‘ருவன்டி-20;’ கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று: தென்னாபிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் மோதல்

t20-world-cup.jpgஉலகக் கிண்ண ருவன்டி-20  கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன. தென்னாபிரிக்க அணி இத்தொடரின் லீக் போட்டிகள் மற்றும் சுப்பர்-8சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றியீட்டிய நிலையில் இன்று நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் சுற்றுக்களில் தடுமாறியபோதும் அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் இறுதிப் போட்டியை இலக்கு வைத்து இன்று பொறுப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் நட்டிங்ஹேம் நகரிலுள்ள ட்ரெட்ன்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை,  இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நாளை லண்டன்,  ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு இறுதிப் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *