ஏ9 வீதியூடாக கொழும்பு – யாழ்ப்பாணம் பஸ் சேவையை நடத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் அனுமதி கேட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களின் கோரிக்கை தொடர்பாக ஏ9 வீதியூடாக போக்குவரத்து செய்ய பாதுகாப்பு தரப்பினர் அனுமதி கிடைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
ஏ9 பாதையூடாகச் செல்வதற்கு கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் இவர்களுக்கு ஏ9 பாதையூடாகச் செல்ல பாதை அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.