மேலும் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல்

19swine-flu.jpgபன்றிக் காய்ச்சல் வைரஸான நொவல் இன்புளுவன்சா ஏ.எச்.1.என்.1 தொற்றுடைய மேலுமொருவர் ஞாயிற்றுக்கிழமை இனங்காணப்பட்டிருக்கிறார். இனங்காணப்பட்டவரும் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தவரென வைத்திய ஆய்வு நிலையத்தின் வைரஸ் தொடர்பான நிபுணர் டாக்டர் கீத்தானி விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்.

இலங்கையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுடையவராக கண்டுபிடிக்கப்பட்டவரும் அவுஸ்திரேலியாவில் வந்த ஒருவராகவே இருந்தார்.  இதுவரையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுடைய 14 பேர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதுடன், 9 பேர் இன்னும் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர் கீத்தானி விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாது பன்றிக் காய்ச்சல் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *