருவாக்க உழைப்போமாக. வன்னி மக்கள் வைக்கோல் சாப்பிட்டாலும் வாழ் கொண்டு போராடும் மறவர்கள் .யாழ்ப்பாணத் தலைமைகள் போன்று சுயநலம் கொண்ட சோந்திகள் அல்ல .
நன்றி
வன்னிக்குமரன்
Vannikumaran
//thevi on June 4, 2009 8:03 am ஈழமாறன் உங்கள் எழுத்தைப் படித்தேன். பக்கத்திலைதான் வாக்கு பதிவு நடக்கிறது. எழுந்து போய் போட்டு விட்டேன். யாருக்கு போட்டேன் என தெரியவில்லை. நிச்சயமாய் ஜனநாயகத்துக்கு இல்லை.// யாருக்கு வாக்குப் போட்டது எண்டு கூடதெரியாத உமக்கு வாக்குரிமை எதற்கு?
வன்னிக்குமரன்
BC
//தலைமை இல்லாது தத்தழிக்கும் தமிழினத்துக்கு…//
புலிகள் தமிழினத்தின் தலைமையும் அல்ல.தலைமையாக இருக்கவும் முடியாது.
thevi
வன்னிக் குமரன் தமிழ் மக்களின் கழுத்தை அறுத்த புலக்குப் பின்னால் நின்று கொண்டு மக்கள் மேல் சவாரி போக நினைக்கின்ற ஜனநாயகத்தை விட மற்றைய வேட்பாளர்கள் மேலானவர்கள் என்பதால் அப்படி செய்தேன். என்னுடைய வாக்குரிமையை விமர்சிக்க நீர் யார்?
“வன்னி மக்கள் வைக்கோல் சாப்பிட்டாலும் வாழ் கொண்டு போராடும் மறவர்கள் .யாழ்ப்பாணத் தலைமைகள் போன்று சுயநலம் கொண்ட சோந்திகள் அல்ல .”
இது பிரதேச வாதமன்றி புண்ணாக்கா என்ன?
“தலைமை இல்லாது தத்தழிக்கும் தமிழினத்துக்கு”
தமிழினத்தின் தலைமை உருவாகவேயில்லை. உருவாக புலி விடவும் இல்லை.
palli
ஈழமாறனுக்கு எதிராக வன்னி குமரன் எழுதிய பின்னோட்டத்தை தணிக்கை இல்லாமல் விட்ட தேசம் அதுக்கு எதிராகவோ அல்லது பதிலாகவோ வரும் பின்னோட்டங்களையும் தணிக்கை இல்லாமல் விடுவதுதான் தர்மம்; வன்னி மக்களை மாடுகளாக வர்னித்த ஈழமாறன் கண்டிக்கபட வேண்டியவர்; ஆனால் வைக்கோல் தின்பது மாடுதான் ஆக மாடாக வன்னிமக்களை உருவாக்க முயற்ச்சி செய்யத கூட்டத்தைதான் ஈழமாறன் அம்பலபடுத்தி உள்ளார்; மாடுகளை கூட மறைவிடத்தில் வைத்துதான் வெட்டுவார்கள்; ஆனால் புலிகள் மனிதர்களை கூட மக்கள் மத்தியில் வெட்டி பழக்க பட்டவர்கள் என்பது தெரியாதா? புலிக்கு தலமையா?அல்லது தமிழருக்கு தலமையா?தமிழருக்காயின் அது தானாகவே நேரம் வரும்போது உருவாகும்; அதுக்கு இப்போது அவசரம் இல்லை; ஆனால் புலிக்காயின் K P; வெற்றிகுமரன், ராம், புகழ்காவி; இடைவீட்டார், பாஸ்கரன், பாலசந்திரன், இவர்களுடன் சிவாஜிலிங்கமும் போட்டி போடுகிறார்; இதில் ஒருவரை கண்னை மூடி தொட்டு தெரிவு செய்யுங்கோ; அதைவிட்டு இந்த அழிகிய காய்கறி வியாபாரம் செய்வது நல்லாய் இல்லை ஆமா;
mano
“தலைமை இல்லாது தத்தழிக்கும் தமிழினத்துக்கு”
இன்னும் இவர்களுக்கு தலைமை எப்படியிருக்க வேண்டும் என்று தெரியவில்லையே? தமிழினத்தை அழிக்கப் புறப்படுகிறவர்களையே தலைமையாக ஏற்றுக்கொள்வார்களோ? மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்களால் வன்னித் தமிழர்கள் படும் அவலம் இவர்களுக்கு தெரியவில்லையோ?
palli.
இல்லையே மனோ;
Nsk
Hello
Have Anyone of you read her brochure before criticising. Does her manifesto say a word of Tamil Elam or Thesiam. Why don’t you all have work. Most of you have enough time to criticise destructively. Even BNP is allowed to go into parliament. What you do is you call yourselves as democrat and write and do opposite. Come on I had a chance to meet her and I tell you she knows the language of whiteman and the nasty wheeler dealers. Please let the new breed to come out. You will never do good to any community and only criticise. Thesam please don’t degrade yourself. I am not an LTTE supporter but true democrat. I am not a leftist but have human values. Please don’t degrade………
Sorrylankan
vanthiyadevan
She is from thelipallai jaffna
Her family got a upstairs house in front of thurkaiamman temple in thelipallai
She is a catholic
She have some connections in ilawaalai jaffna
Her father is a tution master in harrow
She worked for ltte in UK in the past
She have some relatives as ltte supporters in wallington , bournemouth , cardiff uk
Mr …. {mahagan] have good contacts with her family
kannan
கடவுள் கூட விமர்சனத்திற்கு உட்பட்ட இந்த உலகில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மனிதர் என ஒருவர் இருக்கமுடியாது.எனவே யாரும் யார் மீதும் விமர்சனம் வைக்கமுடியும்.இன்னும் சொல்லப்போனால் இந்த கருத்துச் சுதந்திரமே ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்கின்றது.மேலும் மாற்றுக் கருத்துக்கள் சமூகத்தின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது.எனவே தான் தோழர் மாசேதுங் அவர்கள் நுhறு மலர்கள் மலரட்டும்.ஆயிரம் கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்றார்.எனவே இதன் அடிப்படையில் இங்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியவையே.ஆனால் கருத்துச் சுதந்திரத்தின் பேரால் அவதூறு பொழிவதையோ அல்லது விமர்சனத்தின் பேரால் ஆக்கபூர்வமற்ற கருத்துக்களை முன்வைப்பதோ ஆரோக்கியமானது அல்ல.அதனை நாம் வரவேற்க முடியாது.வர்க்கங்களால் பிளவுபட்டிருக்கும் இந்த உலகில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வர்க்கம் சார்ந்ததாகவே செயற்படுகின்றனர்.கருத்து தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட நபர் எந்த வர்க்கநலன் சார்ந்தவராக தொழிற்படுகிறார் என்பதையும் அது பரந்துபட்டபட்ட மக்கள் நலனுக்கு எந்தவகையில் பாதகமானது என்பதையும் அம்பலப்படுத்துவதாகவே எமது விமர்சனங்கள் அமையவேண்டும்.அத்துடன் மாவோ அவர்கள் குறிப்பிட்டது போல் எதிரிக்கு எதிரான விமர்சனங்கள் அம்பலப்படுத்துபவையாக இருக்கவேண்டும்.நண்பருக்கு எதிரான விமர்சனங்கள் அவர்களை வளர்த்தெடுப்பவையாக இருக்கவேண்டும்.இந்த அடிப்படையில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுமாயின் அவை நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும்.