யாழ்தேவி இன்ரசிற்றி ரயிலில் தீ- பயணிகளுக்கு சேதமில்லை சாலியபுர பகுதியில் சம்பவம்

train_.jpgகொழும்பி லிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற யாழ் தேவி இன்ரசிற்றி ரயிலில் சாலியபுரம் பதியில் தீப்பற்றியதாகவும் எனினும் பயணிகளுக்கு உயிர்ச்சேதமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தாண்டிக்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ரயில் அனுராதபுரத்தைக் கடந்து சாலியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 10.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலில் இணைக்கப்பட்டிருந்த உணவு வண்டியில் பயன்படுத்தப்பட்ட காஸ் சிலிண்டர் வெடித்ததனால் தீவிபத்து ஏற்பட்டதாகவும், உணவு வண்டியும், முதலாம் வகுப்புப் பெட்டியும் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும், பயணிகளுக்கு சேதமில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் உணவு வண்டியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி உடனடியாகத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *