வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

kamal.jpgவன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தமது கடமைகளைப் பொறுப்பேற்றதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசுரியவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு விஜயம் செய்த மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பிரிகேடியர் சுதந்த ரணசிங்க வரவேற்றார். அங்கு நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தமது அலுவலகத்துக்குச் சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றதுடன் முதல் ஆவணத்திலும் கையொப்பமிட்டார். இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கமல் குணரத்ன வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின்போது களமுனையிலிருந்து சிறந்த சேவைகளை வழங்கி வந்தார். இராணுவத்தினர் நந்திக் கடல் களப்பு வரை முன்னேறிச் சென்று மேற்கொண்ட கள நடவடிக்கைகளுக்கு இவர் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *