கிழக்கில் ஆயுதக் குழுக்களை நிராயுத பாணிகளாக்கும் நடவடிக்கைகளைப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய காத்தான்குடி பகுதியிலுள்ள குழுக்கள் தமது ஆயுதங்களை நேற்று கையளித்ததாக கிழக்குப் பிரா ந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எடிசன் குணதிலக தெரிவித்தார். ஒப்படைக்காத குழுக்களை முற்றுகையிட்டு ஆயுதங்கள் பறிக்கப்படுமென்றும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவென நேற்றுப் பிற்பகல் மூன்று மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனையடு த்து, ரி 56 துப்பாக்கிள், ‘ஷொட்கன், ‘கல்கட்டாஸ்’ துப் பாக்கிகள் போன்றவற்றை பொலிஸார் சேகரித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோரைத் தேடி நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு மேலும் அவகாசம் வழங்கப்படமாட்டாதென்றும் கிழக்கு டி.ஐ.ஜி. தெரிவித்தார். இதேநேரம், ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குழுக்கள் ஆயுதங்களை ஒப் படைப்பதற்கு வேறு திகதிகள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக காத்தான்குடியில் ஆயுதக் களைவு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர் குணதிலக, கிழக்கில் ஆயுதக் குழுக்களை நிராயுத பாணிகளாக்கும் நடவடிக்கை அடுத்து வரும் தினங்களில் தீவிரப்படுத்தப்படுமென்றும் தெரிவித்தார். கிழக்கில் முதன் முதலாக ரி.எம்.வி.பீ. அமைப்பினர் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆயுதங்களைப் படையினரிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.