கனகராயன்குளம் பொலிஸ் நிலையத் திறப்பு விழா

புளியங்குளம் ஏ-9 பிரதான வீதியின் கனகராயன்குளம் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் ஆகியன எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளையும் கொண்ட இந்த பொலிஸ் நிலையம் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள இந்த வைபவத்தில் பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்ன மற்றும் அரசியல் முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *