ஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகர சபை என்பனவற்றுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 27, 28ம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மூன்று தேர்தல்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்கவென 33,000 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விண்ணப்பங்களில் தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்றவர்களை தெரிவு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றது.