டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் தொகை 163 ஆக அதிகரித்திருப்பதுடன், இதுவரை 14,635 பேர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருப்பதாக நேற்று சனிக்கிழமை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. டெங்கு நுளம்பு உருவாகும் இடங்களை சோதனையிடும் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது.
10 மாவட்டங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கு சுகாதார அமைச்சு 10 அதிகாரிகளை நியமித்துள்ளது. 10 மாவட்டங்களில் 68 இடங்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படும் இடங்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிவில் பாதுகாப்பு குழுக்களை கிராம அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதி களிலுள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் டெங்கு கட்டுப்பாட்டு செயல் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கல்வியறிவூட்டுதல், சிரமதான நடவடிக்கைகள், பரிசோதனைகள், அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதோர் மீது சட்ட நடவடிக்கை என்பன இந்த டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது