இடம்பெயர்ந்தோரிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை

Wanni_War_Welfare_Campஇடம் பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட திட்டம் ஒன்றை மேற்கோள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் இரண்டு அலுவலகங்களை திறப்பதற்கு பணியகம் திட்டமிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் முதலாவது அலுவலகத்தை மட்டக்களப்பில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இதன் இரண்டாவது அலுவலகத்தை வன்னிப் பகுதியில் அமைக்க பணியகம் ஆலோசித்து வருகிறது.வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்களுக்கு இதன் மூலம் அதற்கான அறிவாற்றலை பெற்றுக் கொடுக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *