பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் மத்தியூ மான்ட்கோர்ட் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். 24 வயதான அவரது சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அதற்கான காரணம் தெரிய வரும். பாரிசில் உள்ள அவரது காதலியின் அடுக்குமாடி குடியிருப்பில் அவர் பிணமாக கிடந்ததாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
உலக தரவரிசையில் 199 ஆவது இடம் வகித்த மார்ன்ட் கோர்ட், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் 2 ஆவது சுற்று வரை வந்தார். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவருக்கு 5 வார காலம் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை கடந்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்தது.
இந்த நிலையில் அவரது மரணம் ரசிகர்களை மட்டுமின்றி, பிரா ன்ஸ் நாட்டு டென்னிஸ் சங்கத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 4 முறை பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால், மான்ட் கோர்ட்டுக்கு எதிராக விளையாடி இருக்கிறார்.
நடால் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “மத்தியூ எனது நண்பர். அவர் இறந்த தகவலைக் கேட்டு இன்னும் என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அந்தத் தகவலை என்னால் நம்பவே முடியவில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.