மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீத் இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரும் மொஹமட் நசீத் நாளை அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யவுள்ளதோடு அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.