தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் சர்வ கட்சி மகாநாட்டில் கலந்து கொள்ளும் புதிய பிரதிநிதிகளின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரான யூடி தேவதாசன் ,மற்றும் அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான மொகமட் மிஹிலார் மொகமட் ஹன்தஷிர் (ஆசாத் மௌலானா) ஆகியோர் சர்வ கட்சி மகாநாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஏற்கனவே சர்வ கட்சி குழுவில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் இடம் பெற்றிருந்தார்.அவர் அக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்தே அவரது இடத்திற்கு யூடி தேவதாசன் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
palli.
பல்லிக்கும் ஒரு ஆசைதான் அதில் கலந்து கொள்ள (விடுப்பு பார்க்கதான்) ஆனால் அதுவே இறுதி ஆசையாக போய்விடுமோ என்பதால் அந்த ஆசையை ஒத்தி வைக்கிறேன்; அதுசரி இதில் முன்னாள் தலைவர் (தறுதலை) இன்னாள் அமைச்சர் (……….. விரும்பியதை நிரப்புக) கலந்து கொல்வாரா??
சாந்தன்
‘தமிழ்’, “மக்கள்’ , ‘விடுதலை’, ‘புலிகள்’ ??
அதுசரி மஹிந்தர் இனவாத கட்சியளை ஒதுக்குறார் ஓரங்கட்டுறார் எண்டெல்லாம் கேள்விப்பட்டனே!
‘சர்வகட்சி’ எண்டு உலகத்துக்கு காட்டவேணும் அதால விட்டுட்டாங்கள் போல. ஆனால் இலெக்சனில மட்டும் ஆசைப்பட்டுடாதயுங்கோ!
ஆனானப்பட்டவரே வீணை வாசிக்கேலாமல் வெத்திலை வெச்சுக்கொண்டு திரியுறார் !
msri
பல்லி ஆசையை ஒத்திவைக்க வேண்டாம்> புலம்பெயர்> கிழக்கின் “விடிவெள்ளிகள்” குழு ஓன்றும் இம்மாநாட்டிற்கு செல்வுள்ளது! அதல் நீங்களும் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள்லாம்! நீங்கள் விரும்பியுள்ள “அந்த காதல்; தலைவரும்” கண்டிப்பாக கலந்து கொள்வார்! விடுப்பு பார்க்க நல்லதோர் சந்தர்ப்பம்! தவற விடாதீர்கள!
மாயா
பல்லிக்கு சகுனம் சரியில்லையாம். போகாதே போகாதே என் தலைவா , பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்?
போவதாக இருந்தால் போட்டோ குடுத்துட்டும் போங்கோ. தலைக்கு நடக்கிறது போல உண்டு / இல்லை என்று தேசத்தில் எங்களால அடிபட ஏலாது. புதினம் புழுதி கிளப்புது தலைவர் துரோகியெண்டு. அவங்கள் கொடுத்த பட்டங்களை அவங்களுக்கே பட்டமாக கொடுத்து புலிப்படை பட்டையை கிளப்புகினம். நடக்கட்டும்….
பார்த்திபன்
பல்லி,
பிரைச்சினையில்லை, பாதுகாப்பிற்காக சிறியையும், மாயாவையும் கூட அழைத்துச் செல்லலாம் தானே….
santhanam
அவர் முறையாக…….. மாட்டுபட்டுவிட்டார் ………… விழிபிதுங்குகிறார் ஐ.தே.க படுகிள்ளாடிகள் உதயன் பத்திரிகைக்கும் பாதுகாப்பு யாழ் பத்திரிகை சுதந்திரத்தை மறைமுகமாகஅழித்தவர்களிற்கு இராணுவபாதுகாப்பு வேடிக்கையாக இல்லையா
msri
பல்லி!
பார்த்திபன் சொல்லுறமாதிரி> என்ரை பாதுகாப்பை நம்பவேண்டாம்! மகிந்தாவை இன்னொரு பிரபா என எழுதுற என்னோடை நீர் வர> ஆரும் தலையாட்டி விட்டால்> வேலுப்பிள்ளையருக்கு நடந்ததுதான் எங்களுக்கும் நடக்கும்! வயது போன நேரத்திலை ஏன் இந்த வில்லத்தனம்! மகிநதாவிற்கு வேலுப்பிள்ளையரும்> மனைவியும்தான்> இப்ப பிரதான எதிரிகள்!