194 அகதிகளுடன் சென்ற படகு ஒன்றை அவுஸ்திரேலியக் கடற்படை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற இடத்தில் 194 பேருடன் வந்த படகு ஒன்றையே அவுஸ்திரேலிய கடற்படை கைப்பற்றியுள்ளது.
அதில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று சந்தேகப்படுவதாக அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பிரன்டன் கோனர் தெரிவித்துள்ளார். படகில் பெண்கள் எவருமில்லை எனவும் அனைவரும் ஆண்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் இதுவரை அவுஸ்திரேலியாவை நோக்கி தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் வந்த படகுகளின் எண்ணிக்கை இத்துடன் 15 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.