காத்தான்குடியில் இளம் வர்த்தகர் கடத்தல்

witevehicle.jpgமட்டக் களப்பு காத்தான்குடியில் நேற்று நள்ளிரவு இளம் வர்த்தகர் ஒருவர் வீட்டிலிருந்த வேளை, வெள்ளை வேனில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.  கலந்தர் லெப்பை அஜ்மத்(வயது 38) என்ற பாதணி தயாரிக்கும் நிறுவனமொன்றின் உரிமையாளரான வர்த்தகரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.

நள்ளிரவு உறக்கத்திலிருந்த வேளை கதவைத் தட்டியெழுப்பிய சம்பந்தப்பட்ட நபர்கள் பலவந்தமாக இவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து காத்தான்குடி பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ இதற்கான பின்னணியோ இது வரை வெளியாகவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *