மாணவி மீது வல்லுறவு ஒருவருக்கு விளக்கமறியல்

images000.jpgபாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இருபிள்ளைகளின் தந்தையை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. குருவிட்ட புஸ்தல்ல மகாவித்தியாலயத்தில் 8 ஆம் தரத்தில் கல்விகற்கும் 13 வயதான இம்மாணவி பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் அருகிலுள்ள நீர் நிலையொன்றுக்கருகில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு வல்லுறவுக் குட்படுத்தப்பட்டதாக மாணவியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரத்தினபுரி பட்டுகெதர பகுதியில் மறைந்திருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் உத்தரவிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *