ஊடக சுதந்திரம் மற்றவரின் சுதந்திரத்தை பாதிக்கக் கூடாது – அமைச்சர் நிமல்

26parliament.jpgஇலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் மூலம் மற்றைய தரப்பினர் மாத்திர மன்றி, ஊடகத் துறையினரும் நன்மையடையலாமென்று சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை விடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டில் காட்டுச் சட்டத்தையா அமுல்படுத்தச் சொல்கிறது? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை மீள செயற்படு த்த வேண்டியது அவசியமில்லை என எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்த போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று (26) வெள்ளிக்கிழமை காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. முதலில் சபாநாயகர் நேற்று முன்தினம் சபையில் தெரிவித்த ஒரு கருத்துக்குத் திருத்தமொன்றை அறிவித்தார். 1997ஆம் ஆண்டு பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அமைச்சராக இருந்தபோது பாராளுமன்றம் ஊடகங்கள் தொடர்பில் ஒரு நீதிமன்றமாக செயற்படக் கூடிய அதிகாரங்கள் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது தவறு என்றும் அது உண்மையில் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி மங்கள சமரவீர அமைச்சராக இருந்தபோதே நிகழ்ந்திருக்கின்றது என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின், நேற்றைய ஆங்கிலப் பத்திரிகையொன்றில் வெளியான ஒரு செய்தி குறித்து ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு அமைய இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளாரென்றும், உண்மையில் தமது கட்சி அவ்வாறான ஒரு கோரிக்கையையோ, இணக்கத்தையோ தெரிவிக்கவில்லை என்றார். அதேநேரம், சபையிலிருந்து ரவூப் ஹக்கீம் எம்.பி. எழுந்து கருத்துக் கூறுகையில் :-

ஏற்கனவே உள்ள ஒரு சட்டத்தை மீளச் செயற்படுத்த வேண்டியது அவசியமில்லை என்றும், இவ்வாறான விடயங்களுக்கு பாராளுமன்ற குழுக் கூட்டங்களில் பிரஸ்தாபிக்கப்படும் கருத்துககைளக் கருத்திற்கொள்ளக்கூடாது என்றதுடன் வத்தளையிலிருந்து ஒரு பெண் ஊடகவியலாளர் கண்டிக்குக் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்’ என்றார்.

அவ்வேளையில் சபையிலிருந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ‘அவ்வாறான பிரச்சினைகளால்தான் சட்டம் அவசியமாகிறது. அப்படியானால் முஸ்லிம் காங்கிரஸ் காட்டுச் சட்டத்தையா அமுல்படுத்தச் சொல்கிறது. இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் இவ்வாறான சட்டம் உள்ளது. ஊடகச் சுசுதந்திரம் மற்றவரின் சுதந்திரத்தைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். இங்கு எத்தனையோ பேர் பல முறைப்பாடுகளைச் செய்கிaர்கள். எல்லாவற்றுக்கும் இந்தச் சட்டத்தால் நன்மைதான் கிடைக்கும்’ என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *