விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் இலங்கை அரசினால் விடுவிக்கப்பட்ட பகுதியான மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு பகுதியில் அண்மையில் பொலிஸாரினால் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திரந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளை நேரில் சென்று பார்ப்பதற்காக சனிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்ரம ரட்ன அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவருடன் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் வருகை தந்திருந்தார்.
இதன் போது விடத்தல் தீவு பகுதியில் அண்மையில் புதிதாக திரக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை பார்வையிட்டதோடு அங்குள்ள குறை நிரைகளையும் கேட்டரிந்தார். இதன் போது மன்னார் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஜெயமகால், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் நி.டி.எஸ்.ஆர் அசன் , மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் திரக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
rony
மன்னார் பெரும் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விடத்தல்தீவுதான் கூத்தமைபின் வன்னி பா.உ.செல்வம் அடைக்கலநாதனின் சொந்த இடம். இந்த ஊரில் குடிக்க நல்ல தண்ணீரே இல்லை. குடிநீருக்காக மக்கள் இரண்டு மைல்கள் தூரம் செல்ல வேண்டும். இந்த விடயங்களையெல்லாம் கவனிக்க அடைக்கலத்துக்கு நேரமும் இல்லை. அங்கு அவரும் இல்லை. அப்படியென்றல் இவர் தற்போது எங்கிருக்கின்றார்? அதைக்கண்டு பிடிக்கவே விடத்தல்தீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப் போகின்றார்களோ? ha..ha!