யாழ்.தேர்தல் பணிகளுக்கு டக்ளஸ் தலைமை: வவுனியா நகர சபைக்கு ரிஷாத் பொறுப்பு

susil1111.jpgயாழ்ப் பாண மாநகர சபைத் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குழுவொன்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

1976ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் யாழ். மேயராகத் தெரிவானார். 33 வருடங்களின் பின் மீண்டும் எமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராகத் தெரிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபைக்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு அநுராதபுரம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் சிலரும் இந்தக் குழுவில் அடங்குவர்.

வவுனியா நகரசபைக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன், சுமதிபால அடங்களான குழு நியமிக்கப்பட்டுள்ளன. இரு உள்ளூராட்சி சபைகளிலும் சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, டெலோ, ஈரோஸ். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அடங்கிய குழு போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் யாழ், வவுனியா மக்களின் கருத்து மிக முக்கியமாகும்.

வவுனியாவில் இயல்பு நிலை காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கும் நாம் விஜயம் செய்தோம். அங்கு ஆசிரியர் பற்றாக்குறை எதுவும் கிடையாது. தொண்டர் ஆசிரியர்களுக்கு தேர்தலின் பின்னர் நியமனம் வழங்க உள்ளோம். ஏ-9 வீதியினூடாக லொறிகளில் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதால் அங்கு பொருட்களின் விலைகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களாகக் கிடைக்காத கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் வடபகுதி மக்களுக்குத் தற்பொழுது கிடைத்து வருகிறது. அந்த மக்கள் அதிகாரப் பகிர்வு குறித்து எதுவும் கோரவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *