பல்கலைக் கழகங்களுக்கு 2009ஆம் ஆண்டில் மாணவர்களை அனுமதிப்பதற்கான க. பொ. த. உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் நாளை வியாழக்கிழமை வெளியிடப்படும்.
இவ்வருடம் 20 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும். அத்துடன் சகல பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டுக்கான பாடவிதானங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசி ரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.